search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Industries Officer"

    • ஆகாஷ் சந்திரன் பாளை மார்க்கெட் வழியாக வந்த போது எதிர்பாராதவிதமாக அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மீது கார் உரசி உள்ளது.
    • இதில் அந்த வழியாக நடந்து சென்ற பூமிநாதன் ,கலாமணி , விஜயாமற்றும் ஒரு சித்த மருத்துவர் என 4 பேர் காயமடைந்தனர்.

    நெல்லை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் சந்திரன் (வயது 49). இவர் நெல்லையில் உள்ள மத்திய கலால் துறையில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை அவர் சந்திப்பு பகுதிக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டி ருந்தார். அவர் பாளை மார்க்கெட் வழியாக வந்த போது எதிர்பாராத விதமாக அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மீது கார் உரசி உள்ளது.

    இதனால் காரை ஆகாஷ் சந்திரன் திருப்பியுள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் வாகனம் மீது மோதி அதன் அருகில் நின்று கொண்டி ருந்த கொண்டிருந்தவர்கள் மீதும் கார் மோதியது.

    அதன் பின்னர் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியபடி நின்றது. இதில் அந்த வழி யாக நடந்து சென்ற பாளை கிருஷ்ணன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த பூமிநாதன் (64), மாநகராட்சி தூய்மை பணியாளர்களான அம்பேத்கர் காலனியை சேர்ந்த கலாமணி (49), திருமலை தெரு விஜயா (38) மற்றும் ஒரு சித்த மருத்துவர் என 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×