என் மலர்
திருநெல்வேலி
- போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிரபு உள்பட 12 பேர் கும்பலை கைது செய்தனர்.
- கடந்த சில ஆண்டுகளாக ஜெகன் தரப்பினருக்கும், பிரபு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.
நெல்லை:
பாளை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன்(வயது 34). இவர் நெல்லை மாவட்ட பா.ஜனதா இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த மாதம் 30-ந்தேதி இரவு மூளிக்குளத்தில் வைத்து ஜெகனை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மூளிக்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் முன்விரோதத்தில் கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிரபு உள்பட 12 பேர் கும்பலை கைது செய்தனர்.
இந்நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர கமிஷனருமான(பொறுப்பு) பிரவேஷ்குமார், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜெகன் தரப்பினருக்கும், பிரபு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளனர்.
அதே நேரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாளை போலீஸ் இன்ஸ்பெக்டராக காசிபாண்டியன் பொறுப்பேற்ற நிலையில், அவருக்கும், உதவி கமிஷனர் பிரதீப்புக்கும் இந்த பிரச்சினை தொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதுதொடர்பாக கொலை நடந்த அன்று காலை தான் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் விசாரணை நடத்தியதாகவும், அதற்கு முன்பாகவே முறையாக விசாரணை நடத்தியிருந்தால் கொலையை தடுத்திருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் குற்றம் நடைபெறும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதனை தடுக்க தவறிவிட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
- ஆகாஷ் சந்திரன் பாளை மார்க்கெட் வழியாக வந்த போது எதிர்பாராதவிதமாக அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மீது கார் உரசி உள்ளது.
- இதில் அந்த வழியாக நடந்து சென்ற பூமிநாதன் ,கலாமணி , விஜயாமற்றும் ஒரு சித்த மருத்துவர் என 4 பேர் காயமடைந்தனர்.
நெல்லை:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் சந்திரன் (வயது 49). இவர் நெல்லையில் உள்ள மத்திய கலால் துறையில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அவர் சந்திப்பு பகுதிக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டி ருந்தார். அவர் பாளை மார்க்கெட் வழியாக வந்த போது எதிர்பாராத விதமாக அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மீது கார் உரசி உள்ளது.
இதனால் காரை ஆகாஷ் சந்திரன் திருப்பியுள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் வாகனம் மீது மோதி அதன் அருகில் நின்று கொண்டி ருந்த கொண்டிருந்தவர்கள் மீதும் கார் மோதியது.
அதன் பின்னர் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியபடி நின்றது. இதில் அந்த வழி யாக நடந்து சென்ற பாளை கிருஷ்ணன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த பூமிநாதன் (64), மாநகராட்சி தூய்மை பணியாளர்களான அம்பேத்கர் காலனியை சேர்ந்த கலாமணி (49), திருமலை தெரு விஜயா (38) மற்றும் ஒரு சித்த மருத்துவர் என 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேரணியை பாளை போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
- சைக்கிள் பேரணி நெல்லை அரசு மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவிலிருந்து ஆரம்பித்து அண்ணா விளையாட்டு திடல், தனியார் மருத்துவ மனை வழியாக மீண்டும் அரசு மருத்துவமனை வந்தடைந்தது.
நெல்லை:
கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை தேசிய கண்தான இரு வார விழா கொண்டாடப்படு கிறது.
அதன்படி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவ சிகிச்சைப் பிரிவு சார்பில் கண்தான விழிப்பு ணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை பாளை போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
மருத்துவமனை கண்கா ணிப்பாளர் பால சுப்ர மணியம், துணை முதல்வர் சுரேஷ் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் ராமலட்சுமி வரவேற்று பேசினார்.
பேரணியில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவ- மாணவிகள் சென்றனர். பேரணியில் மருத்துவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் துணை மருத்துவக் கண்கா ணிப்பாளர் ஆறுமுகம், கண் சிகிச்சை பிரிவு இணை பேராசிரியர் ஆனந்தி, டாக்டர் ரீட்டா, உதவி மருத்துவர்கள் உமா, கவிதா மற்றும் செவிலியர்கள், முதுநிலை கண் மருத்துவப் பயிற்சி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கண் சிகிச்சை பிரிவு துறைத் தலைவர் ராமலெட்சுமி பேசியபோது, இந்த ஆண்டு 38-வது தேசிய கண் தான விழிப்புணர்வு விழாவாகும். கண் தானத்தில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதற்கு உறுப்பு தானத்திற்கு தமிழக அரசு அளித்து வரும் ஊக்கமும் முக்கிய காரணமாகும். மேலும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு எல்லோ ருக்கும் போய் சேரும் வகையில் இந்த கண்தான இரு வார விழாவை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், துயர்நிலை ஆலோ சகர் மற்றும் உடல் உறுப்புதான மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கி ணைப்பாளர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சைக்கிள் பேரணி நெல்லை அரசு மருத்துவ மனையின் கண் சிகிச்சை பிரிவிலிருந்து ஆரம்பித்து அண்ணா விளையாட்டு திடல், தனியார் மருத்துவ மனை வழியாக மீண்டும் அரசு மருத்துவமனை வந்த டைந்தது. முடிவில் செவிலி யர் பயிற்றுநர் செல்வன் நன்றி கூறினார்.
- விநாயகர் சதுர்த்தியையொட்டி பாளை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகள்உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.
- கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.
நெல்லை:
நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி(திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது.
நெல்லை
தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் வீடுகளிலும், பொதுவான சில இடங்களிலும் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். பின்னர் அவை மக்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
நெல்லை மாவட்டத்திலும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டா டப்படும்.
பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்கள், வீடுகள் மற்றும் கோவில்களில் ஆயிரக்கணக்கில் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பாளை சமாதானபுரம், கிருபா நகர், மார்க்கெட் பகுதிகள், சீவப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது. அங்கு ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் சுமார் 15-க்கும் மேற்பட்ட வடமாநிலத்த வர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து சிலைகள் தயாரித்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு 3 அடி உயரம் முதல் 9 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறைந்தபட்சமாக விநாயகர் சிலை ரூ.100 முதலும், அதிகபட்சமாக பெரிய சிலைகள் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படு கின்றன. கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.
பல்வேறு வடிவங்கள்
அங்கு சிவன், பார்வதியுடன் கூடிய விநாயகர், லெட்சுமி விநாயகர், ராஜ விநாயகர், 3 முகம் கொண்ட விநாயகர், நந்தி விநாயகர், சிவன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்க ளிலும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணர்- ராதை, வெற்றி விநாயகர், எலி மற்றும் புலியின் மேல் அமர்ந்திருக்கம் விநாயகர், ராஜ விநாயகர், சுயம்பு விநாயகர் என பல வடிவங்களில் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக தயார் செய்யப்படும் சிலைகள் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
- பாலகணேஷ் நெல்லையில் ரெயில் என்ஜின் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
- நேற்று இரவு சுத்தமல்லி விலக்கில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய அவர் சுத்தமல்லி போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
நெல்லை:
நெல்லை அருகே சுத்தமல்லி யாதவர் மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பாலகணேஷ் (வயது 32). இவர் நெல்லையில் ரெயில் என்ஜின் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு சுத்தமல்லி விலக்கில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய அவர் சுத்தமல்லி போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்ததில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலக தென்னை தின விழிப்புணர்வு முகாம் கருங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
- கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் தென்னை மரத்தின் உற்பத்தி குறித்து சிறப்புரை ஆற்றினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் வட்டார வேளாண்மை துறையின் மூலம் உலக தென்னை தின விழிப்புணர்வு முகாம் கருங்குளம் கிராமத்தில் நடைபெற்றது. கருங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் ருக்கு சத்யா தலைமை தாங்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஆமினி தென்னை மரத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
தேங்காய் உற்பத்தியை அதிகப்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டிற்கு இனகவர்சி பொறியின் பயன்பாடு, நீர் மேலாண்மை, வறட்சி காலத்தில் தென்னையில் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடு, ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலுக்கு கண்ணாடி இறக்கை பூச்சி ஒட்டுண்ணியின் பயன்பாடு, உர மேலாண்மை, தென்னை நுண்ணூட்ட உரம், தென்னை மரக்கன்று சாகுபடி, தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் உற்பத்தி, தென்னையில் ஊடுபயிர் சாகுபடி ஆகியவற்றை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் தென்னை மரத்தின் உற்பத்தி குறித்து சிறப்புரை ஆற்றினார். முகாம் ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் திரிசூலம் ஏற்பாடு செய்திருந்தார்.
- நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
- கடந்த மே மாதத்திற்கு பிறகு சுமார் 4 மாதங்கள் ஆகியும் இதுவரை 100 நாள் வேலை திட்ட தொழிலா ளர்களுக்கான சம்பளத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று மனுவில் கூறியுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத் திற்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
மானூர் யூனியன் பல்லிக் கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளமடை கிராம மக்கள், மாவீரன் சுந்தரலிங்க னார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்பபாண்டி யன் தலைமையில் திரண்டு வந்தனர்.
திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக வளா கத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
தொடர்ந்து மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஊர் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது:-
பல்லிக்கோட்டை பஞ்சா யத்துக்குட்பட்ட பள்ளமடை கிராமத்தில் வசிக்கும் பெண்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலையின் மூலமாக பிழைப்பு நடத்து கின்றனர். இந்நிலையில் இந்த கிராம மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படு வதில்லை. அதிகபட்சம் 40 நாட்கள் வரை மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதிலும் சம்பளமும் முறை யாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை.
கடந்த மே மாதத்திற்கு பிறகு சுமார் 4 மாதங்கள் ஆகியும் இதுவரை 100 நாள் வேலை திட்ட தொழிலா ளர்களுக்கான சம்பளத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
இது தொடர்பாக மானூர் யூனியன் அதிகாரிகளிடம் கேட்டாலும் முறையாக பதிலளிக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைக்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
- வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு, நாங்குநேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து இந்த நடைபயணம் தொடங்குகிறது.
- நாங்குநேரியில் தொடங்கும் இந்த நடை பயணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில் உள்ள காந்தி சிலை அருகில் நிறைவு பெறுகிறது.
நெல்லை:
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கடந்த 2022-ம் ஆண்டு, இந்திய ஒற்றுமை யாத்திரையை குமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டார்.
இம்மாதம் 7-ந் தேதி, அந்த நடைபயணம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது.
இதையொட்டி, நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக விழிப்புணர்வு பிரசார இயக்கமும், நடை பயணமும் மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் கேட்டுக்கொண்டனர்.
இதையொட்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில், மாபெரும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு, நாங்குநேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து இந்த நடைபயணம் தொடங்குகிறது.
நாங்குநேரியில் தொடங்கும் இந்த நடை பயணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில் உள்ள காந்தி சிலை அருகில் நிறைவு பெறுகிறது.
தொடர்ந்து, இரவு 8 மணிக்கு, அங்கு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைமை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ராகுல்காந்தி எம்.பி. கடந்த ஆண்டு மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரையின் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, அந்த வெற்றி யாத்திரை தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், மத்திய பாரதீய ஜனதா அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்கும் வகையிலும் விழிப்புணர்வு பிரசார இயக்க நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம்.
நாங்குநேரியில் தொடங்கி களக்காடு காந்தி சிலை முன்பு நிறைவு பெறும் இந்த நடைபயணத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள இருக்கி றார்கள்.
இவ்வாறு ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. கூறினார்.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 5 ஆயிரம் பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 77 பவர் டில்லர்களை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இருந்து வந்த ஒரு பெண் திடீரென தனது கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
உடனே அருகில் இருந்த விவசாயி ஒருவர் அந்த கேனை பிடுங்கினார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின்னர் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் பாளை மனக்கவாவலம்பிள்ளை நகர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 40) என்பது தெரியவந்தது.
இவர் அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு வாங்கியிருந்ததாகவும், அவர்கள் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், எனவே தான் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
- அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.25 அடியாக இருக்கிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 56.25 அடியாக இருந்த நிலையில், தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று மேலும் 3 அடி உயர்ந்தது.
இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 59.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 69.75 அடியாக இருந்த நிலையில் மேலும் 11 அடி அதிகரித்து இன்று காலை 81.03 அடியானது. அணைகளுக்கு வினாடிக்கு 2,874 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மாநகர பகுதியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதியை பொறுத்தவரை அம்பையில் அதிகபட்சமாக 8 மில்லிமீட்டர் மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
கன்னடியன் கால்வாய் பகுதியில் 8.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவியில் 3 மில்லிமீட்டரும், களக்காட்டில் 4.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாஞ்சோலையில் கனமழை பெய்தது. கடந்த 4 நாட்களாக ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி எஸ்டேட்டுகளில் பெய்து வரும் கனமழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.
நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 62 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினாரில் அதிகபட்சமாக 25 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 18.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 46.60 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 30.74 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் நேற்று 21 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 23.25 அடியாக உள்ளது.
அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.25 அடியாக இருக்கிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்றில் இருந்து 3 அடி உயர்ந்து 55 அடியாக அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தென்காசி, கடையம், பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் தொடங்கி சாரல் மழை பெய்து வருகிறது.
- கடந்த 30-ந்தேதி மூளிக்குளம் பகுதியில் வைத்து ஜெகனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
- தனிப்படை போலீசார், பிரபுவை தீவிரமாக தேடி வந்தனர்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளம் விரல்மீண்ட நாயனார் தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 34). பா.ஜனதா மாநகர இளைஞரணி செயலாளர். திருமணம் ஆகாதவர்.
கடந்த 30-ந்தேதி மூளிக்குளம் பகுதியில் வைத்து ஜெகனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கர், சந்துரு, மாரிச்செல்வம், பாளையங்கோட்டையை சேர்ந்த அனீஸ், அஜித்குமார், ராஜாகுடியிருப்பு விக்கி என்ற விக்னேஷ்வரன், வி.எம்.சத்திரம் வசந்த், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த இசக்கிமுத்து, திம்மராஜபுரம் மாணிக்கராஜா, தச்சநல்லூர் முத்துபாண்டி ஆகிய 10 பேரை கைது செய்தனர். நேற்று காலையில் வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டையை சேர்ந்த பரமராஜ் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக மூளிக்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பிரபுவை கைது செய்யக்கோரி ஜெகனின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார், பிரபுவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் பிரபு (46) சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் தி.மு.க. பிரமுகர் பிரபு சிறையில் அடைக்கப்பட்டார்.
- தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார்.
- புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரும்பூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி பஞ்சாயத்து தேர்தலில் 7-வது வார்டில் போட்டியிட்ட நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 48) என்ப வர் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ராஜேஷ் பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார்.
இதற்கிடையே நாலு மாவடியை சேர்ந்த அழகேசன் என்பவர், பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜேசுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு கிளையில் 2021-ம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜேஷ் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனு சத்திய பிரமாண பத்திரத்தில் கொலை வழக்கில் அவர் அனுபவித்த 7 ஆண்டு சிறை தண்டனையை மறைத்து 2 ஆண்டு சிறை தண்டனை என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு தேர்தலில் முறைகேடாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் ராஜேசின் வார்டு உறுப்பினர் பதவியையும், துணைத் தலைவர் பதவியையும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ராஜேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்த சுதாகரன் மனைவி அன்னலெட்சுமி (43). இவர் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி ஆடுகளுக்கு இலை பறிப்பதற்காக உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த ராஜேஷ் வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட குப்பை பையும், மதுபாட்டில்களும் அன்ன லெட்சுமி மீது விழுந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட அவருக்கு, ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ்-அப்பில் அன்னலெட்சுமியை அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






