என் மலர்
தேனி
- சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாம் இயக்கத்தின் மாநில தலைவர் தென்னை விவசா யிகளின் கஷ்டங்களை யும் தென்னை விவசாயத்தை காக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
- தமிழக அரசு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது.
கம்பம்:
தென்னை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் கம்பத்தில் நடைபெற்றது. விவசாயி ஹரிஹரன் தலைமை தாங்கினார். தேனி மாவட்டத் தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். விவசாயிகள் நாராயணசாமி, வீரமணி, ஜெயக்குமார், பால்ராஜ், ராமராஜ், தர்மர் தென்னை விவசாயிகளின் நிலை குறித்து பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாம் இயக்கத்தின் மாநில தலைவர் பிரபு ராஜா, தென்னை விவசா யிகளின் கஷ்டங்களை யும் தென்னை விவசாயத்தை காக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் தென்னை விவசா யிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும், கொப்பரைக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையான ஒரு கிலோ ரூ.105.90-ல் இருந்து ரூ.130-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்,
தென்னை விவசா யிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்கும் பொருட்டும், மரமேறும் தொழிலா ளர்களின் பொருளா தாரத்தை உயர்த்தும் பொருட்டும், கிராமத்தின் பொருளா தாரத்தை மேம்படுத்தும் பொருட்டும் தமிழக அரசு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் பெரியாறுவைகை பாச னவிவசாய சங்கதலைவர் பொன் காட்சிக்கண்ணன் நன்றி கூறினார்.
- இடுக்கி மாவட்டத்திலும் தமிழ கத்தில் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்று ப்பகுதி களிலும் தென்மேற்கு பருவக்காற்று மழை சரிவர பெய்யாததால் ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்து குறைந்தது.
- ஏலக்காய் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.2000 தாண்டி விற்பனையாவதால் விவசாயிகளும், ஏலக்காய்களை இருப்பு வைத்து வர்த்தகம் செய்யும் வியாபாரிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
போடி:
தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் ஏலக்காய் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மிகவும்பிரசித்தி பெற்றது. இந்தியாவிலேயே அதிக அளவில் ஏலக்காய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் இங்கு நடைபெறுவதால் இதற்கு ஏலக்காய் நகர் என்று மற்றொரு பெயரும் உண்டு. இங்குள்ள போடி மற்றும் கேரள எல்லைப் பகுதிகளான பூப்பாறை, வண்டமேடு, தோண்டி மலை, ராஜா காடு, பியால் ராவ், கஜானா பாறை போன்ற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் ஏலக்காய் போடி நகரில் உள்ள மத்திய அரசு ஸ்பைசஸ் போர்டு ஏலக்காய் வர்த்தக மையம் மற்றும் பல்வேறு தனியார் மையங்கள் மூலம் காய்கள் ரகம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வியாபா ரிகளால் கொள்முதல் செய்ய ப்படுகிறது.
அதன்பின் பல்வேறு ரகங்களாக பிரிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இடுக்கி மாவட்டத்திலும் தமிழ கத்தில் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்று ப்பகுதி களிலும் தென்மேற்கு பருவக்காற்று மழை சரிவர பெய்யாததால் ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்து குறைந்தது.
கடந்த மாதம் வரை முதல் ரகம் சார்ந்த ஏலக்காய் கிலோ ரூ.1800 வரை விற்கப்பட்ட நிலையில் கடந்த 10 தினங்களாக கிலோ ரூ.600லிருந்து ரூ.800 வரை உயர்ந்து தற்போது ரூ.2400 முதல் ரூ.2600 வரை விற்கப்படுகிறது. கிலோ ரூ.1200 முதல் ரூ.1400 வரை விற்கப்பட்ட ரகம் பிரிக்கப்படாத ஏலக்காய் தற்போது ரூ.1800 முதல் ரூ.2,100 வரை விற்க ப்படுகிறது.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏலக்காய் விலை உயர்வு அதிக லாபத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.ஆனாலும் விலை உயர்வுக்கு முன்பு அண்டை மாநிலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஏலக்காய் ஏற்றுமதி வர்த்தகம் செய்பவர்களுக்கு இந்த விலை உயர்வினால் எந்தவித பலனும் இன்றி வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 3000 தாண்டி விற்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலக்காய் விலை கடும் சரிவை சந்தித்து வந்தது. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பின்பு ஏலக்காய் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.2000 தாண்டி விற்பனையாவதால் விவசாயிகளும், ஏலக்காய்களை இருப்பு வைத்து வர்த்தகம் செய்யும் வியாபாரிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
- 2-ம் கட்டமாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திம்மரசநாயக்கனூர், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, ராஜதானி ஆகிய ஊராட்சி பகுதிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- அந்த நாளில் பதிவு செய்ய தவறவிட்டவர்கள் கடைசி 2 நாட்களில் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்-அமைச்சர் ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கடந்த மாதம் 24ந் தேதி தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்ய முதற்கட்டமாக உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய வட்டங்களில் 24.07.2023 முதல் 04.08.2023 வரை 259 முகாம்கள் நடத்தப்பட்டு 1,50,517 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2-ம் கட்டமாக தேனி, ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர் ஆகிய வட்டங்களில் நேற்று முதல் 16-ந் தேதி வரை 258 முகாம்கள் நடைபெற உள்ளதை தொடர்ந்து ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திம்மரசநாயக்கனூர், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, ராஜதானி ஆகிய ஊராட்சி பகுதிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது அவர் தெரிவித்ததாவது:-
பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் இணைய பதிவு செய்யப்பட்டு ஒப்பு கைச்சிட்டு வழங்கப்படும். சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, ரேசன் அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, டோ க்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் பொதுமக்கள் வருகை தந்து தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அந்த நாளில் பதிவு செய்ய தவறவிட்டவர்கள் கடைசி 2 நாட்களில் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- இத்திட்டத்திற்கான யு.பி.எஸ் உள்ளிட்ட உபகரண ங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.
- இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும்.
தேனி:
தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணை ப்பானது, 85% மின்க ம்பங்கள் மூலமாகவும், 15% தரை வழியாகவும் இணைத்திட நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கான யு.பி.எஸ் உள்ளிட்ட உபகரண ங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்த ப்பட்டுள்ள அறையானது சம்பந்த ப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்க ப்பட்டு வரு கிறது.
இத்திட்ட த்திற்கான உபகரணங்களை பாதுகா த்திடவும். தடை யில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்தி டவும், பி.ஒ.பி பொறுத்த ப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் சம்பந்த ப்பட்ட கிராம ஊராட்சி செயலா ளர்களால் கண்காணிக்கப்பட உள்ளது.
இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பி.ஒ.பி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யு.பி.எஸ் மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகள்.
எனவே உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவி த்துள்ளார்.
- தென்மேற்கு பருவமழை ஜுன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை.
- இன்று காலை நிலவரப்படி 48.52 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மூலவைகையாறு, சுருளியாறு, கொட்டக்குடி ஆறு, வறட்டாறு, வராகநதி மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜுன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் வறண்டன. குறிப்பாக அரசரடி, வெள்ளிமலை, வருசநாடு, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து இன்று காலை நிலவரப்படி 48.52 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.30 அடியாக உள்ளது. 176 கன அடி நீர் வருகிறது. நேற்று 290 கன அடி நீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது. நீர் திறப்பு 400 கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.95 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் மட்டும் 0.2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைவால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
- பழைய பைபாஸ் சாலையில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
- கும்பல் மாந்திரீக வேலையில் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
உத்தமபாளையம்:
கேரளாவில் மாந்திரீக பூஜைகள் செய்து பணம் இரட்டிப்பு மோசடி செய்து வரும் கும்பல் தேனியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுக்குமாரி தலைமையில் போலீசார் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பழைய பைபாஸ் சாலையில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அந்த காரில் இருந்த நபர்கள் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் நாக்கு, கல்லீரல், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகள் பேக்கிங் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதுதவிர எலுமிச்சைபழம், சூடம், முட்டை போன்றவைகளும் இருந்தன.
அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை அய்யனார்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி(38), ராதநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த டேவிட்பிரதாப்சிங்(40), பசும்பொன் கிராமத்தை சேர்ந்த முருகன்(65) என தெரியவந்தது. இவர்களுடன் வந்த உத்தமபாளையம் பாறைமேடு தெருவை சேர்ந்த மந்திரவாதி ஜேம்ஸ்(52) என்பவர் தப்பிஓடிவிட்டார்.
இந்த கும்பல் மாந்திரீக வேலையில் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், உத்தமபாளையத்தை சேர்ந்த ஜேம்ஸ் மாந்திரீக வேலையில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் பிடிபட்ட 3 பேரும் குறுகிய காலத்தில் பணக்காரர்களாக மாறுவது எப்படி? என்றும் அதற்கு பூஜைகள் உள்ளதா எனவும் கேட்டுள்ளனர். இதனையடுத்து ஜேம்ஸ் அவர்களிடம் ரூ.5லட்சம், ரூ.2 லட்சம் என தொகை நிர்ணயம் செய்து கேரள மாநிலம் வண்டிபெரியாறில் ஒரு மந்திரவாதி உள்ளார். அவரிடம் சென்று பணத்தை கொடுத்து அவர் கொடுக்கும் பொருளை வாங்கி வாருங்கள். அந்த பொருளை நான் பூஜை செய்து தருகிறேன். அதன்பிறகு வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் பணமழை கொட்டும் என சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனைநம்பிய அலெக்ஸ்பாண்டி, டேவிட், முருகன் ஆகிய 3 பேரும் கேரளமாநிலம் வண்டிபெரியாருக்கு சென்றனர்.
ஜேம்ஸ் கொடுத்த விலாசத்திற்கு சென்ற அவர்கள் மந்திரவாதி பூஜை செய்து கொடுத்த சூட்கேசுடன் தேனிக்கு வந்துள்ளனர். வரும் வழியில் பெட்டியை திறந்து பார்க்க கூடாது. அவ்வாறு திறந்து பார்த்தால் பொருளின் சக்தி மறைந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் பணத்தை கொடுத்துவிட்டு பெட்டியில் என்ன இருக்கிறது என தெரியாமல் அதனை வாங்கி வந்துள்ளனர். பெட்டியில் இருந்த மூளை, நாக்கு, கல்லீரல் உள்ளிட்ட பொருட்கள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவை நரபலி கொடுத்து எடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மந்திர வேலைகளில் ஈடுபடும் கும்பல் பலரிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. வண்டிபெரியாறை சேர்ந்த மந்திரவாதி தற்போது தனிப்படை போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளார். அவரை தேனிக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த உள்ளோம். அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த மோசடியில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என தெரியவரும். தற்போது தலைமறைவாக உள்ள ஜேம்ஸ் என்பவரையும் தீவிரமாக தேடி வருகிறோம். இவர் மீது ஏற்கனவே இதுபோன்ற மோசடி புகார்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இந்த கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்து இருந்தால் அதுகுறித்து போலீசில் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்றனர்.
- மூணாறு-போடி மெட்டு ரோட்டில் மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் பகுதியில் டோல்கேட் அமைக்க ப்பட்டுள்ளது.
- சாலை திறக்கப்பட்டதும் டோல்கேட் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு-போடிமெட்டு இடையே 42 கி.மீ சாலை இருவழிச்சாலையாக மாற்ற ரூ.381.76 கோடி செலவில் அகலப்படுத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி பணிகளை தொடங்கி வைத்தார்.
2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணிகள் முடிக்க ப்பட்டு சாலை பயன்பாட்டி ற்கு வரவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த வழித்தடத்தில் மூணாறு அருகே கேப் ரோட்டில் மணிசரிவு, மழை, வனத்துறை இடையூறு உள்ளிட்ட காரணங்களால் பணிகள் முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமான திறப்புவிழாவிற்கு சாலை தயாராக உள்ளது.
இதனை மத்திய மந்திரி நிதின்கட்கரி வருகிற 17-ந்தேதி தொடங்கி வைக்கி றார். இதுதவிர தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் ரூ.910 கோடி செலவில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு-கொச்சி இடையே 124 கி.மீ தூரம் சாலை சீரமைக்கப்படுகிறது.
இந்த பணிகளையும் மத்திய மந்திரி தொடங்கி வைக்கிறார். 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். மூணாறு-போடி மெட்டு ரோட்டில் மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் பகுதியில் டோல்கேட் அமைக்க ப்பட்டுள்ளது. இது இடுக்க மாவட்டத்தின் முதல் டோல்கேட் ஆகும். சாலை திறக்கப்பட்டதும் டோல்கேட் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தாக்கு தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யக்கோரி சாமிநாதனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளி களை கைது செய்வதாக உறுதி அளித்த தின் பேரில் போராட்டம் கைவிட ப்பட்டது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்ன மனூர் அய்யன்கோவில் தெருவை சேர்ந்த நாரா யணன் மகன் சாமிநாதன்(35). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பின ருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு சாமிநாதன் அங்குள்ள பகவதியம்மன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றார்.
அப்போது ஒரு கும்பல் சாமிநாதனை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்க ளுடன் கடுமையாக தாக்கினர். இதில் சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் மயங்கிவிழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தாக்கு தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யக்கோரி சாமிநாதனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளி களை கைது செய்வதாக உறுதி அளித்த தின் பேரில் போராட்டம் கைவிட ப்பட்டது. இந்நிலை யில் சாமிநாதனை அரிவா ளால் வெட்டிய சந்தன காளை, சூரியபிரகாஷ், சந்தோஷ், பழனிக்குமார், நாக ஜெயராம், குபேந்திரன், பாண்டி, ஒண்டி, பால்பாண்டி, செந்தில், எர்ணக்காளை ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- நேற்று மோட்டார் சைக்கிளில் ஆசாரிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
- தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ரோசனம்பட்டியை சேர்ந்த பெருமாள் சாமி மகன் ரமேஷ்பிரபு (வயது16). இவர் பிளஸ்-1 படித்து வந்தார்.இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் ஆசாரிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ்பிரபு உயிரிழந்தார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் யானைகள் கூட்டமாக அங்கு முகாமிட்டுள்ளன.
- இதனால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை யினர் தடைவிதித்து உள்ளனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு குளிக்க வருகின்றனர். மேலும் கேரளா செல்லும் பக்தர்க ளும் இங்கு வருகின்றனர். அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
தற்போது மழைஇன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் யானைகள் கூட்டமாக அங்கு முகாமிட்டுள்ளன. இதனால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை யினர் தடைவிதித்து உள்ளனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.40 அடியாக உள்ளது. 290 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 48.61 அடியாக உள்ளது. மூலவைகையாறு வறண்டு காணப்படுவதால் அணைக்கு நீர்வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 2.9, தேக்கடி 0.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- பணிகள் முடிந்தாலும் அடுத்த சில மாதங்கள் வரை மட்டுமே குடிநீர் வழங்க முடியும்.
- குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொது மக்களுக்கு அறிவுறுத்த ப்பட்டு வருகிறது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கட மலைக்குண்டு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு கரட்டுப்பட்டி மூலவைகை ஆற்றில் 4 இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மழை இல்லாத காரணத்தால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் வெயில் அதிகரித்து காணப்படுவதால் உறை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது.
தற்போது உறை கிணறு களில் மிக குறைந்த அளவி லான நீர் மட்டுமே உள்ளது. இதனால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. இதை யடுத்து கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் நேற்று முதல் உறை கிணறுகளை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் சின்னசாமி ஆகியோர் பார்வையி ட்டனர்.
பணிகள் முடிந்தாலும் அடுத்த சில மாதங்கள் வரை மட்டுமே குடிநீர் வழங்க முடியும். எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொது மக்களுக்கு அறிவுறுத்த ப்பட்டு வருவதாகவும், குடிநீர் வீணாகுவதை சேதமடைந்த குழாய்கள் அனைத்தும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஊராட்சி நிர்வா கத்தினர் தெரிவித்தனர்.
- வீட்டுமனை ப்பட்டா வேண்டி 12 பேரும், காவல்துறை பணி வேண்டி ஒருவரும், கல்விக்கடன் வேண்டி ஒருவரும், அடை யாள அட்டை வேண்டி ஒருவரும், சுயதொழில் தொடங்க கடன் வேண்டி இருவரும் என வெவ்வேறு கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர்.
- மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திருநங்கைகளை இணைத்ததற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி வழங்க ப்பட்டதற்காகவும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு திருநங்கைகளுக்கான குறை களை நிவர்த்தி செய்யும் பொருட்டு மாதந்தோறும் இதுபோன்ற முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனியில் நடை பெற்ற முகாமில் 20 திரு நங்கைகள் கலந்து கொண்ட னர்.
இதில் வீட்டுமனை ப்பட்டா வேண்டி 12 பேரும், காவல்துறை பணி வேண்டி ஒருவரும், கல்விக்கடன் வேண்டி ஒருவரும், அடை யாள அட்டை வேண்டி ஒருவரும், சுயதொழில் தொடங்க கடன் வேண்டி இருவரும் என வெவ்வேறு கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர். அப்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திருநங்கைகளை இணைத்ததற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி வழங்க ப்பட்டதற்காகவும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
தாங்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, பி.ஆர்.ஓ நல்லதம்பி, சமூக நலஅலுவலர் சியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






