என் மலர்
திருநெல்வேலி
- நெல்லை மாநகரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடந்தது.
- பெரும்பாலான இடங்களில் சிலர் தங்களது வீடுகளிலும் தொழுகை நடத்தினர்.
நெல்லை:
தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டா டப்பட்டது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான இந்நாளில் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரில் நூற்றுக்கணக்கான இடங்களில் சிறப்பு தொழுகை நடை பெற்றது. மாநகரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடந்தது.
மேலப்பாளையம்
மாவட்டத்தில் திசையன்விளை, ஆத்தங்கரை பள்ளிவாசல், களக்காடு, ஏர்வாடி, பத்தமடை, பேட்டை உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பள்ளிவாசல்களிலும், திறந்தவெளி திடல்களிலும் நடந்த தொழுகையில் சிறுவர்-சிறுமியர்கள் உள்பட குடும்பத்தினருடன் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
நெல்லை மேலப்பாளையம் விரிவாக்க பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசல் சார்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மதினா பள்ளி திடலில் நடைபெற்றது. பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி பெருநாள் உரையாற்றினார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பக்ரீத் வாழ்த்து செய்தி கூறினார். அப்போது அவர், தியாகத்தை போற்றிடும், போதித்திடும் இந்த நாளில் ஒடுக்கபட்ட மக்களின் வாழ்வு உயர்ந்திட நாட்டு மக்களுக்கு எதிரான சக்திகளை வீழ்த்த சபதமேற்போம் என்றார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கனி, செய்தி தொடர்பாளர் பக்கீர் முகமது லெப்பை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்துல் வகாப் எம்.எல்.ஏ.
மேலப்பாளையம் ஜின்னாதிடலில் நடைபெற்ற தொழுகையில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். நெல்லை டவுன் முகம்மது அலி தெரு, எம்.என்.பி பள்ளிவாசல், ஜாமியா பள்ளிவாசல், வி.மா. பள்ளிவாசல், நயினார்குளம் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
டவுன்-பேட்டை
டவுன் லாலுகாபுரத்தில் மாவட்ட பேச்சாளர் சித்திக் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் டவுன் ஜாபர் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை மேற்கு கிளை சார்பில் பேட்டை மஸ்ஜிதுர்ரஹீம் பள்ளிவாசல் அருகில் உள்ள திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் பாசித், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை மேற்கு கிளை தலைவர் சேக் அப்துல் காதர், செயலாளர் பீர் முஹம்மது, பொருளாளர் அகமது மீரான், துணைச்செயலாளர் அப்துல் ஹமீது, துணைச்செயலாளர் முஹம்மது கான், மருத்துவ அணி திப்புசுல்தான் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வாழ்த்துக்களை பரிமாறினர்
பெரும்பாலான இடங்களில் சிலர் தங்களது வீடுகளிலும் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
மேலும் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சியை குர்பானியாக வழங்கினர். பிரியாணி போன்ற உணவு பொட்டலங்களும் வழங்கினர். இதனையொட்டி பள்ளிவாசல்கள், திடல்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- கலைஞர் கூட்ட அரங்கத்தை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் குறிச்சி முக்கு அருகே நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மூத்த முன்னோடி குமார சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜ கண்ணப்பன் அலுவல கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கலைஞர் கூட்ட அரங்கத்தை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வரவேற்றார்.
இதில் மேயர் சரவணன், மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்கபாண்டியன், அருள்மணி, போர்வெல் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் அவைத்தலைவர் சுப சீதாராமன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அறங்கா வலர் குழு உறுப்பினர் வெயிலப்பன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், மாநரக பொருளாளர் பூக்கடை அண்ணா துரை, கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், நித்திய பாலையா, மாவட்ட பிரதி நிதி இசக்கி பாண்டி யன், இளைஞரணி ஆறுமுக ராஜா மற்றும் நிர்வாகிகள் வீரபாண்டியன், அலிப் மீரான், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ம.தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் ஆகியோர் மைதீன்கானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- கங்கைராஜிக்கும், தர்மராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.
- தர்மராஜ் உருட்டு கட்டையால் கங்கை ராஜை சரமாரியாக தாக்கி விட்டு ஓட்டம் பிடித்தார்.
நெல்லை:
தச்சநல்லூர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் கங்கைராஜ் (வயது 40), தொழிலாளி.
2 ஆண்டுகளுக்கு முன்னர் தசராவின் போது வீட்டு முற்றத்தில் தேர் நிற்க வைப்பது தொடர்பாக இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (48) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக அவர் களுக்குள் மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தர்மராஜ் உருட்டு கட்டையால் கங்கை ராஜை சரமாரியாக தாக்கி விட்டு ஓட்டம் பிடித்தார்.
இதில் படுகாயமடைந்த கங்கைராஜை அவரது உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான தர்மராஜை தேடி வருகின்றனர்.
- நெல்லை மாவட்டத்திலும் ஏராளமான தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டுள்ளது.
- உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் செல்வபாபு ஏற்பாட்டில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நெல்லை:
தமிழக அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் இன்று வெளியானது.
நெல்லை மாவட்டத்திலும் ஏராளமான தியேட்டர்களில் படம் திரை யிடப்பட்டுள்ளது. டவுனில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்க்க வந்த பொது மக்கள், ரசிகர்களுக்கு தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் செல்வபாபு ஏற்பாட்டில் மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாளை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல்வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வக்கீல் தினேஷ், தகவல் தொழில் நுட்ப அணி காசிமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- தங்களிடம் இருப்பதைக் கொண்டு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை குறுநாடகம் மூலம் மாணவர்கள் நடித்துக் காட்டினர்
- நம்மை நாமே மகிழ்வுடன் வைத்திருக்க பழக வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறினர்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. 9-ம் வகுப்பு மாணவர்கள் காலை வழிபாடு நடத்தினர். சிறப்பு நிகழ்ச்சியாக மாணவர்கள் தங்களிடம் இருப்பதைக் கொண்டு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை குறுநாடகம் மூலம் நடித்துக் காட்டினர். வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மகிழ்ச்சி என்பது வெளியில் இருந்து கிடைப்பதல்ல. நாமே எல்லாவற்றையும் நேர்மறையான சிந்தனையுடன் எதிர்கொண்டு நம்மை நாமே மகிழ்வுடன் வைத்திருக்க பழக வேண்டும் என்று கூறினர்.
மேலும் பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் பேசும் போது, மகிழ்ச்சி என்பது பிறரிடம் இருந்து கிடைப்பதல்ல நமக்கு வரும் சூழல்களை நாமே எளிதாக எதிர்கொண்டு நம் உள்ளத்தை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொண்டு பிறரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
- இல்லாதோருக்கு இயன்றதை கொடுங்கள் என்பதை வலியுறுத்தும் தியாகத் திருநாளாக பக்ரீத் அமைகிறது.
- அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள். எளியவர்களிடம் கருணை காட்டுங்கள்,
நெல்லை:
தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
இல்லாதோருக்கு இயன்றதை கொடுங்கள் என்பதை வலியுறுத்தும் தியாகத் திருநாளாக பக்ரீத் அமைகிறது. இன்று, உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றேன்.
பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து, அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள். துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள். எளியவர்களிடம் கருணை காட்டுங்கள், சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்கிற நபிகள் நாயகத்தின் போதனைகளை இன்றைய நாளில் நினைவுகூர்வதில் நானும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
- கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பக்ரீத் பண்டிகை சிறப்பு குறித்து பேசினார்.
- விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வள்ளியூர்:
வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்லூரி நிறுவன தலைவர் டி.டி.என்.லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவில் தமிழ்த்துறை உதவி பேராசிரியை லலிதா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பக்ரீத் பண்டிகையின் சிறப்பு குறித்து மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி ஹபீபா பேகம் நன்றி கூறினார்.
- கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ்காரரின் வீட்டிலேயே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தேவர்குளம் வடக்கு பூலாங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, (வயது 52). விவசாயி.
இவர் காவல்துறையில் பணியாற்றும் தனது மகனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். திருமண செலவுகளுக்காக ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை பீரோவில் வைத்திருந்தார்.
நேற்று காலை அவர் தனது குடும்பத்தினருடன், பெண் பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கத்தில் இருந்த சுவரில் 2 செங்கலை பெயர்த்தெடுத்து உள்ளே சென்று ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மாலையில் குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பிய முத்துப்பாண்டி வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதையும், பின்பக்க சுவர் உடைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சிடைந்தார்.
மேலும் மகனின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1 லட்சம் கொள்ளை போனதை அறிந்து அவர் மனமுடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர்.
மேலும், கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தேவர்குளம் போலீசார் கூறுகையில், "மர்ம நபர்கள் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து பின்பக்க சுவரில் செங்கலை உடைத்துள்ளனர். அதன் வழியாக வீட்டிற்குள் நுழைந்து ரூ.1 லட்சம் திருடி தப்பியுள்ளனர். கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறோம்."என்றனர்.
போலீஸ்காரரின் வீட்டிலேயே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா பா.ஜ.க.வின் 9 ஆண்டு ஆட்சி காலத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
- சிறு தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் முத்ரா கடன் வழங்கப்பட்டதன் மூலம் 76 லட்சம் பேர் புதிய வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் மத்திய இணை மந்திரி வி.கே. சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
கடந்த 2014-ல் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தது. ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இந்த 9 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் புதியதாக கொண்டு வரப்பட்டுள்ளது.
கன்னியாகுமாரியில் புதிய விமான நிலையம் அமைப்பதில் தொழில்நுட்ப பிரச்சனைகள் இருக்கிறது. அது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். காரைக்குடியிலும் விமான நிலைய அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், மதுரை விமான நிலைய விரிவாக்கம் போன்றவை நடந்து வருகிறது.
இந்தியா பொருளாதார வளர்ச்சி, அரசியல் மேம்பாடு மற்றும் சமுதாய மேம்பாட்டில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. 2014-ல் இருந்ததைவிட இந்தியா கடந்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா பா.ஜ.க.வின் 9 ஆண்டு ஆட்சி காலத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த 2015-ல் 428 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலை மாறி இந்த 9 ஆண்டுகளில் 86 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளது. புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. டிஜிட்டல் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியை எட்டி வருகிறது.
80 கோடி பேருக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ விதம் கொரோனா காலத்தில் இருந்து தற்போது வரை தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வேலை வாய்ப்பு வழங்குவதை விளம்பரப்படுத்துவ தில்லை. 4 சதவீதம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்க முடியும். மீதம் உள்ள நபர்களுக்கு தனியார் மூலமாக வேலை வாய்ப்புகள் வழங்க முடியும்.
ஒரு வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தோம். ஆனால் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறு தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் முத்ரா கடன் வழங்கப்பட்டதன் மூலம் 76 லட்சம் பேர் புதிய வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட கூடுதல் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு மட்டுமே நிதி ஒதுக்குகிறது. பணிகள் முழுவதும் மாநில அரசால் செய்யப்படுகிறது. இந்த பணிகளில் தவறு மற்றும் குறைபாடு இருந்தால் மத்திய அரசு அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்.
தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் அமைப்புகளாக கூடி கழிவுகள் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு முயற்சித்தால் மட்டும் தாமிரபரணி நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்க முடியாது, பொதுமக்களும் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் தயா சங்கர் உடன் இருந்தார்.
- ஞானதிரவியம் எம்.பி., லே செயலாளர் ஜெயசிங் உட்பட 32 பேரும் முன்ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
- முன்ஜாமீன் மனு விசாரணை 30-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சீனிவாசன் அறிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை சி.எஸ்.ஐ. திருச்சபையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணி நியமனம், தாளாளர் மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
இதனால் திருச்சபையில் பேராயர் பர்னபாஸ் தலைமையிலும், லே செயலாளர் ஜெயசிங் தலைமையிலும் நிர்வாகிகள் 2 அணியினராக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஒரு தரப்பினர் பாளை ஐகிரவுண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள டயோசீசன் அலுவலகத்தில் சில அறைகளை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர்.
இதனால் பணிகள் முடங்கி கிடப்பதாகவும், அதனை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக பாளை இட்டேரியை சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபுள் டயோசீசன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினர். இதுதொடர்பாக அவர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் இரவு திருச்சபையில் குழப்பம் விளைவிப்பதாக கூறி நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், லே செயலாளர் ஜெயசிங், பொருளாளர் மனோகர், வக்கீல் ஜான் உள்பட 13 பேர் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 20 பேர் என மொத்தம் 33 பேர் மீது பாளை போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜான் கைது செய்யப்பட்டார். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஞானதிரவியம் எம்.பி., லே செயலாளர் ஜெயசிங் உட்பட 32 பேரும் முன்ஜாமீன் கோரி நேற்று நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த முன்ஜாமீன் மனு விசாரணை 30-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சீனிவாசன் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, பிஷப் பர்னபாஸ் உத்தரவின்பேரில் ஜான்ஸ் பள்ளி தாளாளராக இருந்த ஞானதிரவியம் எம்.பி. கடந்த வாரம் நீக்கப்பட்டு, வக்கீல் அருள்மாணிக்கம் புதிய தாளாளராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்க சென்றபோது அங்குள்ள அலுவலகத்திற்குள் புகுந்து ஞானதிரவியம் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டதாக அருள்மாணிக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அந்த மனுவில், என்னை ஞானதிரவியம் எம்.பி., வக்கீல் ஜான், லே செயலாளர் ஜெயசிங் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 10 பேர் ஜான்ஸ் பள்ளி அலுவலகத்திற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் எனது அலுவலகத்தில் இருந்த பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவேடு, பணம் வரவு-செலவு புத்தகம் ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டனர். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், மனு ரசீது வழங்கினர். தொடர்ந்து ஞானதிரவியம் எம்.பி., அவரது ஆதரவாளர்கள் மீது புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை டயோசீசன் அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் அறைகளை திறக்குமாறு பேராயர் பர்னபாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் எதிர்தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க அங்கு வரலாம் என்று கூறப்படுகிறது. எனவே அங்கு முன்எச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மாவட்ட பூமாலை வணிக வளாகம் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டது.
- இந்த வளாகத்தில் சுய உதவிக் குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட உள்ளனர்.
நெல்லை:
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள மகளிர் பல்வேறு விதமான உற்பத்தி சார்ந்த பொரு ளாதார செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் மகளிரின் வாழ்வாதா ரத்தினை முன்னேற்றம் அடைய செய்திடும் விதமா கவும், மாவட்ட அளவில் பூமாலை வணிக வளா கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்காக மாவட்ட ங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும் என அரசு அறிவித்தது. தொடர்ந்து நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் அமையப் பெற்றுள்ள மாவட்ட பூமாலை வணிக வளாகம் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து மேம்படுத்தப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதனை இன்று தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட பூமாலை வளாகத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
இந்த வளாகத்தில் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சுய உதவிக் குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சி மற்றும் சந்தைப்படுத்திட உள்ளனர்.
12 கடைகள்
புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தில் பனை ஓலை பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள், பனங்கருப்பட்டி, கருவாடு வகைகள், பாக்கு மட்டைகள், ஆயத்த ஆடைகள், பத்தமடை பாய் பொருள்கள் மற்றும் பேன்சி பொருட்கள் என மொத்தம் 12 கடைகள் அமைக்கப்பட்டு விற்ப னைக்காக பொரு ட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடை யப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
- ராகுல்காந்தி பிரதமராக வேண்டி அவரது பெயரில் அர்ச்சனை நடைபெற்றது.
நெல்லை:
இட்டமொழி முத்தா ரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
ராகுல்காந்தி பெயரில் அர்ச்சனை
முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப் பட்டது. தொடர்ந்து வருகிற 2024-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வேண்டி அவரது பெயரில் அர்ச்சனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கோவில் அன்னதானத்தில் கலந்து கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்ல பாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்போர்டு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், மூலைக்கரைப்பட்டி நகர தலைவர் முத்து கிருஷ்ணன், நெல்லை பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் முத்துராஜா, முன்னாள் வட்டார தலைவர் ஞான் ராஜ், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சித்திரை வேல், வெள்ளைச்சாமி, வடிவேல், சிதம்பரம், தாமோதரன், ராஜன், லிங்க பாண்டி, சுந்தரபாண்டி, கோபால், வெள்ளைதுரை, சுயம்பு, வெற்றிவேல், கணேசன், சுடலை, சந்திரசேகர், முனியாண்டி, சின்னதுரை, இட்டமொழி காங்கிரஸ் கமிட்டி நிர்வா கிகள், கோவில் கமிட்டி நிர்வாகி கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.






