என் மலர்tooltip icon

    தேனி

    • தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அருவியில் குளிக்க 2-வது நாளாக தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழக - கேரள எல்லையில் இந்த அருவி அமைந்திருப்பதால் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் அனைவரும் அருவியில் நீராடி செல்வது வழக்கம்.

    இது தவிர ஆண்டு முழு வதும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள். தற்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் அருவி பகுதியிலேயே யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அருவியில் குளிக்க 2-வது நாளாக தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இன்று ஆடி 18 என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். வனத்துறை தடையால் அவர்கள் ஏமாற்றம் அைடந்தனர். இருந்தபோதும் கோவிலில் சாமி தரிசனம் செய்து ஆற்றில் தாலிக்கயிறு சென்றனர்.

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 121.50 அடியாக உள்ளது. 293 கனஅடிநீர் வருகிறது. 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.77 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.96 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.மழை எங்கும் இல்லை.

    • அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
    • புற்றுக்கோவிலை இடித்து தரைமட்டமாக்கிய அல்லிநகரம் கிராம கமிட்டியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் மனு அளிக்கப்பட்டது.

    தேனி:

    இந்து முன்னணி தேனி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜ் ஆகியோர் ஆலோசனையின்படி தேனி நகர தலைவர் மணிகண்டன் தலைமையில் இந்து முன்னணியினர் தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில், அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை அய்யனாராக பாவித்து பால்குடம், காவடி போன்ற நேர்த்திக்கடன் பக்கர்கள் செய்வது வழக்கம். அல்லிநகரத்தில் கிராம கமிட்டி என்ற பெயரில் சில பேர் மட்டும் இந்து கோவில்களின் ஆகமவிதிகளுக்கு மாறாக பொதுமக்களிடம் எந்த ஒரு கருத்துக்கள் கேட்காமலும் ஆகமவிதியை மீறி சில செயல் களை செயல்படுத்தி உள்ளனர். அதாவது அய்யனார் முன்பாக நந்தீஸ்வரரை வைத்தது அல்லிநகரம் வாழ் இந்து மக்களுக்கு உடன்பாடில்லை.

    இதை மையமாக வைத்து எந்தவித முறையான ரசீதும் இல்லாமல் பணம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் கோவில் எதிர்புறம் இருந்த பெண்கள் வழிபடக்கூடிய புற்றுக் கோவிலை இடித்து விட்டு அந்த இடத்தில் சிமிண்ட் திட்டு கட்டியுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கண்கட்டி, கண்டும் காணாததும் போல் உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

    எனவே புற்றுக்கோவிலை இடித்து தரைமட்டமாக்கிய அல்லிநகரம் கிராம கமிட்டியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • முருகமலை நகரில் வருகிற 9-ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
    • பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    பெரியகுளம் அருகே ஏ.புதுக்கோட்டை முருகமலை நகரில் வருகிற 9-ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்கள் மற்றும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொைக, புதிய ரேசன்அட்டை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விபத்து நிவாரணம்,

    விவசாயத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து ெகாள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • காந்தி சிலை முதல் முத்தாலம்மன் கோவில் வரை அதிக கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னமனூர் நகராட்சி ஆணையாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர்-சீப்பாலக்கோட்டை சாலையில் காந்தி சிலை முதல் முத்தாலம்மன் கோவில் வரை அதிக கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. காந்திசிலை பஸ்நிறுத்தம் பகுதியில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த நிலையில் ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவிகள் மட்டுமல்லாது காலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அதிவேகமாக வாகனங்கள் வருகின்றன. இதனால் சாலையை கடக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து போலீசார்களை நியமித்து விபத்துகளை தடுக்க வேண்டும். காந்திசிலை, தேரடி, மார்க்கையன்கோட்டை, ரவுண்டானா ஆகிய பஸ் நிறுத்தங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னமனூர் நகராட்சி ஆணையாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சின்னமனூர் பகுதியில் அதிகாலையிலேயே மது, கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    • மாணவர்களை குறிவைத்து கள்ளத்தனமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக உள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் பகுதியில் அதிகாலையிலேயே மது, கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதிைய சேர்ந்த பாஸ்கரன் கூறுகையில்,

    ெபாதுமக்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர். ஆனால் பூங்காவில் பல இடங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது.

    அங்கு கள்ளத்தனமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக உள்ளது. இதனால் பெரியவர்கள் உள்பட நடைபயிற்சி செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குடிேபாதையில் சுயநினைவின்றி சாலையிலேயே படுத்து உறங்கும் குடிமகன்கள் பொதுமக்களிடம் தகராறிலும் ஈடுபடுகின்றனர். சின்னமனூர் பகுதியில் போன் செய்தால் வீடு தேடி வந்து மது, கஞ்சா சப்ளை செய்து வருகின்றனர்.

    பெரியவர்கள் மட்டுமல்லாது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் இயங்கி வருகிறது. இதனால் சிறுவயதிலேயே வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர். எனவே போலீசார் மது, கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பூங்காவை சீர் செய்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

    • அரசரடி, கண்டமனூர், வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்ததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்ய வில்லை. இதனால் அரசரடி, கண்டமனூர், வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்ததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்த ப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 48.85 அடியாக சரிந்துள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.55 அடியாக உள்ளது. 294 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 74.09 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • தோட்ட வேலைக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சீலையம்ப ட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது45). இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தம்பதி கூலி வேலை செய்து வந்தனர்.

    தோட்ட வேலைக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
    • மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்ைத சேர்ந்தவர் மாரிமுத்து (வயது35). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு 3 குழந்தைகளுடன் பெற்ேறார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மாரிமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழக-கேரள எல்லையில் இந்த அருவி அமைந்திருப்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அருவியில் நீராடி செல்வது வழக்கம்.

    இது தவிர ஆண்டு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள். தற்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு வனச்சரகர் பிச்சை மணி தெரிவிக்கையில், அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்றார். நாளை ஆடி 18-ம் பெருக்கு என்பதால் அருவியில் ஏராளமானோர் நீராட வருகை தருவார்கள். இந்நிலையில் வனத்துறையினரின் இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகள் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெற்றுதருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பயிற்சியினை பெற 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேனி:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டபடிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

    அதனடிப்படையில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகள் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெற்றுதருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயிற்சியினை பெற 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.

    மேலும் இதுதொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்

    • தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் பறக்கும்படை தனி தாசில்தார் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த 30-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அந்த லாரியில் 3 டன் அளவில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவத்தின் போது லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரது செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் பதிவான அழைப்புகளை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த ஒச்சு, லாரி டிரைவர், லோடு மேன் பீமன், நுகர்பொருள் வாணிப கழக இளநிலை தர நிர்ணய ஆய்வாளர் தமிழ்செல்வன், எழுத்தர் சுரேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் இந்துமதி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை கலெக்டருக்கு அளித்தனர்.

    அந்த அறிக்கையில் குடோன் இறநிலை தரஆய்வாளர் தமிழ்செல்வன், பட்டியல் எழுத்தர்கள் சுரேஷ், சதாசிவம் ஆகியோர் ஒச்சு, டிரைவரை பலமுறை செல்போனில் அழைத்து பேசியுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா பரிந்துரையின் பேரில் தமிழ்செல்வம், சுரேஷ், சதாசிவம் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து மண்டல முதுநிலை மேலாளர் உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 30 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டுள்ளது.
    • வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறோம்.

    தேனி:

    தேனி பங்களாமேட்டில் இன்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது,

    தான் முதல்-அமைச்சர் ஆனவுடன் 3 மாதங்களில் கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடிப்பேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் 30 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் இந்த வழக்கில் குற்றம் செய்தவர்கள் யார் என்பதை அறிய ஆவலுடன் உள்ளனர்.

    எனவே இந்த வழக்கில் கொலை செய்தவர்கள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அதனை உணர்த்தும் வகையில் தான் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இனியும் காலம் தாழ்த்தினால் அ.ம.மு.க. தொண்டர்களுடன் இணைந்து இந்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்.

    எப்போதுமே மின்இணைப்பு துண்டிக்கப்படாமல் செயல்படும் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது மட்டுமின்றி, சிலமணிநேரம் மட்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பதவி ஆசை கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கில் அக்கறைகாட்டாமல் தனது பதவியை தக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார். நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவது தெரிந்தவுடன் முன்னாள் அமைச்சர்கள் எங்களை கேலி செய்கின்றனர்.

    இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து கண்டன கோஷங்களை ஓ.பி.எஸ், தினகரன் எழுப்ப, அதனை தொண்டர்கள் மீண்டும் கூறி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

    ×