search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே  மோட்டார் சைக்கிள் விபத்தில் ரெயில் என்ஜின் டிரைவர் பலி
    X

    பாலகணேஷ்

    நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ரெயில் என்ஜின் டிரைவர் பலி

    • பாலகணேஷ் நெல்லையில் ரெயில் என்ஜின் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
    • நேற்று இரவு சுத்தமல்லி விலக்கில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய அவர் சுத்தமல்லி போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    நெல்லை:

    நெல்லை அருகே சுத்தமல்லி யாதவர் மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பாலகணேஷ் (வயது 32). இவர் நெல்லையில் ரெயில் என்ஜின் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு சுத்தமல்லி விலக்கில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய அவர் சுத்தமல்லி போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்ததில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×