search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaikai Dam"

    • தென்மேற்கு பருவமழை ஜுன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை.
    • இன்று காலை நிலவரப்படி 48.52 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மூலவைகையாறு, சுருளியாறு, கொட்டக்குடி ஆறு, வறட்டாறு, வராகநதி மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.

    தென்மேற்கு பருவமழை ஜுன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் வறண்டன. குறிப்பாக அரசரடி, வெள்ளிமலை, வருசநாடு, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து இன்று காலை நிலவரப்படி 48.52 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.30 அடியாக உள்ளது. 176 கன அடி நீர் வருகிறது. நேற்று 290 கன அடி நீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது. நீர் திறப்பு 400 கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.95 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் மட்டும் 0.2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைவால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    • மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் ஆக்கிரமிப்பு வயல்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ஆண்டிப்பட்டி:

    மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வைகையின் துணை ஆறுகளான பாம்பாறு, சுருளியாறு, கொட்டக்குடி, வரட்டாறு, வராகநதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    தொடர்மழை காரணமாக வைகைஅணை முழுகொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் தண்ணீர் கூடுதலாக திறக்கப்படுகிறது. இதனால் அணைப்பகுதி கடல்போல் காட்சியளிக்கிறது. நீர்தேக்க பகுதிகளை ஒட்டி வடவீரநாயக்கன்பட்டி, சொக்கதேவன்பட்டி, பின்னத்தேவன்பட்டி, வீரசின்னம்மாள்புரம், மதுராபுரி, அழகாபுரி, அம்மாபுரம், சக்கரைப்பட்டி, சாவடிபட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    கடைசி பகுதிகள் பெரும்பாலும் வறண்டே காணப்படும். எனவே இதனைபயன்படுத்தி சிலர் இடத்தை ஆக்கிரமித்து வெண்டைக்காய், தக்காளி, பச்சைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். அணையின் நீர்மட்டம் 68 அடிக்குமேல் உயரும்போதுதான் இப்பகுதியில் நீர்தேங்கும். எனவே சிலர் வாழை, தென்னை உள்ளிட்டவற்றையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அரப்படிதேவன்பட்டி, குன்னூர், காமக்காபட்டி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வயல்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுபோன்ற நிலையை தவிர்க்க பொதுப்பணித்துறையினர் நீர்தேக்க பகுதி எல்லைகளை அளவீடு செய்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆக்கிரமிக்கப்பட்ட வயல்களில் சேதம் ஏற்பட்டுள்ளதால் அரசின் இழப்பீட்டை பெறமுடியாது என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×