search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வன உயிரியல் பூங்காவில் பாகனை கொன்ற யானை
    X

    வன உயிரியல் பூங்காவில் பாகனை கொன்ற யானை

    • ஆத்திரம் தீராமல் ஷைபாஸை துதிக்கையால் தூக்கி சுவற்றில் மோதியது.
    • பராமரிப்பாளர் இறந்த சம்பவம் சக ஊழியர்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், பழைய பஸ்தி பாக் பகுதியில் நேரு வன உயிரியல் பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவில் அதே பகுதியை சேர்ந்த ஷைபாஸ் (வயது 25) என்ற வாலிபர் கடந்த 2 ஆண்டுகளாக வனவிலங்கு பராமரிப்பாளராகவும் யானை பாகனாகவும் வேலை செய்து வந்தார்.

    நேற்று மீராளம் குளம் என்ற இடத்தில் யானைகளை பராமரித்து கொண்டு இருந்தார்.

    அப்போது விஜய் என்ற ஆண் யானை திடீரென ஷைபாசை தந்ததால் குத்தி தூக்கி வீசியது. மேலும் ஆத்திரம் தீராமல் ஷைபாஸை துதிக்கையால் தூக்கி சுவற்றில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஷைபாஸ் அலறி கூச்சலிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து ஷைபாஸை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஷைபாஸ் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். யானை தாக்கியதில் வனவிலங்கு பராமரிப்பாளர் இறந்த சம்பவம் சக ஊழியர்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×