search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Bomb Blast"

    • குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தனர்.
    • ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான ஜான் யொகோவாவின் சாட்சிகள் சபையில் 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் களமச்சேரியில் நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பெண்கள் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

    அவர்களில் 12 வயது சிறுமி உள்பட மேலும் 3 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொச்சி பகுதியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டு வெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய டொமினிக் மார்ட்டினை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அதில் யெகோவாவின் சாட்சிகள் சிறிஸ்தவ சபையின் நடவடிக்கை பிடிக்காததால், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அந்த அமைப்பு நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதும், டொமினிக் மார்ட்டின் மட்டுமே குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இந்தநிலையில் இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தனர். அவர்களில் தொடுபுழா அருகே உள்ள கொடிகுளம் வண்டமட்டத்தை சேர்ந்த ஜான் (வயது76) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான இவர், யொகோவாவின் சாட்சிகள் சபையில் 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில் தான், களமச்சேரி குண்டு வெடிப்பில் சிக்கினார். 55 சதவீதம் தீக்காயம் அடைந்திருந்த அவர், ராஜகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். ஜான் இறந்ததை தொடர்ந்து, களமச்சேரி குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    • டொமினிக் மார்ட்டினை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
    • டொமினிக் மார்ட்டின் வீடு, குண்டு வெடிப்பு நடந்த இடம் உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள், 12 வயது சிறுமி என 4 பேர் பலியாகினர்.

    இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

    தீவிர விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின், கடந்த 31-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்டார். குண்டு வெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    மேலும் டொமினிக் மார்ட்டினை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து அவரிடம் கடந்த 6-ந்தேதி முதல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் குண்டு வெடிப்பை தான் மட்டுமே நிகழ்த்தியதாகவும், வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்ற கருத்தையே தொடர்ந்து கூறி வருகிறார்.

    இருந்தபோதிலும் போலீசார் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவரது வீடு, குண்டு வெடிப்பு நடந்த இடம் உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர்.

    டொமினிக் மார்ட்டின் வெளிநாட்டில் பல ஆண்டுகள் இருந்திருப்பதால் அவருக்கு குண்டுவெடிப்பு சதியை நிறைவேற்ற வெளிநாட்டை சேர்ந்த யாரும் உதவினார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆனால் யொகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த சபையை பழிவாங்குவதற்காகவே வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததாகவும், அவர்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிகிறது.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியடி உள்ளனர். டொமினிக் மார்ட்டினின் போலீஸ் காவல் வருகிற 15-ந்தேதி முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஆயுதப்படை முகாம் அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த யொகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன.

    இந்த குண்டு வெடிப்பில் 3 பெண்கள், 12 வயது சிறுமி என 4 பேர் பலியாகினர். இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடிமருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

    கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின், கடந்த 31-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

    குண்டுவெடிப்பு சதியில், தான் ஒருவர் மட்டும் தான் ஈடுபட்டதாக டொமினிக் மார்ட்டின் கூறியிருந்தாலும், வேறு சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆகவே டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டொமினிக் மார்ட்டினின் வெளிநாட்டு தொடர்பு பற்றியும், கொச்சியில் அவர் வசித்துவந்த வீடு, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம், வெடிகுண்டுகள் தயாரிக்க வெடிபொருட்கள் வாங்கிய கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவதற்காக அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

    அதற்காக எர்ணாகுளம் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் டொமினிக் மார்ட்டினை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து டொமினிக் மார்ட்டினை களமச்சேரி ஆயுதப்படை முகாமுக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

    அவரிடம் போலீஸ் அதிகாரி சசிதரன் தலைமையிலான விசாரணை குழுவினர் உடனடியாக விசாரணையை தொடங்கினர். அவர்கள் இன்று 2-வது நாளாக டொமினிக் மார்ட்டினிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டொமினிக் மார்ட்டின் தனது முதல் முயற்சியிலேயே குண்டுவெடிப்பு சதித்திட்டத்தை நிறைவேற்றி இருப்பதால் அதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே போலீசார் தொடர்ந்து கருதி வருகின்றனர்.

    மேலும் அவர் வெளிநாட்டில் அதிக நாட்கள் இருந்திருப்பதால், குண்டு வெடிப்பை நிகழ்த்த வெளிநாட்டை சேர்ந்த யாராவது அவருக்கு உதவி செய்தார்களா? என்று போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் காவலிலும் அதுபற்றி அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளில், தனது கணவருக்கு ஒரு போன் வந்தபிறகு, அவர் பரபரப்புடன் காணப்பட்டதாக டொமினிக் மார்ட்டினின் மனைவி ஏற்கனவே போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

    அதுபற்றியும் டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வெளிநாட்டை சேர்ந்த யாரிடம் இருந்தாவது அவர் நிதியுதவி பெற்றாரா? குண்டுவெடிப்பை நிகழ்த்துவது எப்படி? என்பதை அறிந்துகொள்ள வேறு வெளிநாடுகளுக்கு எங்கும் சென்றாரா? என்றும் அவரிடம் விசாரித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டபோது அவர் கூறிய தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அதில் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த மேலும் பல தகவல்களை போலீசாரிடம் டொமினிக் மார்ட்டின் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அவரிடம் ஆயுதப்படை முகாம் அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டொமினிக் மார்ட்டினை அவரது வீடு, குண்டு வெடிப்பு நடந்த இடம் உள்ளிட்ட இடங்களுக்கு நாளை அழைத்துச்சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 

    • டொமினிக் மார்ட்டினை அவரது வீடு, வெடிபொருட்கள் வாங்கிய இடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் அழைத்துச்சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    • டொமினிக் மார்ட்டினின் செல்போனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த 29-ந்தேதி குண்டுகள் வெடித்தன.

    இந்த குண்டு வெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ்(வயது45), இடுக்கி மாவட்டம் தொடு புழா பகுதியை சேர்ந்த குமாரி(53), லிபினா என்ற 12 வயது சிறுமி ஆகிய 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் குண்டுவெடிப்பு நடந்த சிறிது நேரத்திலேயே, குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கூறி கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். மேலும் அவர் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையின் முன்னாள் ஊழியர் என்பதும், அந்த சபையின் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிலிருந்து வெளியே வந்து விட்டதும், அவர்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் திட்டமிட்டு வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து டொமினிக் மார்ட்டினை போலீசார் கைது செய்தனர். அவர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடி மருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அதில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்த சதித் திட்டத்தை நிறைவேற்றியது தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

    இந்த குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் தான் மட்டுமே சதித்திட்டதில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் தனது செல்போனில் இருந்த குண்டுவெடிப்பை நிகழ்த்திய வீடியோ ஆதாரங்களையும் அவர் காண்பித்தார்.

    மேலும் டொமினிக் மார்ட்டினை அவரது வீடு, வெடிபொருட்கள் வாங்கிய இடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் அழைத்துச்சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்களுக்கு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான பல்வேறு தடயங்கள் கிடைத்தன.

    விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    குண்டுவெடிப்பு சதியில், தான் ஒருவர் மட்டும் தான் ஈடுபட்டதாக டொமினிக் மார்ட்டின் கூறியிருந்தாலும், வேறு சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்றே என்.ஐ.ஏ. அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் அது தொடர்பான தங்களது விசாரணையில் தொடர்ந்து வருகின்றனர்.

    வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தபிறகு டொமினிக் மார்ட்டினுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர். யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையில் இருந்து நீக்கப்பட்டவர்கள், சபையில் இருந்து வெளியேறியவர்கள், அதிருப்தியாளர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை சேகரிக்கின்றனர்.

    அவர்களில் டொமினிக் மார்ட்டினுடன் தொடர்பில் யாரேனும் இருந்தார்களா? என்று கண்டறியும் பணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டொமினிக் மார்ட்டினுடன் அடிக்கடி செல்போனில் பேசியவர்கள், சமூக வலைதளங்களில் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.

    இதற்காக டொமினிக் மார்ட்டினின் செல்போனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். அதில் அவருடன் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுடன் பேசிய விவரங்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • தனது மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக பல கடைகளில் பொருட்களை பிரித்து வாங்கி சென்றிருக்கிறார்.
    • குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 16 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த 29-ந்தேதி குண்டுகள் வெடித்தன.

    இந்த குண்டுவெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ்(வயது45), இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த குமாரி(53), லிபினா என்ற 12 வயது சிறுமி ஆகிய 3 பேர் பலியாகினர். கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் குண்டு வெடிப்பு நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே, குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக கூறி கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். மேலும் அவர் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையில் ஊழியராக பணிபுரிந்ததாகவும், அந்த சபையின் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிலிருந்து வெளியே வந்து விட்டதாகவும், அந்த சபையினர் தங்களின் செயல்பாட்டை நிறுத்தாததால், அவர்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் திட்டமிட்டு வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்ததாகவும் அவர் கூறினார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடிமருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

    அப்போது வெடிகுண்டுகளை தயாரித்தது எப்படி? அதற்கான மூலப்பொருட்களை எங்கே வாங்கினார்?, வெடிகுண்டுகளை திட்டமிட்டு வெடிக்கச் செய்தது எப்படி? உள்ளிட்டவைகள் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிவித்தார். மேலும் குண்டுவெடிப்பு சதியை நிறைவேற்றியது தொடர்பாக தனது செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோ காட்சிகளையும் காண்பித்தார்.

    அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதற்காக டொமினிக் அந்தோணியை அவரது வீடு, குண்டுவெடிப்பு நடந்த மையம், குண்டுகள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கிய இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்ய டொமினிக் மார்ட்டின் ரிமோட் கண்ட்ரோலையே பயன்படுத்தி உள்ளார். வெடிகுண்டுகளை தனது வீட்டு மாடியில் வைத்தே யாருக்கும் தெரியாமல் தயாரித்திருக்கிறார்.

    அதற்கான 4 ரிமோட் மற்றும் வயர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் மூலப்பொருட்களை, எர்ணாகுளம் பகுதியில் உள்ள கடைகளில் வாங்கியிருக்கிறார். அப்போது அவர் குழந்தைகளுக்கு பொம்மை தயாரிப்பதற்கு தேவை என்று கூறி எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கியுள்ளார்.

    தனது மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக பல கடைகளில் பொருட்களை பிரித்து வாங்கி சென்றிருக்கிறார். அதேபோன்று பெட்ரோலையும் பல பங்க்களுக்கு சென்று வாங்கியுள்ளார். அதனை வைத்து வெடிகுண்டுகளை தயாரித்து பையில் வைத்து வீட்டிலிருந்து வெளியே எடுத்துச்சென்று குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்.

    பின்பு லாட்ஜில் அறை எடுத்து குண்டுவெடிப்பு சம்பவத்தை நிறைவேற்றியதாக வெளியிட்ட வீடியோவை அங்கு வைத்து எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். அதன்பிறகே போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்திருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. டொமினிக் மார்ட்டினின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட சில தடயங்கள் கிடைத்தன.

    விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டினை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 16 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக டொமினிக் மார்ட்டின் கொச்சி பகுதியில் 50 பட்டாசுகள் மற்றும் 8 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவைகளை வாங்கி இருக்கிறார்.
    • குண்டுவெடிப்பு நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் டொமினிக் மார்ட்டினின் மாமியார் கலந்து கொண்டிருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் நேற்று முன்தினம் நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் பலியாகினர். குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய கொச்சியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் போலீசில் சரண் அடைந்தார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 29 மணி நேரம் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அதில் குண்டு வெடிப்பு சதி திட்டத்திற்கு திட்டமிட்டது, அதன் செயல்படுத்தியது, குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிபொருட்களை வாங்கி தயாரித்தது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் விசாரணையில் டொமினிக் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து தீப்பிடித்து எரிந்த காட்சிகள் உள்ளிட்டவைகளையும் விசாரணையின்போது காண்பித்துள்ளார். விசாரணையின்போது தெரிவித்த தகவல்கள் மற்றும் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குண்டு வெடிப்பு சதியை நிறைவேற்றியது டொமினிக் மார்ட்டின் என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்தனர்.

    வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக அவர் கொச்சி பகுதியில் 50 பட்டாசுகள் மற்றும் 8 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவைகளை வாங்கி இருக்கிறார். மேலும் யூடிப்பை பார்த்து சிம்பிள் சர்க்கியூட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்ய ரிமோட் தயார் செய்திருக்கிறார்.

    அந்த ரிமோட்டை பயன்படுத்தியே வெடி குண்டுகளை வெடிக்கச் செய்திருக்கிறார். ரிமோட்டை பயன்படுத்தி குண்டுகளை வெடிக்கச் செய்த வீடியோவையும் டொமினிக் மார்ட்டின் தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அதனையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    குண்டுவெடிப்பு நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் டொமினிக் மார்ட்டினின் மாமியார் கலந்து கொண்டிருக்கிறார். அவர் பங்கேற்கும் தகவல் அறிந்த டொமினிக் மார்ட்டின், அவரை பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

    ஆனால் அவர் டொமினிக் மார்ட்டின் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அவரது மாமியார் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார். இருந்த போதிலும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்காமல் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கேரளாவின் மதச்சார்பற்ற நம்பிக்கையை கெடுக்க மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கொடிய விஷத்தை கக்குவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.

    திருவனந்தபுரம்:

    எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துக்கள் எதுவும் வெளியிடக்கூ டாது என்று அரசு எச்சரித்திருந்தது.

    களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் கேரள அரசு ஹமாசுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டிய மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், குண்டு வெடிப்புகளை மாநிலத்தின் அரசியலுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டார்.

    அவரது கருத்துக்கு கேரள அரசு மற்றும் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. கேரளாவின் மதச்சார்பற்ற நம்பிக்கையை கெடுக்க மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கொடிய விஷத்தை கக்குவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை பரப்பியதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது 153(கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல்), 153ஏ(பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மட்டுமின்றி இதே போன்று 18 பேர் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரார்த்தனையில் பங்கேற்றிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
    • டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து 29 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் ஜெபக்கூட்டம் கடந்த 27-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.

    கூட்டத்தின் 3-ம் நாளான நேற்று முன்தினம் நடந்தது. அதில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது மாநாட்டு மைய அரங்கில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் பிரார்த்தனை நடந்த மையத்தில் தீப்பிடித்து எரிந்தது.

    பிரார்த்தனையில் பங்கேற்றிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த குண்டு வெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ்(வயது45) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

    அவர்கள் களமச்சேரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த குமாரி(53) என்ற பெண்ணும், லிபினா என்ற 12 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனால் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.

    குண்டுவெடிப்பு நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே, குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கூறி கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். மேலும் அவர் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

    அவரிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையில் ஊழியராக பணிபுரிந்ததாகவும், அந்த சபையின் நடவடிக்கை பிடிக்காததால் அதிலிருந்து வெளியே வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

    மேலும் அந்த சபையின் செயல்பாட்டை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தும் அவர்கள் தங்களது நடவடிக்கையை தொடர்ந்ததால், அவர்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் திட்டமிட்டு வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்ததாகவும் அவர் கூறினார்.

    வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கான வெடிமருந்து உள்ளிட்ட மூலப்பொருட்களை கொச்சியில் பல இடங்களில் வாங்கியதாகவும், பின்பு யூ-டியூப்பை பார்த்து எலெக்ட்ரிக் டெட்டனெட்டர் தயாரிப்பை தெரிந்துகொண்டு வெடிகுண்டுகளை தனது வீட்டின் மாடியில் வைத்து தயாரித்ததாக தெரிவித்திருக்கிறார்.

    மேலும் தயாரித்த வெடிகுண்டுகளை நேற்றுமுன்தினம் காலை பிரார்த்தனை நடந்த இடத்திற்கு கொண்டு சென்று வைத்து, திட்டமிட்டபடி குண்டுகளை வெடிக்கச் செய்ததாக தெரிவித்திருக்கிறார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் டொமினிக் மார்ட்டினை கைது செய்தனர்.

    அவர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடிமருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் என்ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

    ஆனால், தான் மட்டுமே இந்த சதிச்செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் அவர் வெடிபொருட்கள் வாங்கிய இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து 29 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    டொமினிக் மார்ட்டின் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டொமினிக் மார்ட்டின் வெளிநாட்டில் அதிக நாட்கள் இருந்திருப்பதால், அவருடனான வெளிநாட்டு தொடர்ப்பு பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் யார் யாருடன் பழகி வந்தார்? வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு யாருடன் தொடர்பில் இருந்தார்? பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

    குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 21 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    அந்த 16 பேரில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • குண்டுகள் வெடித்து சிதறியதில் மாடன்விளையை சேர்ந்த அர்ஷித், ஹுசைன் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர்.
    • போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி என 3 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவற்கு முன் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் பெருமாத்தூரில் உள்ள மாடன்விளை பகுதியில் இருக்கும் வீடுகளின் மீது நேற்று இரவு 10.30 மணி அளவில் யாரோ மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை வீசினர்.

    அந்த குண்டுகள் வெடித்து சிதறியதில் மாடன்விளையை சேர்ந்த அர்ஷித், ஹுசைன் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதம் அடைந்தன. குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    அவர்கள் யார்? எதற்காக குண்டு வீச்சில் ஈடுபட்டனர்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

    உடுமலை:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் கிறிஸ்தவ கூட்டரங்கில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன் எதிரொலியாக கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லையான திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி அருகே உள்ள ஒன்பதாறு சோதனை சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களில் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்படும் சோதனையை பார்வையிட்டார். மேலும் உடுமலை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    அப்போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

    • டோமினிக் மார்ட்டின் கொச்சியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கி உள்ளார்.
    • ஜாம்ரா சர்வதேச அரங்கில் குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த வளாகத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகவேகமாக வெளியேறியது.

    கொச்சி:

    கேரள மாநிலம் கொச்சி அருகே ஜாம்ரா சர்வதேச மாநாட்டு அரங்கம் உள்ளது.

    அந்த மாநாட்டு அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் யெகோவாவின் சாட்சிகள் என்னும் கிறிஸ்தவ மத பிரிவின் 3 நாள் பிரார்த்தனை கூட்டம் நடந்து வந்தது.

    இறுதி நாளான நேற்று காலை பிரார்த்தனை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். மாநாட்டு அரங்குக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த நிலையில் வெளியிலும் சுமார் ஆயிரம் பேர் இருந்தனர். பிரார்த்தனை தொடங்கிய சிறிது நேரத்தில் அரங்கின் மையப்பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.

    அதில் ஏராளமானோர் காயமடைந்து அலறினார்கள். அடுத்த சில நிமிடங்களில் அரங்கின் இரு பக்கங்களிலும் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால் பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

    மாநாட்டு அரங்கில் குண்டு வெடித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒரு பெண் நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து இருந்தது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கேரள குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.

    அவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களை காப்பாற்ற கூடுதல் டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடத்தியது யார் என்பதை கண்டுபிடிக்க நிபுணர்களை கொண்ட போலீஸ் சிறப்பு குழுவை கேரள மாநில அரசு அமைத்துள்ளது. அவர்கள் விசாரணை தொடங்கிய நிலையில் டோமினிக் மார்ட்டின் என்பவர் தாமாக முன் வந்து போலீசில் சரணடைந்து உள்ளார்.

    கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் குண்டுகள் வைத்தது நான் தான் என்று அவர் பொறுப்பேற்று இருக்கிறார். போலீசாரிடம் நேற்று அவர் பரபரப்பு வாக்குமூலமும் அளித்து உள்ளார். அவரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே டோமினிக் மார்ட்டினிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சிறப்பு குழு அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் கொச்சியில் சில இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    டோமினிக் மார்ட்டின் கொச்சியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கி உள்ளார். அந்த இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணை முடிந்த நிலையில் என்.எஸ்.ஜி. அதிகாரிகள் இன்று டோமினிக் மார்ட்டினிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    கொச்சியில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அது பற்றிய தகவல்களை வெளியிட என்.ஐ.ஏ. அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    சரணடைந்த டோமினிக் மார்ட்டினுக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று விசாரணை குழுவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கிறிஸ்தவ ஜெப கூட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 2 பேரை கேரள போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் யார்? என்ற விவரத்தை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். அவர்கள் இருவரும் திருச்சூர் போலீஸ் அகாடமியில் பலத்த பாதுகாப்புடன் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    விசாரணை முடிந்த பிறகு இறுதி தகவல்களை வெளியிடுவோம் என்று கேரள மாநில போலீசார் அறிவித்துள்ளனர். இதனால் கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான மர்மம் நீடித்தபடி உள்ளது.

    ஜாம்ரா சர்வதேச அரங்கில் குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த வளாகத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகவேகமாக வெளியேறியது. அந்த காரில் சென்றவர்கள் யார் என்பது மர்மமாக உள்ளது. அவர்களுக்கும் குண்டு வெடிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அந்த நீல நிற காரின் பதிவு எண்ணை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த கார் எண் போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த நீல நிற கார் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

    அந்த காரில் தான் டிபன் பாக்சில் ஐஇடி வெடிகுண்டுகள் எடுத்துக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த வெடிகுண்டுகளை டோமினிக் மார்ட்டினிடம் கொடுத்த பிறகு காரில் வந்தவர்கள் வேகமாக தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் பினராயி விஜயன் கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    • கேரளா மாநில போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
    • தீவிர விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் அறிவுரை.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    சம்பவம் குறித்து கேரளா மாநில போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும், வேறு ஏதேனும் சதி திட்டம் உள்ளதா என்பது குறித்து, தீவிர விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் அறிவுரை வழங்கினார்.

    ×