search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bagan"

    • கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    கடையநல்லூர்:

    மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடைய நல்லூர் பகுதியில் மக்தூம் ஞானியார் தர்கா உள்ளது.

    இந்த தர்காவில் நூறாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை வளர்க்க சில ஆண்டுகளாக வனத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் தர்காவினர் வளர்த்து வந்ததால், வனத்துறை தெரிவித்த தகவலின்பேரில், சென்னையில் இருந்து யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டியினர் ஒரு குழுவாக கடையநல்லூர் வந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு யானையை பார்வையிட்டனர்.

    இந்நிலையில் யானையை வளர்க்க தோட்டம், நீச்சல் குளம், தூங்குவதற்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை தர்காவில் இல்லை என்று கூறி உடனடியாக இந்த யானையை பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல அந்த குழு உத்தரவு பிறப்பித்தது.

    அதனைத்தொடர்ந்து நேற்று இரவு கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    தற்போது 58 வயது கொண்ட இந்த பெண் யானையின் எடை 4.5 டன் ஆகும். இந்த தர்காவிற்கு இது 5-வது யானையாகும். நூற்றாண்டு பழமையான இந்த தர்காவில் இருந்து யானையை வனத்துறையினர் கைப்பற்றி சென்றது அங்குள்ளவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

    இதனால் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதேநேரத்தில் யானை பாகன் நத்கர் பாதுஷா, யானையின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடி யானைக்கு பிரியா விடை கொடுத்தார்.

    • ஆத்திரம் தீராமல் ஷைபாஸை துதிக்கையால் தூக்கி சுவற்றில் மோதியது.
    • பராமரிப்பாளர் இறந்த சம்பவம் சக ஊழியர்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், பழைய பஸ்தி பாக் பகுதியில் நேரு வன உயிரியல் பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவில் அதே பகுதியை சேர்ந்த ஷைபாஸ் (வயது 25) என்ற வாலிபர் கடந்த 2 ஆண்டுகளாக வனவிலங்கு பராமரிப்பாளராகவும் யானை பாகனாகவும் வேலை செய்து வந்தார்.

    நேற்று மீராளம் குளம் என்ற இடத்தில் யானைகளை பராமரித்து கொண்டு இருந்தார்.

    அப்போது விஜய் என்ற ஆண் யானை திடீரென ஷைபாசை தந்ததால் குத்தி தூக்கி வீசியது. மேலும் ஆத்திரம் தீராமல் ஷைபாஸை துதிக்கையால் தூக்கி சுவற்றில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஷைபாஸ் அலறி கூச்சலிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து ஷைபாஸை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஷைபாஸ் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். யானை தாக்கியதில் வனவிலங்கு பராமரிப்பாளர் இறந்த சம்பவம் சக ஊழியர்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவில் யானையை தாக்கிய பாகனிடம் துணை கமிஷனர் விசாரணை நடத்தினார்.
    • பார்வதி யானையை பாகன் அடித்து துன்புறுத்தினார். அதில் யானைக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா நடந்து வருகிறது. 8-ம் திருவிழாவான நேற்று அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது கோவில் யானை பார்வதி ஊர்வலத்தின் முன்பாக சென்றது.

    அப்போது வடக்கு-கிழக்கு ஆடி சந்திப்பில் உள்ள 16 கால் மண்டபத்தில் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த நேரத்தில் யானை, அம்மனை 3 முறை வலம் வந்து மண்டியிட்டு துதிக் கையை தூக்கி வணங்குவது வழக்கம்.

    அதனை செய்யும்படி பாகன், யானைக்கு சைகை செய்தும், யானை அந்த வழிபாட்டை செய்ய முன்வரவில்லை. அது பக்தர்களை கண்டு பயந்து விலகி சென்றது. உடனே பாகன், யானையை கட்டுப்படுத்த அங்குசத்தால் தாக்கினார். இதில் யானை உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. உடனே பாகன், யானையை அங்கி ருந்து அழைத்து சென்று விட்டார்.

    யானை சென்ற வழியில் ரத்தம் வழிந்திருந்ததால் பாகன் தாக்கியதில் யானை காயம் அடைந்தது பக்தர்களுக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் வேதனை அடைந்தனர்.

    ஏற்கனவே பார்வதி யானை கண்புரை நோயால் அவதிபட்டு வருகிறது. அதற்கு மருத்துவக்குழு வினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் யானையை பாகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    யானை தாக்கப்பட்ட போது சம்பவ இடத்தில் இருந்த மேல அனுப்பான டியை சேர்ந்த தேன்மொழி என்பவர் கோவில் அலுவலருக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மீனாட்சி அம்மன் சப்பரத்துடன் வடக்கு ஆடி வீதியில் வலம் வந்தபோது உடன் வந்த பார்வதி யானையை பாகன் அடித்து துன்புறுத்தினார். அதில் யானைக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.

    இதுகுறித்து கேட்டபோது, யானையை தாக்கியது பாகன் அல்ல. அவரது மகன் என்றும், காயம் அடைந்த யானைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும் உறுதி அளித்தனர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்து யானையை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர். இதுபோல் வாயில்லா ஜீவன்களை தாக்குவதை தடுக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகார் தொடர்பாக கோவில் நிர்வாக துணை கமிஷனர் அருணாசலம், பாகனிடம் விசாரணை நடத்தினார். இதுபற்றி அவர் கூறும்போது, யானையை பாகன் தாக்கியது உறுதி செய்யப்பட்டதும் பாகன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    ×