என் மலர்tooltip icon

    தென்காசி

    • தோரணமலையில் குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
    • போட்டியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    மாரத்தான் போட்டி உலகம் முழுவதும் நடத்தப் படும் ஒரு விளையாட்டு. இந்த போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

    பெரும்பாலும் சர்வ தேச போட்டிகளில் மினி மாரத்தான் போட்டிகளுக் கான தூரம் 10 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. வெற்றியை சொல்ல ஓடிய இந்த போட்டியில் பங்கேற்றால் உடல் நலம் சிறப்படையும் என்பதோடு வாழ்வில் வெற்றியை காணலாம் என்ற நம்பிக்கை பலருக்கு உண்டு.

    மேலும் தற்போது உலகம் முழுவதும் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று தென்காசி அருகே கடையம் தோரணமலையில் குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உன்னதமான உணவு முறையுடன் ஆரோக்கியத்தை பேணு வதை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

    மாரத்தான்

    இதனை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம், தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் இணைந்து நடத்தியது. காலை 6 மணி அளவில் தென்காசி அருகே மத்தளம் பாறையில் உள்ள ஷோகோ நிறுவனம் முன்பு போட்டி தொடங்கியது. இதில் மாணவர்கள் இளைஞர்கள் என 100-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு ஓடினர். இதில் இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    10 கிலோ மீட்டர்

    போட்டியை தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

    ஓட்டப்பந்தய வீரர்கள் திரவியநகர், மாதாபுரம் செக்போஸ்ட், கானாவூர், வழியாக தோரணமலையை அடைந்தனர். அவர்கள் மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி வெற்றி எல்லையை அடைந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் டி.சர்ட், சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு

    விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச் சந்திரன் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு பரிசு களை வழங்கினார். முன்னதாக போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தோரணமலையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    போட்டியில் முதலிடம் வந்த மாரிசரத் ரூ.10 ஆயிரம் பரிசை பெற்றார். 2-வதாக வந்த அஜித்குமார் ரூ.5 ஆயிரமும், 3-வது வந்த பத்ரி நாராயணன் ரூ.3 ஆயிரமும் பரிசாக பெற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம் பாலமுருகன், தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • தி.மு.க. மாணவர் அணி கருத்தரங்கில் பங்கேற்க தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.
    • சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த ஆ.ராசா எம்.பி.க்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி கருத்தரங்கில் பங்கேற்க தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த ஆ.ராசா எம்.பி.க்கு தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்த ஆ.ராசா எம்.பி.க்கு வீரவாள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப் பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூ.எஸ்.டி. சீனிவாசன், பரம குரு, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் முத்துச் செல்வி, மாநில மருத்துவர் அணி துணை செய லாளர் செண்பகவிநாயகம், மாவட்ட அவை தலைவர் பத்மநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், தேவதாஸ், சாகுல் ஹமீது, மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, ஒன்றிய செய லாளர்கள் லாலாசங்கர பாண்டியன், பொன்.முத்தையா பாண்டியன், கடற்கரை, பூசைப்பாண்டி யன், சேர்மதுரை, வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன்,

    மதிமாரிமுத்து, நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பேரூர் செயலாளர்கள் குரு, ருபி பாலசுப்ரமணியம், மாரி முத்து, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் முகேஷ் உதயகுமார், வக்கீல் பிச்சையா, கே.எஸ்.எஸ். மாரியப்பன், கிப்ட்சன், சிவசங்கரி, அப்பாஸ் அலி, விஜயா சவுந்தரபாண்டியன், மாடசாமி, பிரேம்குமார்,

    பசுபதி பாண்டியன், நாகூர்கனி, மணிகண்டன், சரவணன், சேதுராமன், அமிதாப், சாமுவேல், அழகு துரை மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பா ளர்கள் கார்த்திக், சரவணன் அன்சாரி, ராஜ், மணிகண்டன் ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களின் கடையும் உணவு பாதுகாப்பு அதிகாரி மூலம் சீல் வைக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புகையிலை பொருட்கள்

    இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கத்தினரிடம் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எடுத்துக்கூறினார்.

    அப்போது பேசிய போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன், அவரின் கடையும் உணவு பாதுகாப்பு அதிகாரி மூலம் சீல் வைக்கப்படும்.

    குண்டர் சட்டம் பாயும்

    பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறி யப்பட்டால் விற்பனை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.

    மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் 94981 66566 என்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொலைபேசி எண்ணிற்கு நேரடியாக புகார் அளிக்கலாம்.

    புகார் செய்பவர்களின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என கூறினார்.

    இதேபோல் அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வர்த்தகர்களிடமும் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

    • சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக கலைவாணர் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
    • ராயகிரி பஸ் நிறுத்தம் அருகே மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக சங்கரன்கோவில் கலைவாணர் கலைக் குழு வினரின் மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் பிலோமினா, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், தலையாரி அழகராஜா, தலைமை காவலர் ஸ்ரீதர கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதுபோன்று ராயகிரி பஸ் நிறுத்தம் அருகே மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன், செயல் அலுவலர் சுதா, துணைத் தலைவர் குறிஞ்சி மகேஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் அசன உணவு வழங்கப்பட்டது.
    • தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பழமை வாய்ந்த உலக மீட்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் மாலை சிறப்பு திருப்பலி, இறைமக்களுக்கு அசன உணவும் வழங்கப் பட்டது. நேற்று முன்தினம் நற் கருணை பவனி நடை பெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை பங்கு ஆலயத்தில் வெய்கா லிப்பட்டி புனித ஜோசப் கல்வியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயலர் அருட்பணி சகாய ஜான், பண்டாரகுளம் பங்குத் தந்தை அருட்பணி மிக்கேல் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி னர்.

    இதைதொடர்ந்து திருத்தேர் அர்ச்சிக்கப்பட்டது. உலக மீட்பர் திரு உருவ தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி ஆலங் குளம்-தென்காசி சாலை வழியாக அண்ணாநகர் மற்றும் ஆலங் குளத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியில் இறைமக்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் உலக மீட்பர் ஆலயம் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.எம்.அருள் ராஜ் மற்றும் வின்சென்ட் தே பவுல் சபை இறை மக்கள் செய்திருந்தனர்.

    • போட்டிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி சிறப்புப்பள்ளிகள், சிறப்பாசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா தொடர்பான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தென்காசி இ.சிஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி சிறப்புப்பள்ளிகள், சிறப்பாசிரியர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர், உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெய பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மழையினால் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பரவலாக கனமழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையினால் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2 அருவிகளிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இருப்பினும் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டினாலும் சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஓரமாக நின்று குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இன்று காலையிலும் மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மற்ற அருவிகளான பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்த காரணத்தினால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • ஆட்டோவில் இலஞ்சியை சேர்ந்த பொன்சேகா உள்பட 4 பேர் பயணித்தனர்.
    • கருங்கல் ஏற்றி வந்த டிராக்டரின் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

    தென்காசி:

    தென்காசி மேலகரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் இருந்து சுப நிகழ்ச்சிக்காக உணவு ஏற்றிக்கொண்டு தென்காசி -அம்பை சாலையில் மத்தளம்பாறையை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.

    ஆட்டோ கவிழ்ந்தது

    ஆட்டோவில் அந்த உணவகத்தில் வேலை பார்த்த மேல இலஞ்சியை சேர்ந்த பொன்சேகா(வயது 36) என்ற பெண் உள்பட 4 பேர் பயணித்தனர்.

    அங்கராயன்குளம் அருகே வந்தபோது எதிரே தென்காசியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளின் மீது ஆட்டோ மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து, கருங்கல் ஏற்றி வந்த டிராக்டரின் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

    தலை நசுங்கி பலி

    இந்த விபத்தில் பொன் சேகா இடிபாடுகளில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்சேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வெய்க்காலிப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் (21) என்ற வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு நீரானது மாயமான்குறிச்சி வழியாக மாறாந்தை குளத்திற்கு செல்கிறது.
    • மாயமான்குறிச்சியில் ஒரு மடை அமைக்கப்பட்டு அதன் மூலம் பணிக்கர் ஊரணிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.14.39 லட்சத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊரணி அமைக்கப்பட்டது. குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு நீரானது மகிழ்வண்ணநாதபுரம் அருகே உள்ள நாகல்குளம் வந்தடைந்து அங்கிருந்து மானூர் கால்வாய் மூலம் தண்ணீர் பல கிராமங்களை கடந்து மாயமான்குறிச்சி வழியாக மாறாந்தை குளத்திற்கு செல்கிறது. இந்த மாறாந்தை கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் மாயமான்குறிச்சியில் ஒரு மடை அமைக்கப்பட்டு அதன் மூலம் சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பணிக்கர் ஊரணிக்கு கொண்டு வரப்பட்டு நிரப்பபடுகிறது.

    இந்த ஊரணியில் தண்ணீர் தேக்குவதால் அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்த மழையால் இந்த ஊரணிக்கு மாறாந்தை கால்வாய் மடையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வந்துள்ளது. இதனால் ஊரணி கரையின் வடபுறம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. ஊரணி சுற்றி கட்டப்பட்ட கரையின் சுவர் தரமில்லாததால் உடைப்பு பெரியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் அருகில் உள்ள மானூர் கால்வாய் வழியே வீணாக வெளியேறியது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாறாந்தை கால்வாய் மடை அடைக்கப்பட்டு உடைந்த ஊரணி கரையை சரி செய்யும் பணி தொடங்கி உள்ளது.ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊரணி கரை தரமில்லாமல் 2 மாதத்தில் உடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தரமில்லாமல் ஊரணி கட்டியவர்கள் மீதும் அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊரணிக்கு இருபுறமும் கால்வாய் செல்வதால் கரை உடைப்பால் நடவுக்காக பயிரப்பட்ட நெல் நாற்றுகள் சேதம் ஆகி உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    • என்.ஜி.ஓ. காலனி ரெயில்வேகேட் பராமரிப்பு பணி இன்று காலை தொடங்கியது.
    • பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் வழக்கமான பாதை திறக்கப்படும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில்-ராஜபாளையம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள என்.ஜி.ஓ. காலனி ரெயில்வேகேட் பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து ராஜபாளையம், மதுரை செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம், பருவக்குடி வழியாக ராஜபாளையம் பிரதானசாலையில் செல்லும். அதேபோல் ராஜபாளையம், மதுரையில் இருந்து வரும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி வந்து அங்கிருந்து அச்சம்பட்டி சாலை சென்று வேல்ஸ் மெட்ரிக் பள்ளி, வடக்குப்புதூர் வழியாக பஸ் நிலையம் வந்து செல்லும். மாலை 6 மணிக்கு மேல் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் வழக்கமான பாதை திறக்கப்படும். எனவே பொதுமக்கள் மாற்று வழியைப் பயன்படுத்த கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் குமார் தெரிவித்துள்ளார்.

    • தாயார்தோப்பு கிராமம் மற்றும் அரசு புறம் போக்கு நிலங்களில் பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க குறைந்தது 2 முதல் 3 ஏக்கர் நிலம் தேவைப்படும்.

    தென்காசி:

    வீரகேரளம்புதூரில் தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந் நிலையில் வீரகேரளம்புதூர் அருகே உள்ள தாயார்தோப்பு கிராமம் மற்றும் மாணவர் விடுதி அருகில் உள்ள அரசு புறம் போக்கு நிலங்களில் பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க குறைந்தது 2 முதல் 3 ஏக்கர் நிலம் தேவைப்படும். தாயார்தோப்பு மற்றும் அரசு மாணவர் விடுதி அருகில் உள்ள இடங்கள் குறைவான அளவில் உள்ளது. எனவே இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பேசி இடங்களை பெற்று தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரி பேச்சிமுத்து, வக்கீல் சுப்பையா, துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் இசக்கிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி, கிராம உதவியாளர் ஜேம்ஸ்ராஜ், வெற்றிவேலன், பேச்சிமுத்து உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

    • மாணவி காளி பிரியா அண்ணாமலையார் தீப பாடலுக்கு நடனமாடினார்.
    • நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தினர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியில் கார்த்திகை தீபத் திருநாள் கொண் டாட்டம் நடைபெற்றது. கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் தலைமை தாங்கினார்.

    பள்ளி முதல்வர் பால சுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி ஷைனி பிரீத்தி வரவேற்று பேசினார். மாணவி குங்கும காயத்ரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி காளி பிரியா அண்ணாமலையார் தீப பாடலுக்கு நடனமாடி னார். மாணவி ரட்சனா கார்த்திகை பண்டிகையின் சிறப்பினை பற்றி பேசினார். மாணவர் ஜீவா கார்த்திகை தீபம் குறித்து கவிதை கூறினார்.

    நிகழ்ச்சியில் பிளஸ்-2 வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சுமதி, 10-ம் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வலிங்கம், கணித ஆசிரியர் சரவணன், 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகள் குழு வாக இணைந்து தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தினர். முடிவில் மாணவி ரேணுகா தேவி நன்றி கூறினார். ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், கல்வி ஆலோ சகர் உஷா ரமேஷ், இயக்கு னர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×