என் மலர்tooltip icon

    தேனி

    • அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களை கொண்டு மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.
    • இந்நிலையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில 1736 மெகாவாட் மின்உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பருவமழை இந்த ஆண்டு ஏமாற்றியது. இதனால் முல்ைலபெரியாறு அணைக்கு போதிய நீர்வரத்து வரவில்லை. ஒருசில நாட்கள் மட்டுமே மழை பெய்த நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது அணையின் நீர்மட்டம் 121 அடியில் உள்ளது.

    அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களை கொண்டு மின்சார உற்பத்தி நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில 1736 மெகாவாட் மின்உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 8000 மெகாவாட் மின்சாரம் குறைவாகும். அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் மதுரை மண்டல தலைமை பொறியாளர் பெரியாறு அணை பகுதியில் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மெயின்அணை, பேபிஅணை, கேலரி, உபரிநீர் வெளியேறும் பகுதி, சீஸ்மோகிராப், வல்லக்கடவு ரோடு, தேக்கடி தலைமதகு பகுதி உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டார்.

    அணையில் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கிய அவர் வெள்ள காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.45 அடியாக உள்ளது. வரத்து 291 கனஅடி, திறப்பு 400 கனஅடி, இருப்பு 2915 மி.கனஅடி.

    வைகை அணை நீர்மட்டம் 48.19 அடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1826 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 23.46 அடியாகவும் உள்ளது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையது இப்ராஹிம் வீட்டுக்கு ஷீலா வந்தார்.
    • தனது லேப்டாப்பில் பலவிதமான வீட்டு அலங்கார படங்களை காண்பித்து சையது இப்ராஹிமை நம்ப வைத்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அம்மாகுளத்தைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம் (வயது 44). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு உள் அலங்கார வேலை செய்வதற்காக ஆட்களை தேடி வந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் கூறிய ஆலோசனையின் பேரில் சென்னை கொடுங்கையூர் லெட்சுமி அம்மன் நகரைச் சேர்ந்த ஷீலா என்பவரிடம் செல்போன் மூலம் பேசினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையது இப்ராஹிம் வீட்டுக்கு ஷீலா வந்தார். அவர் தனது லேப்டாப்பில் பலவிதமான வீட்டு அலங்கார படங்களை காண்பித்து சையது இப்ராஹிமை நம்ப வைத்தார்.

    உள் அலங்கார வேலைக்கு மொத்தம் ரூ.26 லட்சம் செலவாகும் என தெரிவித்தார். அதன்படி அன்றைய தினமே ரூ.5 லட்சமும், அதன் பிறகு பல தவணைகளாக மொத்தம் ரூ.15.50 லட்சம் பணத்தை ஷீலாவுக்கு கொடுத்தார்.

    பணத்தை பெற்றுக் கொண்டு அவர் வீட்டு அலங்கார வேலையை செய்து தராமல் ஏமாற்றியுள்ளார். மேலும் செல்போன் இணைப்பையும் துண்டித்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சையது இப்ராஹிம் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி பெண்ணை தேடி வருகின்றனர்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்ற வாலிபர் திடீரென மாயமானார்.
    • கிணற்றில பிணமாக கிடந்த வாலிபர் முகம் அடையாளம் காணமுடியாக அளவுக்கு சிதைந்து காணப்பட்டதால் மாயமான வாலிபரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முகமது தாவூது. விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் இம்ரான் ரியாஸ் (23). இவர் படித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்றவர் மாயமானார்.

    அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த தேவாரம் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை தனது மகனை காணவில்லை என புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தேவாரம்-பாளையம் இடையே உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் இன்று ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு இறந்து கிடந்த வாலிபரின் உடலை மேலே கொண்டு வந்தனர். அப்போது கிணற்றில பிணமாக கிடந்த வாலிபர் முகம் அடையாளம் காணமுடியாக அளவுக்கு சிதைந்து காணப்பட்டது. எனவே இறந்தவர் இம்ரான் ரியாசா? அல்லது வேறு நபரா? என விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வாலிபர் கடந்த 3 நாட்களாக இவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால் அதனை சர்வீஸ் நிலையத்தில் பழுது நீக்க நிறுத்தி இருந்தார்.
    • அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஹெல்மெட் அணி யாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1000 அபராதம் என குறிப்பிடப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மேலதெருவை சேர்ந்தவர் பிரவீன் காந்தி (30). இவர் சொந்தமாக புல்லட் இருசக்கர வாகனம் வைத்து ள்ளார். தனது தோட்டத்து விவசாய பணிக்காக இரட்டை வாய்க்கால்-மூணாறு சாலைக்கு சென்று வருவது வழக்கம்.

    கடந்த 3 நாட்களாக இவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால் அதனை சர்வீஸ் நிலையத்தில் பழுது நீக்க நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஹெல்மெட் அணி யாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1000 அபராதம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    அந்த கட்டண ரசீதில் யமஹா வாகனத்தின் படம் இடம் பெற்றிருந்தது. தான் புல்லட் வைத்திருந்த நிலை யில் யமஹா வாகன த்திற்கு அபராதம் என குறிப்பிட்டு தனது விலாசத்திற்கு வந்த கடிதத்தை எடுத்து க்கொண்டு மோட்டார் வாகன ஆய்வாளரிடம் விவரம் கேட்டார். உங்க ளுக்குதான் ரூ.1000 அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கட்ட வேண்டும் என தெரிவித்து ள்ளார்.

    இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேறுஒரு பைக்கை இட ம்பெற செய்து ஒரு நபருக்கு ரூ.1000 அபராதம் என வந்தது. கூலித்தொழி லாளி யான அவர் தனக்கு விதிக்க ப்பட்ட அபராதத்தை நினைத்து அதிர்ச்சி அடைந்தார். போக்குவரத்து காவலர்கள் இதுபோல அஜாக்கிரதையாக ஏதோ ஒரு வாகனத்திற்கு அபரா தத்தை வேறு ஒருவருக்கு அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக வாகன ஓட்டிகள் தெரி விக்கின்றனர்.

    • வாலிப்பாறை பகுதியில் கருங்காலி மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது
    • சோதனையிட்டதில் 2 கருங்காலி மரக்கட்டைகள் கடத்திய 2 பேரிடம் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள வாலிப்பாறை பகுதியில் கருங்காலி மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை யினர் தும்மக்குண்டு அருகே தேனி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ெகாண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த சாக்குபையை வாங்கி சோதனை யிட்டதில் 2 கரு ங்காலி மரக்க ட்டை கள் இருந்தது தெரிய வந்தது.

    அவர்களை வன ச்சரக அலுவலக த்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த கட்டைகளை கடத்திய தும்மக்கு ண்டுவை சேர்ந்த அன்பு, தேனியை சேர்ந்த நரிக்குறவர் சுதாகர் என தெரியவரவே அவர்களை கைது செய்த னர். அவர்களிடமிருந்து ரூ.20ஆயிரம் மதிப்பிலான கருங்காலி மரக்கட்டைகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வருசநாடு வனச்சரக த்திற்குட்பட்ட பகுதியில் அரியவகை மரங்கள் உள்ளன. குறிப்பாக கருங்காலி மரக்கட்டைகள் என்பது பல ஆண்டுகள் நிலைத்து வளரும் உறுதி யான மரமாகும். இந்த மரங்களை வெட்டி அதிலிருந்து ஜபமாலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாலையின் விலை ரூ.10ஆயிரம் முதல் பல ஆயிரம் வரை விலை கொண்டதாகும்.

    இதனை அவரவர்கள் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளியாலான கம்பி களால் கோர்த்து பயன்படு த்தி வருகின்றனர். இதுபோ ன்ற அபூர்வ வகை மரக்க ட்டைகள் சர்வசாதாரண மாக கடத்தப்பட்டு வருகிறது. இதனைவெட்டும் போதே பிடிக்காமல் கடத்தி கொண்டுவரும்போது பிடித்து அபராதம் வசூலிக்கின்றனர். அபராதம் கட்டத்தவறினால் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர்.

    கடந்த 2 மாதங்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கருங்காலி மரக்கட்டைகள் கடத்தப்பட்டுள்ளன. வனப்பகுதியில் தீ வைத்தும் மரக்கட்டைகளை கடத்தும் வேலையில் சமூகவிரோத கும்பல் ஈடுபட்டு வருகின்ற னர். எனவே இவ்விசயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • விரக்தி அடைந்த அவர் ஆட்டுக்கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • மேல்சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே கோம்பையை சேர்ந்தவர் ராமநாதன்(82). நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் ஆட்டுக்கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அருவியில் குளிக்க 2-வது நாளாக தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழக - கேரள எல்லையில் இந்த அருவி அமைந்திருப்பதால் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் அனைவரும் அருவியில் நீராடி செல்வது வழக்கம்.

    இது தவிர ஆண்டு முழு வதும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள். தற்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் அருவி பகுதியிலேயே யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அருவியில் குளிக்க 2-வது நாளாக தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இன்று ஆடி 18 என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். வனத்துறை தடையால் அவர்கள் ஏமாற்றம் அைடந்தனர். இருந்தபோதும் கோவிலில் சாமி தரிசனம் செய்து ஆற்றில் தாலிக்கயிறு சென்றனர்.

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 121.50 அடியாக உள்ளது. 293 கனஅடிநீர் வருகிறது. 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.77 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.96 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.மழை எங்கும் இல்லை.

    • அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
    • புற்றுக்கோவிலை இடித்து தரைமட்டமாக்கிய அல்லிநகரம் கிராம கமிட்டியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் மனு அளிக்கப்பட்டது.

    தேனி:

    இந்து முன்னணி தேனி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜ் ஆகியோர் ஆலோசனையின்படி தேனி நகர தலைவர் மணிகண்டன் தலைமையில் இந்து முன்னணியினர் தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில், அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை அய்யனாராக பாவித்து பால்குடம், காவடி போன்ற நேர்த்திக்கடன் பக்கர்கள் செய்வது வழக்கம். அல்லிநகரத்தில் கிராம கமிட்டி என்ற பெயரில் சில பேர் மட்டும் இந்து கோவில்களின் ஆகமவிதிகளுக்கு மாறாக பொதுமக்களிடம் எந்த ஒரு கருத்துக்கள் கேட்காமலும் ஆகமவிதியை மீறி சில செயல் களை செயல்படுத்தி உள்ளனர். அதாவது அய்யனார் முன்பாக நந்தீஸ்வரரை வைத்தது அல்லிநகரம் வாழ் இந்து மக்களுக்கு உடன்பாடில்லை.

    இதை மையமாக வைத்து எந்தவித முறையான ரசீதும் இல்லாமல் பணம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் கோவில் எதிர்புறம் இருந்த பெண்கள் வழிபடக்கூடிய புற்றுக் கோவிலை இடித்து விட்டு அந்த இடத்தில் சிமிண்ட் திட்டு கட்டியுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கண்கட்டி, கண்டும் காணாததும் போல் உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

    எனவே புற்றுக்கோவிலை இடித்து தரைமட்டமாக்கிய அல்லிநகரம் கிராம கமிட்டியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • முருகமலை நகரில் வருகிற 9-ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
    • பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    பெரியகுளம் அருகே ஏ.புதுக்கோட்டை முருகமலை நகரில் வருகிற 9-ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்கள் மற்றும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொைக, புதிய ரேசன்அட்டை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விபத்து நிவாரணம்,

    விவசாயத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து ெகாள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • காந்தி சிலை முதல் முத்தாலம்மன் கோவில் வரை அதிக கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னமனூர் நகராட்சி ஆணையாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர்-சீப்பாலக்கோட்டை சாலையில் காந்தி சிலை முதல் முத்தாலம்மன் கோவில் வரை அதிக கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. காந்திசிலை பஸ்நிறுத்தம் பகுதியில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த நிலையில் ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவிகள் மட்டுமல்லாது காலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அதிவேகமாக வாகனங்கள் வருகின்றன. இதனால் சாலையை கடக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து போலீசார்களை நியமித்து விபத்துகளை தடுக்க வேண்டும். காந்திசிலை, தேரடி, மார்க்கையன்கோட்டை, ரவுண்டானா ஆகிய பஸ் நிறுத்தங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னமனூர் நகராட்சி ஆணையாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சின்னமனூர் பகுதியில் அதிகாலையிலேயே மது, கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    • மாணவர்களை குறிவைத்து கள்ளத்தனமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக உள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் பகுதியில் அதிகாலையிலேயே மது, கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதிைய சேர்ந்த பாஸ்கரன் கூறுகையில்,

    ெபாதுமக்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர். ஆனால் பூங்காவில் பல இடங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது.

    அங்கு கள்ளத்தனமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக உள்ளது. இதனால் பெரியவர்கள் உள்பட நடைபயிற்சி செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குடிேபாதையில் சுயநினைவின்றி சாலையிலேயே படுத்து உறங்கும் குடிமகன்கள் பொதுமக்களிடம் தகராறிலும் ஈடுபடுகின்றனர். சின்னமனூர் பகுதியில் போன் செய்தால் வீடு தேடி வந்து மது, கஞ்சா சப்ளை செய்து வருகின்றனர்.

    பெரியவர்கள் மட்டுமல்லாது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் இயங்கி வருகிறது. இதனால் சிறுவயதிலேயே வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர். எனவே போலீசார் மது, கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பூங்காவை சீர் செய்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

    • அரசரடி, கண்டமனூர், வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்ததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்ய வில்லை. இதனால் அரசரடி, கண்டமனூர், வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்ததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்த ப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 48.85 அடியாக சரிந்துள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.55 அடியாக உள்ளது. 294 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 74.09 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    ×