search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடியில் வீட்டு அலங்கார வேலை செய்து தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி
    X

    போடியில் வீட்டு அலங்கார வேலை செய்து தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையது இப்ராஹிம் வீட்டுக்கு ஷீலா வந்தார்.
    • தனது லேப்டாப்பில் பலவிதமான வீட்டு அலங்கார படங்களை காண்பித்து சையது இப்ராஹிமை நம்ப வைத்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அம்மாகுளத்தைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம் (வயது 44). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு உள் அலங்கார வேலை செய்வதற்காக ஆட்களை தேடி வந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் கூறிய ஆலோசனையின் பேரில் சென்னை கொடுங்கையூர் லெட்சுமி அம்மன் நகரைச் சேர்ந்த ஷீலா என்பவரிடம் செல்போன் மூலம் பேசினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையது இப்ராஹிம் வீட்டுக்கு ஷீலா வந்தார். அவர் தனது லேப்டாப்பில் பலவிதமான வீட்டு அலங்கார படங்களை காண்பித்து சையது இப்ராஹிமை நம்ப வைத்தார்.

    உள் அலங்கார வேலைக்கு மொத்தம் ரூ.26 லட்சம் செலவாகும் என தெரிவித்தார். அதன்படி அன்றைய தினமே ரூ.5 லட்சமும், அதன் பிறகு பல தவணைகளாக மொத்தம் ரூ.15.50 லட்சம் பணத்தை ஷீலாவுக்கு கொடுத்தார்.

    பணத்தை பெற்றுக் கொண்டு அவர் வீட்டு அலங்கார வேலையை செய்து தராமல் ஏமாற்றியுள்ளார். மேலும் செல்போன் இணைப்பையும் துண்டித்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சையது இப்ராஹிம் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×