search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intensive testing"

    • சுதந்திர தின விழா முன்னிட்டு நடவடிக்கை
    • போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

    ஜோலார்பேட்டை:

    நாடு முழுவதும் நாளை 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    குறிப்பாக பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரெயில் நிலயங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தனியார் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    அத்துடன் நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி, உஷாராணி உள்ளிட்ட ரெயில்வே போலீசார் நேற்று முதல் ரெயில் நிலையங்களில் உள்ள அனைத்து பிளாட்பாரங்கள், தண்டவாளங்கள் பயணிகளின் இருக்கைகள், உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இன்று (4 ந்தேதி) முதல் வருகிற 6 ந்தேதி வரை தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
    • பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.

    கடலூர்:

    பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. இதனை யொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருதாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய தளங்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று (4 ந்தேதி) முதல் வருகிற 6 ந்தேதி வரை தீவிர சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . 

    இப்பணியில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லியோ மற்றும் பீட் ஆகிய மோப்ப நாய்களுடன் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருவதோடு, வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் அந்தந்த ெரயில் நிலையங்களில் ெரயில்வே போலீசார் வெடிகுண்டு கருவிகள் கொண்டு ெரயில் பயணிகள் மற்றும் ெரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.

    ×