search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்றிதழ்
    X

    3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்றிதழ்

    • கூடுதல் நிதி உட்பட பல்வேறு சலுகைகள் மத்திய அரசு வழங்கும்
    • அனைத்து கோணங்களிலும் ஆராய்வார்கள்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் மத்திய அரசு சுகாதார துறை சார்பில் அரசு தேசிய தரச்சான்றிதழ் வழங்கி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருகிறது.

    இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த பட்டியல் மத்திய சுகாதார துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன் பின்னர் தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டு குழுவினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 அல்லது 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது, அங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, வசதிகள், தினசரி நிகழும் பிரச வங்கள் எண்ணிக்கை, வெளி நோயாளிகள் எத்தனை பேர் வரு கின்றனர்.

    மருத்துவமனையில் போதுமான செவிலியர்கள் பணியில் உள்ளனரா? உட்பட அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்வார்கள்.

    பின்னர் இது தொடர்பாக அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் மதிப்பெண் அடிப் படையில் தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்படும். இதனால், கூடுதல் நிதி உட்பட பல்வேறு சலுகைகள் மத்திய அரசு வழங்கும்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜமுனாபுதூர், ராம நாயக் நடந்தது.

    தேசிய நல கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதுப் பேட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு தேசிய தரச் சான்றிதழ் பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் கலந்துகொண்டு தேசிய தரச் சான்றிதழ்களை பெற்றனர்.

    Next Story
    ×