போடி அருகே நோய்கொடுமையால் முதியவர் தற்கொலை

விரக்தி அடைந்த அவர் ஆட்டுக்கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். மேல்சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே கோம்பையை சேர்ந்தவர் ராமநாதன்(82). நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் ஆட்டுக்கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com