என் மலர்tooltip icon

    தேனி

    • சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கிறது. மேலும் சாலையின் குறுக்கே திடீரென கூட்டமாக வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
    • தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    போடி:

    போடி நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கிறது. மேலும் சாலையின் குறுக்கே திடீரென கூட்டமாக வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். தெருநாய்கள் தொல்லை யால் குழந்தைகளை தெருவில் விளையாட பெற்றோர் அனுமதிப்ப தில்லை. மேலும் பெரியவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களின் எண்ணி க்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் மற்றும் ஆணையாளர் ராஜலட்சுமி ஆகியோர் உத்தரவிட்டனர். அதன் பேரில் நகராட்சி பகுதியில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதில் முதல் கட்டமாக 200 நாய்கள் பிடிக்கப்பட்டது. அந்த நாய்களுக்கு போடி மயானக்கரை ரோட்டில் உள்ள நகராட்சி கருத்தடை மையத்தில் வைத்து விலங்கு கள் நல வாரி யத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திருநெல்வேலி நிறுவனம் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அந்த நாய்களுக்கு கால்நடை மருத்துவர் மூலம் வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்த பணிகள் துப்புரவு ஆய்வா ளர்கள் மணிகண்டன், சுரேஷ்குமார், அகமது கபீர், கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் நடை பெற்றது.

    • தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் 8-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் தேனியில் நடைபெற்றது.
    • தேனி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் 8-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் தேனியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன். ரவி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இராமராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சோலைராஜன் வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விஜயா எலக்ட்ரிக்கல் உரிமையாளர் பாலாஜி, வினோரா பவுண்டேசன் நிறுவனர் ராஜன் மற்றும் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட தேனி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று 350-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் மற்றும் ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட பொதுச்செய லாளர் மாய.லோகநாதன் நன்றி கூறினார்.

    • போடி சில்லமரத்து ப்பட்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் தோட்டத்தில் இரும்பு கம்பிகள் வைத்தி ருந்தார்.
    • இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி சில்லமரத்து ப்பட்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது52). இவரது தோட்டத்தில் இரும்பு கம்பிகள் வைத்தி ருந்தார்.

    அதனை ஜீவா காலனியை சேர்ந்த பூபதி (23), பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகேஸ் (22), மதுரை வீரன் தெருவை சேர்ந்த பாண்டிமுருகன் (23) ஆகியோர் திருடிச் சென்றனர்.

    இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். சம்பவத்தன்று தனியார் பண்ணைக்கு அருகே மறைந்திருந்த அவர்கள் 3 பேரையும் பிடித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சண்முகவேல் ஒப்படைத்தார். போலீசார்அவர்களை கைது செய்து இரும்பு கம்பிகளையும் பறிமுதல் செய்தனர்.

    • பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டி, மேல்ம ங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி வழியாக தேவ தானப்பட்டி மெயி ன்ரோ ட்டை அடைவதற்கு போதிய பஸ்கள் இயக்கப்படு வதில்லை.
    • மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்ப டைந்து வருகின்ற னர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் வடுக பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், பொம்மி நாயக்கன்பட்டி, சில்வா ர்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு சொந்த பணி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாண வர்களும் செல்கின்றனர். 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியூருக்கு சென்றுவரும் நிலையில் பெரியகுளத்தில் இருந்து ஆண்டிபட்டி வழித்தடத்திற்கு அதிக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டி, மேல்ம ங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி வழியாக தேவ தானப்பட்டி மெயி ன்ரோ ட்டை அடைவதற்கு போதிய பஸ்கள் இயக்கப்படு வதில்லை. இதனால் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்ப டைந்து வருகின்ற னர். குறிப்பாக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக செல்பவர்கள் போக்குவரத்து வசதி பற்றாக்குறையால் சிரமமடைந்து வருகின்றனர்.

    எனவே தேவதானப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து ஜெயமங்கலம் வழியாக க.விலக்கிற்கு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மற்ற வழித்தடங்களை போலவே இந்த வழித்த டத்திலும் போதிய பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • இந்த வளாகத்தில் 70திற்கும் மேற்பட்ட வணிக கடைகள், விவசாயிகள் தங்கும் அறைகள், கழிப்பறைகள், வாகனங்கள் தடையின்றி வந்து செல்ல சாலை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.
    • வருகின்ற 10ந் தேதி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விவசாயிகள், வியாபாரிக ளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

    சின்னமனூர்:

    தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சின்னமனூர் நகரில் முதன் முதலாக மெகா மொத்த காய்கறி வளாகம் அமைப்பதற் கான கோரி க்கையை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறினேன்.

    அதனை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தார். தற்போது ரூ. 37 கோடி நிதியில் சின்னமனூரில் அமைக்க உத்தரவிட்டு ள்ளார்.

    தமிழகத்தில் கோவை, குனியமுத்தூர் பகுதியிலும், நாகர்கோவில் மார்த்தாண்டத்திலும் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பயன் பெறும் விதமாக மெகா காய்கறி மொத்த வளாகச் சந்தையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூரில் தமிழக த்தின் 3வது இடமாக தேனி மாவட்டத்தின் முதல் இடமாக அமைய இருக்கிறது.இந்த வளாகத்தில் 70திற்கும் மேற்பட்ட வணிக கடைகள், விவசாயிகள் தங்கும் அறைகள், கழிப்பறைகள், வாகனங்கள் தடையின்றி வந்து செல்ல சாலை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.

    இதில் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட விகிதத்தில் நல்ல விலை நிர்ணயமாக கிடைப்பதற்கு வழி வகை ஏற்படுத்தப்படும். வெளி நாடுகளுக்கு வாழை மற்றும் காய் கறிகளை கொண்டு செல்வதற்கு சரியான கட்டமைப்பு இல்லாததால் இங்கு உருவா க்கப்பட்டு வெளிநாடு களுக்கு அனுப்பி வைப்ப தற்கு சந்தைப்படுத்து வதற்கும் அனைத்து பணி களும் இங்கு நடைபெறும்.

    அதற்காக 4 ஏக்கரில் ரூ.37 கோடி மதிப்பில் செயல் படுத்தப்பட இருக்கி றது. வருகின்ற 10ந் தேதி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விவசாயிகள், வியாபாரிக ளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இப்பகுதியில் 14000 ஹெக்டேரில் ஜி9 வாழை, நேந்திரம், நாளிப் பூவன் உள்ளிட்ட வாழைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிகளவில் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    2023- 24 ஆண்டு வேளாண்மை துறை சார்பில் ரூ.130 கோடியில் வாழை காய்கறிகளை பாதுகாக்க குளிரூட்டும் தொழிற்சாலை 5 ஏக்கரில் உருவாக்கப்பட இருக்கிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள்.

    மின்சாரம் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் துணை மின்நிலையம் அமைப்பதற்கு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. மேலும் 10கும் மேற்பட்ட மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு பழுது ஆகாத பியூஸ் போகாத ளவிற்கு சின்னமனூர் 27 வார்டுகளில் வெளிச்சத்தி ற்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஒரு வருடத்திற்குள் தேனி மாவட்டம் உள்பட சின்ன மனூரில் அதிகளவு விவசா யம் நடை பெறுவதால் பெரும் வர்த்தக மையமாக சின்னமனூர் அமையும் என்று கூறினார்.

    அப்போது நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், சின்னமனூர் தி.மு.க. பிரமுகர் பஞ்சாப்முத்துக்குமரன், மாவட்ட விவசாய தொழி லாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட விவசாய அணி அக்கீம் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • ராயப்பன்பட்டி, அணைப்பட்டி பகுதிகளில் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அவரை கைது செய்து கஞ்சா மற்றும் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து ராயப்பன்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சண்முகாநதி அணை செல்லும் பாதையில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை நடப்பதாக மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராயப்பன்பட்டி, அணைப்பட்டி பகுதிகளில் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சண்முகா நதி அணை செல்லும் சாலையில் உள்ள நேரு என்பவரது வீட்டை சோதனையிட்டனர். அதில் அவர் 300 கிராம் கஞ்சா மற்றும் 5 டெட்டனேட்டர்கள் பதுக்கியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நேருவை கைது செய்து கஞ்சா மற்றும் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து ராயப்பன்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் அவரது மகன் கவுதமுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை பிடித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாம் இயக்கத்தின் மாநில தலைவர் தென்னை விவசா யிகளின் கஷ்டங்களை யும் தென்னை விவசாயத்தை காக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
    • தமிழக அரசு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

    கம்பம்:

    தென்னை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் கம்பத்தில் நடைபெற்றது. விவசாயி ஹரிஹரன் தலைமை தாங்கினார். தேனி மாவட்டத் தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். விவசாயிகள் நாராயணசாமி, வீரமணி, ஜெயக்குமார், பால்ராஜ், ராமராஜ், தர்மர் தென்னை விவசாயிகளின் நிலை குறித்து பேசினர்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாம் இயக்கத்தின் மாநில தலைவர் பிரபு ராஜா, தென்னை விவசா யிகளின் கஷ்டங்களை யும் தென்னை விவசாயத்தை காக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

    ஆலோசனைக் கூட்டத்தில் தென்னை விவசா யிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும், கொப்பரைக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையான ஒரு கிலோ ரூ.105.90-ல் இருந்து ரூ.130-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்,

    தென்னை விவசா யிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்கும் பொருட்டும், மரமேறும் தொழிலா ளர்களின் பொருளா தாரத்தை உயர்த்தும் பொருட்டும், கிராமத்தின் பொருளா தாரத்தை மேம்படுத்தும் பொருட்டும் தமிழக அரசு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் பெரியாறுவைகை பாச னவிவசாய சங்கதலைவர் பொன் காட்சிக்கண்ணன் நன்றி கூறினார்.

    • இடுக்கி மாவட்டத்திலும் தமிழ கத்தில் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்று ப்பகுதி களிலும் தென்மேற்கு பருவக்காற்று மழை சரிவர பெய்யாததால் ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்து குறைந்தது.
    • ஏலக்காய் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.2000 தாண்டி விற்பனையாவதால் விவசாயிகளும், ஏலக்காய்களை இருப்பு வைத்து வர்த்தகம் செய்யும் வியாபாரிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    போடி:

    தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் ஏலக்காய் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மிகவும்பிரசித்தி பெற்றது. இந்தியாவிலேயே அதிக அளவில் ஏலக்காய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் இங்கு நடைபெறுவதால் இதற்கு ஏலக்காய் நகர் என்று மற்றொரு பெயரும் உண்டு. இங்குள்ள போடி மற்றும் கேரள எல்லைப் பகுதிகளான பூப்பாறை, வண்டமேடு, தோண்டி மலை, ராஜா காடு, பியால் ராவ், கஜானா பாறை போன்ற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் ஏலக்காய் போடி நகரில் உள்ள மத்திய அரசு ஸ்பைசஸ் போர்டு ஏலக்காய் வர்த்தக மையம் மற்றும் பல்வேறு தனியார் மையங்கள் மூலம் காய்கள் ரகம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வியாபா ரிகளால் கொள்முதல் செய்ய ப்படுகிறது.

    அதன்பின் பல்வேறு ரகங்களாக பிரிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இடுக்கி மாவட்டத்திலும் தமிழ கத்தில் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்று ப்பகுதி களிலும் தென்மேற்கு பருவக்காற்று மழை சரிவர பெய்யாததால் ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்து குறைந்தது.

    கடந்த மாதம் வரை முதல் ரகம் சார்ந்த ஏலக்காய் கிலோ ரூ.1800 வரை விற்கப்பட்ட நிலையில் கடந்த 10 தினங்களாக கிலோ ரூ.600லிருந்து ரூ.800 வரை உயர்ந்து தற்போது ரூ.2400 முதல் ரூ.2600 வரை விற்கப்படுகிறது. கிலோ ரூ.1200 முதல் ரூ.1400 வரை விற்கப்பட்ட ரகம் பிரிக்கப்படாத ஏலக்காய் தற்போது ரூ.1800 முதல் ரூ.2,100 வரை விற்க ப்படுகிறது.

    விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏலக்காய் விலை உயர்வு அதிக லாபத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.ஆனாலும் விலை உயர்வுக்கு முன்பு அண்டை மாநிலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஏலக்காய் ஏற்றுமதி வர்த்தகம் செய்பவர்களுக்கு இந்த விலை உயர்வினால் எந்தவித பலனும் இன்றி வேதனை அடைந்துள்ளனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 3000 தாண்டி விற்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலக்காய் விலை கடும் சரிவை சந்தித்து வந்தது. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பின்பு ஏலக்காய் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.2000 தாண்டி விற்பனையாவதால் விவசாயிகளும், ஏலக்காய்களை இருப்பு வைத்து வர்த்தகம் செய்யும் வியாபாரிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    • 2-ம் கட்டமாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திம்மரசநாயக்கனூர், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, ராஜதானி ஆகிய ஊராட்சி பகுதிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அந்த நாளில் பதிவு செய்ய தவறவிட்டவர்கள் கடைசி 2 நாட்களில் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கடந்த மாதம் 24ந் தேதி தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்ய முதற்கட்டமாக உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய வட்டங்களில் 24.07.2023 முதல் 04.08.2023 வரை 259 முகாம்கள் நடத்தப்பட்டு 1,50,517 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    2-ம் கட்டமாக தேனி, ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர் ஆகிய வட்டங்களில் நேற்று முதல் 16-ந் தேதி வரை 258 முகாம்கள் நடைபெற உள்ளதை தொடர்ந்து ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திம்மரசநாயக்கனூர், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, ராஜதானி ஆகிய ஊராட்சி பகுதிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது அவர் தெரிவித்ததாவது:-

    பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் இணைய பதிவு செய்யப்பட்டு ஒப்பு கைச்சிட்டு வழங்கப்படும். சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, ரேசன் அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, டோ க்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் பொதுமக்கள் வருகை தந்து தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அந்த நாளில் பதிவு செய்ய தவறவிட்டவர்கள் கடைசி 2 நாட்களில் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • இத்திட்டத்திற்கான யு.பி.எஸ் உள்ளிட்ட உபகரண ங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.
    • இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும்.

    தேனி:

    தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணை ப்பானது, 85% மின்க ம்பங்கள் மூலமாகவும், 15% தரை வழியாகவும் இணைத்திட நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கான யு.பி.எஸ் உள்ளிட்ட உபகரண ங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்த ப்பட்டுள்ள அறையானது சம்பந்த ப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்க ப்பட்டு வரு கிறது.

    இத்திட்ட த்திற்கான உபகரணங்களை பாதுகா த்திடவும். தடை யில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்தி டவும், பி.ஒ.பி பொறுத்த ப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் சம்பந்த ப்பட்ட கிராம ஊராட்சி செயலா ளர்களால் கண்காணிக்கப்பட உள்ளது.

    இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பி.ஒ.பி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யு.பி.எஸ் மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகள்.

    எனவே உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவி த்துள்ளார்.

    • தென்மேற்கு பருவமழை ஜுன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை.
    • இன்று காலை நிலவரப்படி 48.52 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மூலவைகையாறு, சுருளியாறு, கொட்டக்குடி ஆறு, வறட்டாறு, வராகநதி மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.

    தென்மேற்கு பருவமழை ஜுன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் வறண்டன. குறிப்பாக அரசரடி, வெள்ளிமலை, வருசநாடு, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து இன்று காலை நிலவரப்படி 48.52 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.30 அடியாக உள்ளது. 176 கன அடி நீர் வருகிறது. நேற்று 290 கன அடி நீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது. நீர் திறப்பு 400 கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.95 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் மட்டும் 0.2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைவால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    • பழைய பைபாஸ் சாலையில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • கும்பல் மாந்திரீக வேலையில் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரளாவில் மாந்திரீக பூஜைகள் செய்து பணம் இரட்டிப்பு மோசடி செய்து வரும் கும்பல் தேனியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுக்குமாரி தலைமையில் போலீசார் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பழைய பைபாஸ் சாலையில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அந்த காரில் இருந்த நபர்கள் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் நாக்கு, கல்லீரல், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகள் பேக்கிங் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதுதவிர எலுமிச்சைபழம், சூடம், முட்டை போன்றவைகளும் இருந்தன.

    அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை அய்யனார்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி(38), ராதநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த டேவிட்பிரதாப்சிங்(40), பசும்பொன் கிராமத்தை சேர்ந்த முருகன்(65) என தெரியவந்தது. இவர்களுடன் வந்த உத்தமபாளையம் பாறைமேடு தெருவை சேர்ந்த மந்திரவாதி ஜேம்ஸ்(52) என்பவர் தப்பிஓடிவிட்டார்.

    இந்த கும்பல் மாந்திரீக வேலையில் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், உத்தமபாளையத்தை சேர்ந்த ஜேம்ஸ் மாந்திரீக வேலையில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் பிடிபட்ட 3 பேரும் குறுகிய காலத்தில் பணக்காரர்களாக மாறுவது எப்படி? என்றும் அதற்கு பூஜைகள் உள்ளதா எனவும் கேட்டுள்ளனர். இதனையடுத்து ஜேம்ஸ் அவர்களிடம் ரூ.5லட்சம், ரூ.2 லட்சம் என தொகை நிர்ணயம் செய்து கேரள மாநிலம் வண்டிபெரியாறில் ஒரு மந்திரவாதி உள்ளார். அவரிடம் சென்று பணத்தை கொடுத்து அவர் கொடுக்கும் பொருளை வாங்கி வாருங்கள். அந்த பொருளை நான் பூஜை செய்து தருகிறேன். அதன்பிறகு வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் பணமழை கொட்டும் என சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனைநம்பிய அலெக்ஸ்பாண்டி, டேவிட், முருகன் ஆகிய 3 பேரும் கேரளமாநிலம் வண்டிபெரியாருக்கு சென்றனர்.

    ஜேம்ஸ் கொடுத்த விலாசத்திற்கு சென்ற அவர்கள் மந்திரவாதி பூஜை செய்து கொடுத்த சூட்கேசுடன் தேனிக்கு வந்துள்ளனர். வரும் வழியில் பெட்டியை திறந்து பார்க்க கூடாது. அவ்வாறு திறந்து பார்த்தால் பொருளின் சக்தி மறைந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் பணத்தை கொடுத்துவிட்டு பெட்டியில் என்ன இருக்கிறது என தெரியாமல் அதனை வாங்கி வந்துள்ளனர். பெட்டியில் இருந்த மூளை, நாக்கு, கல்லீரல் உள்ளிட்ட பொருட்கள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இவை நரபலி கொடுத்து எடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மந்திர வேலைகளில் ஈடுபடும் கும்பல் பலரிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. வண்டிபெரியாறை சேர்ந்த மந்திரவாதி தற்போது தனிப்படை போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளார். அவரை தேனிக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த உள்ளோம். அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த மோசடியில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என தெரியவரும். தற்போது தலைமறைவாக உள்ள ஜேம்ஸ் என்பவரையும் தீவிரமாக தேடி வருகிறோம். இவர் மீது ஏற்கனவே இதுபோன்ற மோசடி புகார்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பொதுமக்கள் இந்த கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்து இருந்தால் அதுகுறித்து போலீசில் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்றனர்.

    ×