என் மலர்tooltip icon

    தேனி

    • வருசநாடு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பஞ்சந்தாங்கி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தேங்காய், கொட்டை முந்திரி, இலவம் பஞ்சு ஆகியவற்றின் விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பஞ்சந்தாங்கி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.

    விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வருசநாடு கிராமத்தில் அமைந்துள்ள பஞ்சந்தாங்கி கண்மாயில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அதன் பின்னர் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி நீர் தேக்கி வைக்க வழிவகை செய்ய வேண்டும், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிங்கராஜபுரம்-அரண்மனைபுதூர், வருசநாடு-வாலிப்பாறை ஆகிய தார் சாலைகளை சீரமைக்க வேண்டும், தேங்காய், கொட்டை முந்திரி, இலவம் பஞ்சு ஆகியவற்றின் விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,

    புலிகள் சரணாலயம் என்ற பெயரில் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து தடுத்து வரும் வனத்துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ், பாரதி, பாண்டி, ராஜாராம், புயல் மன்னன், பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் உள்ள நிரந்தர முகவரியை வைத்து ரேசன் பொருட்கள் மற்றும் கல்வி, வருவாய்த்துறை திட்டங்களில் பயன் அடைந்து வருகின்றனர். சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.
    • எனவே இரு மாவட்ட நிர்வாகமும் இரட்டை குடியுரிமையை ரத்து செய்து ஏதாவது ஒரு இடத்தில் வாக்களிக்க முகாம்கள் நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கேரள எல்லை அருகே அமைந்துள்ளது. இங்கிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், தேயிலை தோட்டத்துக்கு ஏராளமான தமிழக தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

    சின்னமனூர், கம்பம், அய்யம்பட்டி, தர்மத்து ப்பட்டி, பல்லவராயன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம், போடி, குரங்கணி, கொட்டக்குடி, முந்தல் பகுதியில் இருந்து ஜீப் மூலம் ஏலக்காய் தோட்டத்துக்கு தினசரி தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். மேலும் நிரந்தர தொழி லாளர்கள் கேரளாவில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள நிரந்தர முகவரியை வைத்து ரேசன் பொருட்கள் மற்றும் கல்வி, வருவாய்த்து றை திட்டங்களில் பயன் அடைந்து வருகின்றனர். சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.

    எனவே இரு மாவட்ட நிர்வாகமும் இரட்டை குடியுரிமையை ரத்து செய்து ஏதாவது ஒரு இடத்தில் வாக்களிக்க முகாம்கள் நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    2 கட்டமாக பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. எனவே கேரள தோட்ட தொழிலாளர்கள் விடுப்பு எடுத்து தமிழகம் வருகின்றனர். அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தை பெற்று ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    மேலும் திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தேனிக்கு வருகின்றனர். இந்த திட்டம் கீழ்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்திரும்பி முகாம்களில் விண்ண ப்பித்து வருகின்றனர். அதிகாரிகள் இதில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • விஜயின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டதாக தெரிவித்தனர்.
    • அதிர்ச்சி அடைந்த சித்ரா தன்னை ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்க கோரி சின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு தனது வக்கீலுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சித்ரா (வயது21). தனியார் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மார்க்கையன்கோட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வாத்து என்ற விஜய் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    கடந்த 5 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். சித்ராவை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பல்வேறு கட்டங்களாக பணம், நகையை வாங்கி உள்ளார். இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் ரூ.2 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு தேனி சென்று வருவதாக கூறிய விஜய் அதன் பின்னர் இவரை சந்திப்பதை தவிர்த்துள்ளார். செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. விஜயின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா தன்னை ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்க கோரி சின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு தனது வக்கீல் ஜகன்ராஜூவுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

    போலீசார் அவரை சமரசம் செய்ததால் போராட்டத்தை கைவிட்டார். இது தொடர்பாக விஜய் அவரது தாய் தமிழ்ச்செல்வி, உறவினர் லதா உள்பட 5 பேர் மீதுபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கம்பம் மெட்டு மலைச்சாலையில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தினர் கார்பனேட் உள்ளிட்ட அரியவகை கனிம உலோகங்கள் இருப்பதாக செயற்கைகோள் மூலம் கண்டறிந்தனர்.
    • இதற்காக வனப்பகுதியில் சுமார் 2 ச.கி.மீ. பரப்பளவில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வன சரகம் கம்பம் மெட்டு மலைச்சாலையில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தினர் கார்பனேட் உள்ளிட்ட அரியவகை கனிம உலோகங்கள் இருப்பதாக செயற்கைகோள் மூலம் கண்டறிந்தனர்.

    இதற்காக வனப்பகுதியில் சுமார் 2 ச.கி.மீ. பரப்பளவில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து வருகின்றனர். இந்த ஆய்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்.காட்சிகண்ணன் கூறியதாவது:-

    ஏற்கனவே பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகம் அமைத்து சர்ச்சை வெடித்து வருகிறது. அதனுடைய ெதாடர்ச்சியாக இந்திய புவியியல் ஆய்வு மையம் அரிய உலோகங்களை கண்டு பிடிப்பதற்காக ஆய்வு மேற்கொண்டு உள்ளது. ஆழ்துளை கிணறு அமைப்பது கம்பம் பகுதியை வறட்சியாக்கி நீர்வளத்ைத பாதிக்கும். ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணையில் கேரளா தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் புவியியல் ஆய்வு மக்களிடையே அச்சத்ைத ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தேனி மாவட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.
    • தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கேரள எல்லை அருகே அமைந்துள்ளது. இங்கிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், தேயிலை தோட்டத்துக்கு ஏராளமான தமிழக தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

    சின்னமனூர், கம்பம், அய்யம்பட்டி, தர்மத்துப்பட்டி, பல்லவராயன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம், போடி, குரங்கணி, கொட்டக்குடி, முந்தல் பகுதியில் இருந்து ஜீப் மூலம் ஏலக்காய் தோட்டத்துக்கு தினசரி தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். மேலும் நிரந்தர தொழிலாளர்கள் கேரளாவில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள நிரந்தர முகவரியை வைத்து ரேசன் பொருட்கள் மற்றும் கல்வி, வருவாய்த்துறை திட்டங்களில் பயன் அடைந்து வருகின்றனர். சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.

    எனவே இருமாவட்ட நிர்வாகமும் இரட்டை குடியுரிமையை ரத்து செய்து ஏதாவது ஒரு இடத்தில் வாக்களிக்க முகாம்கள் நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    2 கட்டமாக பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. எனவே கேரள தோட்ட தொழிலாளர்கள் விடுப்பு எடுத்து தமிழகம் வருகின்றனர். அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தை பெற்று ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    மேலும் திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தேனிக்கு வருகின்றனர். இந்த திட்டம் கீழ்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்திரும்பி முகாம்களில் விண்ணப்பித்து வருகின்றனர். அதிகாரிகள் இதில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக சென்றார்.
    • அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் க.புதுப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த சேகர் மனைவி தமிழரசி (வயது 23). இவர்களுக்கு ரக்ஷனா என்ற மகளும், ரட்சகன் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று 4-வது வார்டு மாதா கோவில் தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் தமிழரசி இருந்தார்.

    அப்போது தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக ரட்சகனுடன் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தமிழரசியின் தாய் வேளாங்கண்னி உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரிச்சாமி மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
    • இதனால் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    தேனி:

    தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் உணவு தேவைக்காக மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, கேன்டீன்களில் உள்ள குடிநீர் குழாய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேன்டீன் நடத்தி வரும் மாரிச்சாமி என்பவர் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அப்போது குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன் அமைத்துள்ள மாரிச்சாமி, மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

    இந்நிலையில், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    உணவக உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் மீனாட்சி சுந்தரம்மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    மேலும் மீனாட்சி சுந்தரம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

    • பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் இளம் சிட்டு, புள்ளிமான், தட்டான் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் வகை பந்தய மாடுகள் பங்கேற்றன.
    • பெரிய மாடு வகையான கரிச்சான் வகை மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ. 30000, 2-ம் பரிசாக ரூ. 25,000 3-ம் பரிசாக ரூ. 20,000 மற்றும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி பகுதியில் அமைந்துள்ள வீர காளியம்மன் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

    போடி ஒன்றியத்திற்குட்பட்ட ராசிங்காபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றனர்.

    பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் இளம் சிட்டு, புள்ளிமான், தட்டான் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் வகை பந்தய மாடுகள் பங்கேற்றன.

    பந்தயத்தில் வெற்றி பெற்ற பந்தய மாட்டு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இளஞ்சிட்டு வகை மாடுகளுக்கு ரூ.4000 முதல் பரிசாகவும் கோப்பை வழங்கப்பட்டது.

    பெரிய மாடு வகையான கரிச்சான் வகை மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ. 30000, 2-ம் பரிசாக ரூ. 25,000 3-ம் பரிசாக ரூ. 20,000 மற்றும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    தேனி மாவட்ட நாட்டு மாடுகள் நலச் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி பந்தய வீரர்கள் மாடுகளுடன் பங்கேற்றனர்.

    • தனது நண்பருக்கு சொந்தமான வைக்கோல் சுற்றும் எந்திரத்தை சின்னவாய்க்கால் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.
    • அதில் இருந்த பொருட்களை 3 பேரும் திருடிச் சென்றனர்.

    கம்பம்:

    கம்பத்தை சேர்ந்தவர் பரமன் (வயது55). இவர் வைக்கோல் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். தனது நண்பருக்கு சொந்தமான வைக்கோல் சுற்றும் எந்திரத்தை சின்னவாய்க்கால் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.

    அதில் இருந்த பொருட்களை ஞானசேகரன் (45), சுல்தான் இப்ராகிம் (51), முகமது ரபீக் (51) ஆகிய 3 பேரும் திருடிச் சென்றனர். அவர்களை மடக்கி பிடித்து கம்பம் வடக்கு போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    • சாரல் திருவிழா நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து இந்த ஆண்டு சாரல் திருவிழாவினை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
    • சுருளி அருவிக்கு செல்லும் சாலை , சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளி அருவி பகுதியில் சுருளி சாரல் திருவிழா-2023 நடைபெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    சுருளி அருவி பகுதியில் சாரல் திருவிழா கடந்த காலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா நோய் தாக்கத்தினால் கடந்த 3 வருடங்களாக இந்த சாரல் திருவிழா நடைபெறவில்லை. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சாரல் திருவிழா நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து இந்த ஆண்டு சாரல் திருவிழாவினை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

    சாரல் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் மேடை அமையுள்ள இடம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை உள்ளாட்சி அமைப்பினர் விரைந்து சீர் செய்து கொடுக்க வேண்டும். வனத்துறையினர் தேவையான ஒத்துழைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் மின்சாரம் மற்றும் சாலை வசதிகளை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    முன்னதாக 13-வது உலக புலிகள் தின விழாவை கொண்டாடும் விதமாக சுருளி அருவி பகுதியில் கட்டப்பட்டுள்ள 2 சுற்றுச்சூழல் அங்காடிகளை மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார். இந்த அங்காடியில் புலிகள் மற்றும் வனவிலங்குகளை காப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஆடைகள் டி-ஷர்ட், கீ செயின்கள் மற்றும் துணி பைகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பின்னர் சுருளி அருவிக்கு செல்லும் சாலை , சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துமதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை, கம்பம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பாலாமணி கணேசன், வனசரகர் பிச்சைமணி, சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
    • கடை வைத்ததில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மனமுடைந்தவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே அழகாபுரி அம்மாபட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது39). இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவருக்கு பிரபா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    ஓய்வு பெற்ற பணத்ைத வைத்து நண்பருடன் கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சேகர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொைல செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே சிவலிங்கபட்டியை சேர்ந்தவர் பஞ்சராஜா மனைவி மலர்க்கொடி (44). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மலர்க்கொடிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் குணமாகாததால் மனமுடைந்த அவர் அரளி விைதயை அரைத்து குடித்து மயங்கினார்.

    ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சம்பத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்து வீட்டு அருகே நிறுத்தி விட்டு மாடு மேய்க்க சென்றார்
    • அப்போது மாயன் தீ வைத்து மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேலபூசனூத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாயன் (வயது 70) என்பவ ருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது.

    சம்பத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்து வீட்டு அருகே நிறுத்தி விட்டு மாடு மேய்க்க சென்றார். அப்போது அங்கு வந்த மாயன் குணசேகரனின் மனைவியை திட்டி அங்கு இருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சென்று விட்டார்.

    இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து வருசநாடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×