என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட திருச்சி வாலிபர்கள் 7 பேருக்கு லைசென்ஸ் ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது
    • விளக்கம் அளிக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது

    திருச்சி,

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவிடை சிறுமருதூர் பகுதியில் தஞ்சாவூர் சீனிவாசபுரத்தை சேர்ந்த மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் பட்டாசுகளை வைத்து வெடித்து (வீலிங்) சாகசம் ெசய்தார்.

    அதற்கு திருச்சி புத்தூர் கல்லாங்காட்டை சேர்ந்த அஜய் (வயது 24) உடந்தையாக இருந்தார். சிலர் பட்டாசு வெடித்து சிதறக்கூடிய காட்சிகளை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பத விட்டனர்.

    இந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆனதை தொடர்ந்து திருச்சி பேலீசார், இது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை கண்காணித்து, விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்தனர்.

    இதில் லால்குடி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர், காணகிளியநல்லூர் போலீசார் கைது செய்த ஒரு நபர், திருச்சி சமயபுரம், திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீசார் கைது செய்த தலா ஒருவர் என மொத்தம் 7 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளது.

    இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க 7 நாட்கள் அவகாம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சரியான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இந்த நிலையில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளதாவது:-

    திருச்சி மாவட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு சாகசம் என்ற பெயரில் பிறரை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்று பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களது பைக்குகள் பறிமுதல் ெசய்யப்பட்டுள்ளது.பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்குகளை ஒட்டி அதனை வீடியோவாக பதிவிடும் நபர்களை கண்காணிக்க சிறப்பு வலைதள கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது போன்ற பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உறவினர் வாகனங்களுக்கு தீ வைத்த திருச்சி பெண் கைது செய்யப்பட்டார்
    • கணவர் 2-வது திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் வெறிச்செயல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜா. இவருக்கும் திருச்சி மாவட்டம், தாத்தையார்பேட்டையை சேர்ந்த நடேசன் மகள் கோகிலா (28) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கோகிலாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இரு வீட்டார்களும் பேசி விமல்ராஜாவையும் கோகிலாவையும் பிரித்து வைத்துள்ளனர். தற்போது விமல்ராஜா வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.

    விமல்ராஜா தன்னை பிரிந்ததற்கும், 2-வது திருமணம் செய்ததற்கும் அவரது அக்காள் கணவர் தனபால் (வயது 50) காரணம் என்று கோகிலா சந்தேகம் அடைந்தார். இதையடுத்து சம்பவத்தன்று ஈச்சம்பட்டியில் உள்ள தனபாலின் வீட்டிற்கு வந்த கோகிலா அவரது மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்தார்.

    இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து கோகிலாவை கைது செய்தனர்.

    • சென்னையில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் 120 பேர் திருச்சி வருகை புரிந்துள்ளனர்
    • கன மழை எச்சரிக்கை எதிரொலி திருச்சியில் முகாம்

    திருச்சி,

    வட கிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், அந்தமான் கடற்பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் 18 பேரிடர் மாநில மீட்பு குழுவினர் அதிநவீன உயர்ரக மீட்பு கருவிகளோடு தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு மீட்புக்குழுவிற்கும் 30 பேர் என்னும் வீதம் 540 பேர் இந்த குழுவில் அமைக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் 4 குழுக்கள் வந்துள்ளனர். இந்த குழுவினர் தேவைக்கேற்ப திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இக்குழுவினர் அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

    இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சூசைராஜ் ஆகியோர் தலைமையிலான இந்த குழுவினர் திருச்சியில் உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சி மையத்தில் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    அதே போல் தமிழக காவல்துறை சார்பில் பொதுமக்கள் நலனுக்காக 24 மணிநேரமும் செயல்படும் வண்ணம் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    • திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல் விபத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பலியானார்
    • கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

    டால்மியாபுரம்,

    திருச்சி மாவட்டம் புள்ளம்பட்டி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன்( வயது 58). இவர் திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.மேலும் இவர் மேலரசூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக இருந்தார்.

    இவர்  மேலரசூரில் இருந்து திருச்சிக்கு வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் கல்லக்குடி நோக்கி வந்தார். அப்போது லால்குடி ஒன்றியம் நெய்குப்பை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த ஜெயகுமார்(53), அவரது மகன் ஜெயநித்தீஸ் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் தங்களது குலதெய்வம் பூமிபாலன் கோவிலுக்கு சாமி கும்பிட கல்லக்குடி தாண்டி மால்வாய் நோக்கி சென்றுள்ளனர்.

    எதிர்பாராதவிதமாக 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மொபட்டில் வந்த அர்ச்சுணன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்ததகவலில் தகவல் அறிந்த அர்ச்சுணன் மனைவி தமிழரசி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அர்ச்சுணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்ததனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயேலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தமிழரசி கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து வந்து அர்ச்சுணனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • திருச்சியில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம் கிடந்தது
    • பாசத்தில் உடல் அருகே காத்திருந்து பாதுகாத்த வளர்ப்பு நாய்

    திருச்சி,

    திருச்சி மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதியில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உடனடியாக இன்று காலை திருச்சி கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டின் அறை கதவு லேசாக சாத்தப்பட்டு இருந்தது. பின்னர் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு அந்த வீட்டில் வசித்து வந்த மதியழகன் (வயது 50) என்பவர் இறந்து கிடந்தார்.மேலும் அங்கு ஒரு நாய் இருந்து கொண்டு அவரை நெருங்க விடாமல் போலீசை கண்டு குரைத்து கொண்டு இருந்தது. தனது எஜமானர் இறந்த நிலையிலும் அவரை விட்டுப் பிரியாமல் அந்த நாய் கடந்த இரு தினங்களாக அங்கேயே படுத்திருக்கலாம் என கூறப்பட்டது.

    பின்னர் ஒரு வழியாக போலீசார் நாயை துரத்தி விட்டு உடலை மீட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த அவரது சகோதரர் சம்பவ இடம் விரைந்து வந்தார்.

    அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்த மதியழகன் கோவில்களில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு காலம் தள்ளி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது தாய் இறந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து வீட்டில் முடங்கிய அவர் உடல் நலக்குறைவால் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    • எதிர்பாராதவிதமாக 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பட்டி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன் (வயது 58). இவர் திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் இவர் மேலரசூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக இருந்தார்.

    இவர் நேற்று முன்தினம் மேலரசூரில் இருந்து திருச்சிக்கு வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் கல்லக்குடி நோக்கி வந்தார். அப்போது லால்குடி ஒன்றியம் நெய்குப்பை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த ஜெயகுமார்(53), அவரது மகன் ஜெயநித்தீஸ் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் தங்களது குலதெய்வம் பூமிபாலன் கோவிலுக்கு சாமி கும்பிட கல்லக்குடி தாண்டி மால்வாய் நோக்கி சென்றுள்ளனர்.

    எதிர்பாராதவிதமாக 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மொபட்டில் வந்த அர்ச்சுணன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவல் அறிந்த அர்ச்சுணன் மனைவி தமிழரசி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அர்ச்சுணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்ததனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தமிழரசி கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து வந்து அர்ச்சுணனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • திருவெறும்பூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • இஸ்ரேல், பாலஸ்தீனம் போரை உடனடியாக, முடிவுக்கு கொண்டு வர கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன

    திருவெறும்பூர்,

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் புறநகர் மாவட்ட செயலாளர் மாரியம்மாள் தலைமை யில் நடைபெற்றது,

    ஆர்பாட்டத்தில் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காசாவில் குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியோர்கள் மீது குறி வைத்து தாக்கி கொன்று குவிப்பதை கண்டித்தும் இஸ்ரேல், பாலஸ்தீனம் போரை உடனடியாக, முடிவுக்கு கொண்டு வந்து சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்பாட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கரூர், திருச்சி, புதுக்கோட்டை மக்களின் கனவு திட்டமான காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்ட முதற்கட்ட பணிகள் தீவிரமாக தொடங்கி உள்ளது
    • இதுவரை 237.97 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது

    திருச்சி,

    தமிழகத்தின் கனவு திட்டங்களில் ஒன்றாக காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளது. காவிரியில் இருந்து வைகை மற்றும் குண்டாறு வரை கால்வாய் அமைத்து, காவிரியில் கிடைக்கும் உபரி நீரை மாநிலத்தின் தண்ணீர் பற்றாக்குறை உள்ள தென் பகுதிகளுக்கு திருப்பி விடுவதே திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

    காவிரியின் உபரி நீரை தெற்கு வெள்ளாறு, வைகை மற்றும் இறுதியாக குண்டாறு வரை கொண்டு செல்வதற்காக, 262 கி.மீ. நீளமுள்ள புதிய இணைப்புக் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இது காவிரியில் மாயனூர் தடுப்பணையில் இருந்து தொடங்குகிறது.

    இதன் மூலம் சுமார் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக, மாயனூர் தடுப்பணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை சுமார் 118.45 கி.மீ., தொலைவுக்கு ரூ.6,941 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த கால்வாய் கரூர் மாவட்டத்தில் 47.23 கி.மீ. தூரத்திலும், திருச்சி மாவட்டத்தில் 18.89 கி.மீ தொலைவிலும் மற்றும் புதுக்கோட்டை 52.32 கி.மீ. தூரத்துக்கும் பயணிக்கிறது. தற்போது முதல் கட்ட பணிகளில் ஒன்றாக மாயனூர் தடுப்பணையில் இருந்து 4.10 கி.மீ. தூரத்துக்கும், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 5.35 கி.மீ., நீளத்துக்கும் 2 வழித்தடங்களில் கால்வாய் அமைக்க ரூ.331 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது.

    இதில் இதுவரை 78 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி 3 மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு கரூர் மாவட்டத்தில் 427.81 ஹெக்டேர் , திருச்சி மாவட்டத்தில் 200.41 ஹெக்டேர் பட்டா நிலமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 585.05 ஹெக்டேர் பட்டா மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களும் தேவைப்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கால்வாய் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். ரம்யா தேவி உடன் இருந்தார்.

    பின்னர் நிறுவன ஆதாரத்துறை செயற்பொறியாளர் எஸ். சிவகுமார் கூறும்போது, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கால்வாய் அமைக்கும் பணி ஆகிய இரண்டும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை, 237.97 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மீதமுள்ள பகுதிக்கு ஏற்ப, செயல்முறை நடந்து வருகிறது.

    நிலம் கையகப்படுத்துதல் எந்த தடங்கலும் இன்றி முன்னேறும் வகையில், குறிப்பாக நிதி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. இந்த நிதியாண்டிற்குள் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இரு வழித்தடங்களில் கால்வாய் அமைக்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த கால்வாயின் முதல் கட்டத்தின் மூலம் கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 42,170 ஏக்கர் பாசன வசதியும், 342 பாசன குளங்கள் பாசன வசதியும் பெறும். 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாற்றையும் வைகையையும் இணைக்கும், சுமார் 110 கி.மீ தூரமும், 3-வது இறுதிக் கட்டம் வைகையை குண்டாற்றுடன் (34.04 கி.மீ) இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    • தீபாவளி பண்டிகை நிறைவடைந்ததை தொடர்ந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் அலை மோதியது
    • சென்னை, கோவைக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது

    திருச்சி,

    சென்னை, கோவை போன்ற மாநகரில் வேலை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருந்த திருச்சி மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் இறுதியில் வந்தனர். பின்னர் விடுமுறை முடிந்து கொண்டாட்டம் நிறைவடைந்து நேற்று மாலை முதல் அந்த மக்கள் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு புறப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து மக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததால் பஸ்கள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை முதல் சென்னைக்கு 162 சிறப்பு பஸ்களும், விழுப்புரம் மண்டலம் சார்பில் 60 பஸ்களும் இயக்கப்பட்டது. அதேபோன்று திருச்சியில் இருந்து கோவைக்கு 112 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் விடிய விடிய இயக்கப்பட்டது.

    அதேபோன்று திருச்சி மண்டலம் சார்பில் ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொதுவாக தீபாவளி பண்டிகை நிறைவடையும்போது தென் மாவட்டங்களுக்கு சென்றிருக்கும் மக்கள் மீண்டும் வேலை நிமித்தமாக திருச்சி மற்றும் சென்னை போன்ற நகருக்கு புறப்பட்டு வருவார்கள்.

    ஆனால் நேற்று வழக்கத்துக்கு மாறாக திருச்சியில் இருந்து நிறைய பேர் மதுரை நோக்கி புறப்பட்டு சென்றனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் மதுரைக்கு பஸ்களுக்காக மக்கள் காத்திருந்தனர்.

    இதனால் திருச்சியில் இருந்து மதுரைக்கு 35 சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டதாக திருச்சி மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, நேற்று சென்னைக்கு எதிர்பார்த்த கூட்டம் இல்லை. தாமதம் இல்லாமல் தங்கள் விரும்பிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல பஸ் வசதி செய்து தரப்பட்டது என்றார்.

    • புள்ளம்பாடியில் மரத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி பரிதாபமாக பலியானார்
    • கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

    டால்மியாபுரம்,

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தில் தெற்குதெருவில் வசித்து வரும் சின்னதுரை என்பவரின் மகன் ராமசுந்தரம் (வயது 32).விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் தனது ஆடுகளுக்கு தழை வெட்ட சென்றார். இதற்காக வேப்பமரத்தில் ஏறி நின்று தழைகளை வெட்டி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தால். இதில் மரத்தின் கீழே உள்ள கருங்கலில் தலை மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் காட்டில் இருந்து வரப்பு வரை நகர்ந்து வந்து காட்டின் ஒரத்தில் மயங்கி கிடந்துள்ளார்.

    அவ்வழியாக ஆடுமேய்க்க சென்றவர்கள், இதனை கண்டு ஊருக்கு தகவல் கொடுத்தனர். ராமச்சுந்தரத்தின் மனைவி ஜெயசீலா தனது உறவினர்களுடன் சென்று கணவரை மீட்டு சமயபுரம்-இருங்களூர் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.இதுகுறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் ராமச்சந்திரத்தின் மனைவி ஜெயசீலா கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் லால்குடி இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    மேலும் தனியார் மருத்துவமனையில் உள்ள ராமசந்திரத்தின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இறந்த ராமசுந்தரத்திற்கு ஜெயசீலா என்ற மனைவியும், தர்ஷனா (வயது 3), தன்விகா (வயது 1 1/2)என்ற 2 பெண் கைக்குழந்தைகள் உள்ளது.தீபாவளி திருநாளன்று தனது வயலுக்கு சென்று மரத்திலிருந்து கீழே விழுந்தவர் இறந்ததால் உறவினர் மட்டுமல்லாது பொதுமக்கள் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • முசிறியில் இளைஞர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • முசிறி போலீசார் நடவடிக்கை

    முசிறி,

    திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்த பாலகுமார் மகன் ராகுல் (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் அமர்ந்து இருந்தபோது, உமையாள்புரம் கீழத்தெருவை சேர்ந்த கௌரிதாசன் (28), புதுராஜா (33) ஆகிய இருவரும் குடிபோதையில் ராகுலை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இதனை கண்டி ராகுலின் அண்ணன் ராஜேஷ் தடுத்துள்ளார். அவரை கெளரிதாசன் மற்றும் புதுராஜா இருவரும் சேர்ந்து குவாட்டர் பாட்டிலால் தாக்கியும், மேலும் உடைந்த பாட்டிலில் ராகுலின் உடலில் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராகுல் முசிறி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் கௌரி ராஜன் மற்றும் புதுராஜா கைது செய்யப்பட்டனர்.

    • வீடியோ பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து திருச்சியில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது.
    • பைக் ரைடர்ஸ் மணிகண்டன் அவரது நண்பர் அஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் ஆங்காங்கே இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிவேக பைக்குகளில் வீலிங் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடுவதும், இதனை வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் பக்கங்களில் பதிவிட்டு பெருமைபட்டு கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த வீடியோக்களுக்கு அதிகளவு லைக்குகளும், கமாண்டுகளும் வருவதால் இளைஞர்கள் இவ்வாறு வீடியோ பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். போலீசார் எத்தனை முறை அறிவுரைகள் கூறினாலும், இளைஞர்கள் செவிசாய்க்க மறுக்கின்றனர்.

    இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு, இளைஞர் ஒருவர் தொடர்ச்சியாக கீழே இருந்து மேலே சென்று வெடிக்கும் பேன்சி ரக பட்டாசை பைக்கின் முன்புறம் பொருத்தி அதனை கொளுத்தி வெடிக்க செய்து கொண்டு பைக்கை நெடுஞ்சாலையில் ஓட்டியதும், வீலிங் செய்வது போன்ற ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. டெவில் ரைடர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ வைரல் ஆகியது.

    முதலில் இது எங்கு எடுத்தது என்று தெரியாமல் இருந்த நிலையில், திருச்சி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீடியோ பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து திருச்சியில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து திருச்சி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூர் சேர்ந்த மணிகண்டன் என்பதும், இந்த சாகசத்தை வீடியோவாக எடுத்து வலைதளங்களில் வெளியிட்டது திருச்சி வயலூர் ரோடு குமரன் நகர், கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய்(வயது 24) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில் பைக் ரைடர்ஸ் மணிகண்டன் அவரது நண்பர் அஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த அஜய் கைது செய்யப்பட்டார். மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருச்சியில் பட்டாசுகளை வைத்து வீலிங் செய்யும் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டதை தொடர்ந்து கோட்டை போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட சாலையில் வீலிங்கில் ஈடுபட்ட சிந்தாமணி டைமண்ட் பஜார் பகுதியை சேர்ந்த உசேன் பாஷா(வயது 24), காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பால்பண்ணை முதல் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள சாலையில் வீலிங் செய்த தாரநல்லூர் ராஜேஷ்(24) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதே போல புறநகர் பகுதியில் ஜீயபுரம், லால்குடி, சமயபுரம், கானகிளியநல்லூர் ஆகிய 4 காவல் நிலையங்களில் வாக்கு பதியப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பர்ஷத் அலி(24 ), அஜித் (22) சக்திவேல், விஜய், வசந்தகுமார், அருள் முருகன், பெருமாள், கிரீஷ்குமார், அஜீத்குமார் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான 11 பேரின் லைசென்சை ரத்து செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    ×