search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதியை மீறிய 295 வாகனங்களுக்கு அபராதம்
    X

    விதியை மீறிய 295 வாகனங்களுக்கு அபராதம்

    • ரூ.41 லட்சம் வசூல்
    • போக்குவரத்து அதிகாரி தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.பி. காளியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.பி.காளியப்பன்

    தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.விஜயகுமார் மற்றும் போக்குவரத்து துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, 2,390 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது இதில் 551 வாகனத்திற்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதன் அபராத தொகையாக ரூ.41,16,800 வசூலிக்கப்பட்டது.

    மேலும், 295 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு, இணக்க கட்டணமாக ரூ.35,99,900 நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், அதிக பாரம் ஏற்றி சென்ற சரக்கு வாகனங்கள் 43, ஆட்டோ 58, பள்ளி வாகனங்கள் 17 சிறப்பு தணிக்கை செய்து சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. தலைக்கவசம் இல்லாத வாகனங் கள், காப்பீடு இல்லாத வாகனங்கள், தகுதி சான்று இல்லாத வாகனங்கள் மற்றும் அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள்

    சிறப்பு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×