search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு
    X

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு

    • மாதிரி தேர்வானது ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும்.
    • போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்

    திருச்சி

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4 (டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4) போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. மாதிரி தேர்வானது ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும்.

    6 மற்றும் 7-ம் வகுப்பு தமிழ் பழைய மற்றும் புதிய பாட பகுதியில் இருந்து வினாக்கள் இடம் பெறும். தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

    மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு, ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதில் அளிக்க வேண்டும். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×