என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • திருச்சியில் இருந்து செல்லும் பயணிகள் அரிய வகை உயிரினங்களை கடத்தி செல்கின்றனர்.
    • சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் உடமைகளை தவிர்த்து செல்ல விரும்பினால் பயணம் செய்யலாம் என தெரிவித்தனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் உடமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உள்பட பல பொருட்களை கடத்தி வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

    இதே போல் திருச்சியில் இருந்து செல்லும் பயணிகளும் அரிய வகை உயிரினங்களை கடத்தி செல்கின்றனர்.

    அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்வதற்காக நேற்று காலை ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 14 பயணிகள் உரிய அனுமதியின்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.

    இதே போல் இன்றும் 17 பயணிகள் சிக்கினர். அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் உடமைகளை தவிர்த்து செல்ல விரும்பினால் பயணம் செய்யலாம் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 5 பயணிகள் மட்டும் விமானத்தில் பயணம் செய்தனர். மீதமுள்ள 12 பயணிகளும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    நேற்று 14 பயணிகளும் இன்று காலை 12 பயணிகளும் என மொத்தம் 26 பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விமான நிலையத்தின் கார் நிறுத்தும் இடங்களில் தேவையற்ற வாகனங்கள் ஏதேனும் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    திருச்சி:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.

    விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் சோதனை முதல் விமான பயணிகளின் உடைமைகள் வரை அனைத்தும் பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் பெட்டிகளும் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

    மேலும் விமான நிலையத்தின் கார் நிறுத்தும் இடங்களில் தேவையற்ற வாகனங்கள் ஏதேனும் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர பயணிகள் எவரேனும் சந்தேகப்படும் வகையில் விமான நிலைய பகுதிக்குள் நுழைந்திருந்தால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    • 2 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 4 பேர் திடீரென ராமராஜை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.
    • தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    திருச்சி

    பெரம்பலூர் மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகே திருநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் ராமராஜ் (வயது 26). மீன் வியாபாரியான இவர் திருச்சி உறையூர் காசிவிளங்கி மீன் மார்க்கெட்டில் வாரந்தோறும் மீன் வாங்க வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் தனது மீன் கடையில் வேலை பார்க்கும் 3 பேருடன் காரில் பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு வந்தார்.

    உறையூர் காசி விளங்கி மீன் மார்க்கெட்டுக்கு சென்று மீன் வாங்கிக்கொண்டு, அவற்றை காரில் ஏற்ற வந்தபோது, அதிகாலை 4.15 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 4 பேர் திடீரென ராமராஜை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    ராமராஜ் மீது பெரம்பலூர் மாவட்டம் டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே செங்குட்டுவேல் என்பவரை கொலை செய்ததாக வழக்கு உள்ளது.

    செங்குட்டுவேலின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து ராமராஜை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 4 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ராமராஜை கொலை செய்ய வந்த நபர்கள் அவர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கியபோது, அவரை கண்காணித்து, மார்க்கெட்டில் இருந்து வெளியே வரும் வரை காத்திருந்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து மீன் மார்க்கெட் கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும், இந்த கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பெரம்பலூருக்கு விரைந்தனர். அங்கு போலீசார் முகாமிட்டு விசாரணையை துரிதபடுத்தி உள்ளனர்.

    • திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் பெரியார் சிலை அருகே வந்தபோது பின்னால் செங்கல் லோடு ஏற்றி வந்த லாரிமோதியது.
    • மேலும் உடல் சிதறியதில் அவரது இதயம் சாலையின் நடுவே விழுந்து திரைப்படத்தில் வரும் காட்சி போல் அவரது இதயம் துடித்தது

    திருவெறும்பூர்

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் வடிவேல் (40) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பணி முடிந்து இரவு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

    திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் பெரியார் சிலை அருகே வந்தபோது பின்னால் செங்கல் லோடு ஏற்றி வந்த லாரிமோதியது.

    இதில் வடிவேல் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். லாரியின் சக்கரம் வடிவேல் மீது ஏறி இறங்கியது. இதில் வடிவேல் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடல் சிதறியதில் அவரது இதயம் சாலையின் நடுவே விழுந்து திரைப்படத்தில் வரும் காட்சி போல் அவரது இதயம் துடித்தது. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த மணி என்பவரது மகன் மகேந்திரன் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.
    • ஆனால் இது குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்படுவதில்லை.

    கே.கே.நகர்

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. பயணிகள் பல்வேறு புதிய முறைகளில் தங்கத்தை மறைத்து எடுத்து வருவதும், அதனை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது.

    இவ்வாறு கொண்டுவரப்படும் தங்கத்தினை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வந்தது. இதனை சுங்கத் துறை அதிகாரிகள் கிலோ கணக்கில் தினம் தோறும் பறிமுதல் செய்து வந்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட தொகை, தங்கத்தின் அளவு மற்றும் தங்கம் மறைத்து கொண்டுவரப்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்து சுங்கத்துறையினரால் வெளியிடப்பட்டு வந்தது. இதனால் அதிக அளவில் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து வரும் தகவல் பொதுமக்களிடையே பரபரப்பானது.

    இதையடுத்து இந்த தகவல்களை இனி வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே வெளியிட உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரிய வருகிறது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் தங்கம் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்பட்டு வருகிறது.

    திருச்சி விமான நிலையத்தில் மட்டும் விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பல்வேறு விமானங்களில் வந்த 25 பயணிகளைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

    இதில் சுமார் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது ஆனால் இது குறித்த தகவல் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கபப்ட்டுள்ளது ஏன என்று பயணிகளூக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மேலும் தினம்தோறும் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையில் சுமார் 5 முதல் 10 பயணிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

    ஆனால் இது குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்படுவதில்லை. இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது திருச்சி விமான நிலையத்தில் தற்போது அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருதாக தகவல்கள் வெளியாவதால் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பயணிகள் மேலும் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    ஆனால் விவரம் வெளியிடாமல் இருந்தால் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். இதனால் பயணிகள் தங்கம் கடத்தலுக்கு உறுதுணையாக அதிகாரிகள் செயல்பட்டு விடுவார்களோ என ஐயம் ஏற்படுவதாக பயணிகள் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது சுகாதார மையம் அமைக்கப்பட்டு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
    • இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர்.

    கே.கே.நகர

    திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது சுகாதார மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக சுப்பிரமணியபுரம் மற்றும் விமான நிலையம் பகுதியில் சுகாதார மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தினை பல்வேறு பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் .ஆனால் இந்த மையங்களில் இரவு நேரங்களில் சுமார் 11 மணிக்கு மேல் செல்லும் நோயாளிகள் பயன்பெற முடியாத நிலை இருந்து வருகிறது. இரவு 11 மணிக்கு மேல் இந்த மையங்களுக்கு செல்லும் நோயாளிகள் உடனடியாக திருச்சி பொது மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு, அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் மிகவும் ஆபத்தான நிலையில் செல்லும் நோயாளிகளுக்கு எந்தவித முதலுதவியும் பெற முடியாத நிலை இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருச்சி மாநகரின் தற்போது அதிக வளர்ச்சி பெறும் பகுதியான 63 மற்றும் 64வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் அருகில் எந்தவித சுகாதார மையமோ அல்லது பொது மருத்துவமனையோ இல்லாத காரணத்தினால் அவசர சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக முதியவர்களும், குழந்தைகளும் முதலுதவி சிகிச்சை கூட செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளை நாடிச்செல்லும் நிலை இருந்து வருகிறது. ஏற்கனவே இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சுந்தர் நகர் பகுதியில் பொது சுகாதார மையம் இயங்கி வந்தது பல்வேறு காரணங்களால் அந்த மையமானது மூடப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். இரவு நேரங்களில் மேற்கண்ட பகுதியில் வாகன வசதி ஏதும் இன்றி சிக்கி தவிக்கும் நோயாளிகள் உடனடியாக மருத்துவ உதவி பெறுவதற்கு புது சுகாதார மையம் அமைக்கப்பட்டால் பெரும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் குறிப்பாக கே.சாத்தனூர், வடுகபட்டி மற்றும் ஓலையூர் உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் மக்கள் பயன்படுத்தும் வகையில் இப்பகுதியில் பொது சுகாதார மையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது.
    • இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருச்சி

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.

    விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் சோதனை முதல் விமான பயணிகளின் உடைமைகள் வரை அனைத்தும் பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் பெட்டிகளும் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

    மேலும் விமான நிலையத்தின் கார் நிறுத்தும் இடங்களில் தேவையற்ற வாகனங்கள் ஏதேனும் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர பயணிகள் எவரேனும் சந்தேகப்படும் வகையில் விமான நிலைய பகுதிக்குள் நுழைந்திருந்தால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது .

    • உள்ளே சென்று பார்த்த பொழுது மாரியம்மன் சிலையில் இருந்த இரண்டு மாங்கல்யங்கள் களவு போனது தெரிய வந்தது
    • இருப்பினும் நேற்று சந்திர கிரகணம் நடைபெற்றதால் மக்கள் நடமாற்றம் குறைவாக காணப்பட்டது

    உப்பிலியபுரம்

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தெற்கு விசுவாம்பாள் சமுத்திரம் கோவில்களில் பூட்டுகள் உடைக்கப்பட்டு துணிகர கொள்ளை நடைபெற்று உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரத்தில் பிரதான சாலையில் அமைந்துள்ளது மகா மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் நேற்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு வழக்கமான பூஜைகளை முன்னதாகவே முடித்துவிட்டு கோயில் பூசாரி செல்வராஜ் மாலை 6 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு சென்று உள்ளார்.

    இன்று அதிகாலை சந்திர கிரகண பரிகார பூஜைகளை செய்வதற்காக வந்தவர் கோயிலின் கேட்டில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டும் உள்பிரகாரத்தில் உள்ள மாரியம்மன் அர்த்த மண்டப கதவுகள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த பொழுது மாரியம்மன் சிலையில் இருந்த இரண்டு மாங்கல்யங்கள் களவு போனது தெரிய வந்தது இதனையடுத்து உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

     

    இதேபோல் தெற்கு விஸ்வாம்பாள்சமுத்திரம் பிரதான சாலையில் உள்ள விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று அன்னாபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    சந்திரகிரகணத்தை முன்னிட்டு வழக்கத்திற்கு முன்னதாகவே மாலை அன்னாபிஷேக பூஜைகள் முடிவடைந்ததன் பெயரில் கோயில் குருக்கள் கார்த்திக் கோவில் கதவுகளை மூடி பூட்டிவிட்டு சென்று உள்ளார்.

    இன்று காலை சந்திரகிரகண பரிகார பூஜைகளை செய்வதற்காக கோவிலுக்கு வந்தவர் அம்மன் கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு விசாலாட்சி அம்மன் சிலையில் இருந்த மாங்கல்யம் திருடு போயிருந்தது கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தார்.

     

    தகவலின் பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் செபாஸ்டின், சந்தியாகு பாலமுருகன், மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு கோவில்களிலும் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் களவு போன, சிவன் கோயிலில் ஒரு திருமாங்கல்யம், மாரியம்மன் கோவிலில் இரண்டு திருமாங்கல்யம் என கோவில் தங்க நகைகளின் மதிப்பு இரண்டு லட்சம் இருக்கும் என்பது தெரிய வந்தது.

    2 கோவில்களும் அமைந்துள்ள இடம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இருப்பினும் நேற்று சந்திர கிரகணம் நடைபெற்றதால் மக்கள் நடமாற்றம் குறைவாக காணப்பட்டது. இதனை கொள்ளையர்கள் சாதகமாக பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • இவரது வீட்டில் பட்டாசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் சென்றது
    • புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    துறையூர்

    திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (45). இவரது வீட்டில் பட்டாசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி தனி படையினர் ராஜாவின் வீட்டை நேற்று இரவு அதிரடியாக சோதனையிட்டனர். சோதனையில் அரசின் உரிய அனுமதி இன்றி சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பட்டாசு பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பட்டாசை பறிமுதல் செய்த எஸ்.பி தனிப்படையினர், துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தனர். புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் நகரத்தில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பட்டாசு பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
    • கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா கோட்டை போலீஸ் புகார் கொடுத்தார்

    திருச்சி ஒயமரி சுடுகாடு தில்லைநாயகம் படித்துறை அருகில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    அவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா கோட்டை போலீஸ் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்வது இறந்துபோன ஆண் நபர் யார் என்பது குறித்து இவர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்போது எதிர்பாராத விதமாக பஸ் ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது.
    • இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கண்ணாடியை உடைத்து அனைவரையும் மீட்டனர்.

    ராம்ஜிநகர்

    செங்கல்பட்டில் இருந்து மதுரைக்கு உறவினர் வீட்டு புதுமனை புகு விழாவிற்கு சொகுசு வேனில் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் சென்றனர். வேன் திருச்சி மதுரை சாலை மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பச்சை திருப்பினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பஸ் ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் இடுப்பாடுகளின் சிக்கிய பேருந்தில் பயணம் செய்த அனைவரும் கூச்சலிட்டனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கண்ணாடியை உடைத்து அனைவரையும் மீட்டனர்.

    இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வேன் கவிழ்ந்ததால் திருச்சி மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் கவிழ்ந்த வேன் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரானது. வேன் கவிழ்ந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதிரி தேர்வானது ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும்.
    • போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்

    திருச்சி

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4 (டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4) போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. மாதிரி தேர்வானது ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும்.

    6 மற்றும் 7-ம் வகுப்பு தமிழ் பழைய மற்றும் புதிய பாட பகுதியில் இருந்து வினாக்கள் இடம் பெறும். தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

    மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு, ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதில் அளிக்க வேண்டும். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

    ×