search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Penalty for vehicles"

    • ரூ.41 லட்சம் வசூல்
    • போக்குவரத்து அதிகாரி தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.பி. காளியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.பி.காளியப்பன்

    தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.விஜயகுமார் மற்றும் போக்குவரத்து துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, 2,390 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது இதில் 551 வாகனத்திற்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதன் அபராத தொகையாக ரூ.41,16,800 வசூலிக்கப்பட்டது.

    மேலும், 295 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு, இணக்க கட்டணமாக ரூ.35,99,900 நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், அதிக பாரம் ஏற்றி சென்ற சரக்கு வாகனங்கள் 43, ஆட்டோ 58, பள்ளி வாகனங்கள் 17 சிறப்பு தணிக்கை செய்து சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. தலைக்கவசம் இல்லாத வாகனங் கள், காப்பீடு இல்லாத வாகனங்கள், தகுதி சான்று இல்லாத வாகனங்கள் மற்றும் அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள்

    சிறப்பு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
    • ரூ.75,400 அபராத கட்டணம் வசூல்

    ஜோலார்பேட்டை:

    புதிய நடைமுறையின்படி 'ஹெல்மெட் அணியாமல் மோட் டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு அபராத தொகை ரூ.100 லிருந்து ரூ.1,000 ஆகவும், சிக்னலை மதிக்காமல் வாகனங்களில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000, காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.100-லிருந்து ரூ.1,000 என அபராத கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஜோலார்பேட்டையில் உள்ள ஜங்ஷன் பஸ் நிறுத்த பகுதி யில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீ சார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் இருத்தல், செல்போன் பேசிய படி வாகன ஓட்டுதல் உள்ளிட்ட 88 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய்ப்பட்டு ரூபாய் 75,400 அபராத கட்டணம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

    ×