search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dam water level"

    • தென்மேற்கு பருவமழை ஜுன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை.
    • இன்று காலை நிலவரப்படி 48.52 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மூலவைகையாறு, சுருளியாறு, கொட்டக்குடி ஆறு, வறட்டாறு, வராகநதி மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.

    தென்மேற்கு பருவமழை ஜுன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் வறண்டன. குறிப்பாக அரசரடி, வெள்ளிமலை, வருசநாடு, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து இன்று காலை நிலவரப்படி 48.52 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.30 அடியாக உள்ளது. 176 கன அடி நீர் வருகிறது. நேற்று 290 கன அடி நீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது. நீர் திறப்பு 400 கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.95 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் மட்டும் 0.2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைவால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    • அணைக்கு வினாடிக்கு 236 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
    • 1005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 80.36 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 236 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வாய்க்காலுக்கு 5 கனஅடியும், அரக்கன்கோட்டை தடப்பள்ளிக்கு 800 கனஅடியும், குடிநீருக்காக 200 கனஅடியும் என மொத்தம் 1005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணை பகுதியில் நேற்று 5.2 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    • பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • 288 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணைக்கு வரும் நீரும் குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.51 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 288 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு 50 கனஅடி நீர் வருகிறது. 256 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2051 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.80 அடியாக உள்ளது. அணைக்கு 50 கனஅடி நீர் வருகிறது. 256 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2051 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது.

    அணைக்கு 163 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர மக்களின் குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2555 மி.கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. நீர்வரத்தும், திறப்பும் இல்லை. இருப்பு 149.08 மி.கனஅடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 44.94 அடியாக உள்ளது. அணைக்கு 13 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 12.80 மி.கனஅடியாக உள்ளது. தேக்கடி 3.2, கொடைக்கானல் 9.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.18 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு, மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே அனைத்து வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து 2-ம் போக புஞ்சை பாசனத்தி ற்காக கீழ்ப்பவானி வாய்க்கா லுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 1800 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1000 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 2950 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

    மழை நின்றபோதிலும் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து 69 அடியிலேயே நீடித்துவருகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் இந்த வருடம் 142 அடி வரை தேக்கப்பட்டது.

    பின்னர் அணையில் இருந்து திறக்கப்பட்ட கூடுதல் நீரால் வைகை அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.

    இதன் பின் திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காகவும், 18-ம் கால்வாய் பாசனத்திற்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத போதும் வைகை அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.16 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1800 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2206 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6914 மி.கன அடி.

    வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 2194 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5571 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.95 அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 117.09 அடியாகவும் உள்ளது.

    ×