search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
    X

    கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

    • முசிறியில் இளைஞர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • முசிறி போலீசார் நடவடிக்கை

    முசிறி,

    திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்த பாலகுமார் மகன் ராகுல் (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் அமர்ந்து இருந்தபோது, உமையாள்புரம் கீழத்தெருவை சேர்ந்த கௌரிதாசன் (28), புதுராஜா (33) ஆகிய இருவரும் குடிபோதையில் ராகுலை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இதனை கண்டி ராகுலின் அண்ணன் ராஜேஷ் தடுத்துள்ளார். அவரை கெளரிதாசன் மற்றும் புதுராஜா இருவரும் சேர்ந்து குவாட்டர் பாட்டிலால் தாக்கியும், மேலும் உடைந்த பாட்டிலில் ராகுலின் உடலில் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராகுல் முசிறி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் கௌரி ராஜன் மற்றும் புதுராஜா கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×