என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு நாய்களுக்கு கருத்தடை"

    • சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கிறது. மேலும் சாலையின் குறுக்கே திடீரென கூட்டமாக வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
    • தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    போடி:

    போடி நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கிறது. மேலும் சாலையின் குறுக்கே திடீரென கூட்டமாக வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். தெருநாய்கள் தொல்லை யால் குழந்தைகளை தெருவில் விளையாட பெற்றோர் அனுமதிப்ப தில்லை. மேலும் பெரியவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களின் எண்ணி க்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் மற்றும் ஆணையாளர் ராஜலட்சுமி ஆகியோர் உத்தரவிட்டனர். அதன் பேரில் நகராட்சி பகுதியில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதில் முதல் கட்டமாக 200 நாய்கள் பிடிக்கப்பட்டது. அந்த நாய்களுக்கு போடி மயானக்கரை ரோட்டில் உள்ள நகராட்சி கருத்தடை மையத்தில் வைத்து விலங்கு கள் நல வாரி யத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திருநெல்வேலி நிறுவனம் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அந்த நாய்களுக்கு கால்நடை மருத்துவர் மூலம் வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்த பணிகள் துப்புரவு ஆய்வா ளர்கள் மணிகண்டன், சுரேஷ்குமார், அகமது கபீர், கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் நடை பெற்றது.

    ×