search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோரணமலையில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம்
    X

    தோரணமலையில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம்

    • தோரணமலை முருகன் கோவில் சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட புராண சிறப்புடையதாகும்.
    • கிரிவலப்பாதை முழுவதும் மூலிகைகள் நிறைந்திருப்பதால் உற்சாகம் ஏற்படுவதாக பக்தர்கள் கூறினர்.

    கடையம்:

    தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவில் சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட புராண சிறப்புடையதாகும். தோரணமலையில் கார்த்திகை மாத பவுர்ண மியை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்த னர். கிரிவலப்பாதை முழுவதும் மூலிகைகள் நிறைந்தி ருப்பதால் கிரிவலம் சென்ற பக்தர்கள் உற்சாகம் ஏற்படுவதாக கூறினர்.

    மேலும் கிரிவலம் முடிந்த பின்பு உத்தர்காண்டு மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் நலமுடன் மீண்டு வர சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காலை அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப் பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.

    Next Story
    ×