என் மலர்tooltip icon

    தேனி

    • பைக்கை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • தேவதானப்பட்டி-ஆண்டிபட்டி சாலையில் திடீரென பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    தேவதானப்பட்டி:

    திருச்சி மாவட்டம் எட மலைப்பட்டி நல்லகண்ணு தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(37). இவர் அக்குபஞ்சர் டாக்டராக வேலைபார்த்து வந்தார். தற்போது இவர் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி செல்வவிநாயகர் நகரில் வசித்துவந்தார். சம்பவத்தன்று திருச்சியில் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வத்தலக்குண்டு டூவிலர் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்திவிட்டு திருச்சி சென்றார். மீண்டும் திரும்பிவந்து பைக்கை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். தேவதானப்பட்டி-ஆண்டிபட்டி சாலையில் திடீரென பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். படுகாயங்க ளுடன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டு உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி நர்மதா கொடுத்த புகாரின்பேரில் ஜெய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யம்பட்டியில் சமூக நீதிமற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இதில் டி.எஸ்.பி. சக்திவேல் கலந்து கொண்டு பேசுகையில் போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் சமூக நீதிமற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் டி.எஸ்.பி. சக்திவேல் கலந்து கொண்டு பேசுகையில் போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும்.

    பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், சுப்பையா, மூர்த்தி மற்றும் அய்யம்பட்டி ஊராட்சி தலைவர் தனலெட்சுமி அண்ணாத்துரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வாடிக்கையாளர்கள் 11 பேரிடம் புதிய நகைகள் செய்து தருவதாகக் கூறி பணம், கடனாக சேர்த்து ரூ.99 லட்சத்து 47 ஆயிரம் மோசடி செய்தது கண்டறி யப்பட்டது.
    • உடந்தையாக இருந்த முருகபாண்டியின் மனைவி சாந்தி, மகன் வீரவிக்னேசை நேற்று சென்னையில் கைது செய்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டி பட்டி கொண்டம நாயக்கன்பட்டி நகைக்கடை உரிமையாளர் முருகபாண்டி (44). இவர் மதுரை தெற்கு ஆவணி மூலவீதி மொத்த நகை வியாபாரி வீரமணி கண்டனிடம் (30) நகைகளை வாங்கி தன் கடையில் விற்றார். வாரந்தோறும் விற்பனையான நகையின் தொகையை வீரமணி கண்டன் வசூலிப்பார். முருகபாண்டி ரூ.16 லட்சத்தி 72 ஆயிரத்து 820 மதிப்புள்ள நகைகளை பெற்று க்கொ ண்டு அதற்கான பணம் தராமல் காலம் தாழ்த்தினார்.

    ஆண்டிபட்டி அரசு பள்ளி ஆசிரியரான பிரபு விடம் ரூ.25 பவுன் தங்க நகை புதிதாக செய்து தருவதாக கூறி, ரூ.18 லட்சத்து 74 ஆயிரம் பெற்றுக்கொண்டு நகையை தரவில்லை. இந்நிலையில் கடந்த மே.31-ல் ஆண்டி பட்டி நகைக்கடையை பூட்டிவிட்டு தலைமறை வானார். வீரமணிகண்டன், ஆசிரியர் பிரபு தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தனர்.

    கடந்த ஜூன்.1ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முருகபாண்டி மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் தங்கநகை மொத்த வியா பாரிகள் அய்யப்பன், அசோ க்குமார், சுரேஷ்குமார், கார்த்திக், கனகராஜ் ஆகியோரிடம் ரூ.1 கோடியே 52 லட்சத்து 99 ஆயிரத்து 570 மதிப்புள்ள 2 கிலோ 451 கிராம் தங்க நகைகளும், ரூ.47 லட்சத்து 65 ஆயிரத்து 870 மதிப்புள்ள வெள்ளி நகைகளும் அசோக்குமாரி டம் ரூ.27 லட்சம் கடன் பெற்று திருப்பித் தரவில்லை என தெரியவந்தது.

    வாடிக்கையாளர்கள் 11 பேரிடம் புதிய நகைகள் செய்து தருவதாகக் கூறி பணம், கடனாக சேர்த்து ரூ.99 லட்சத்து 47 ஆயிரம் மோசடி செய்தது கண்டறி யப்பட்டது. இவ்வாறு பலரிடம் ரூ.3.27 கோடி மோசடி செய்து தலைமறை வானார். முருகபாண்டியை கடந்த ஜூன் 18ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த முருகபாண்டியின் மனைவி சாந்தி, மகன் வீரவிக்னேசை நேற்று சென்னையில் கைது செய்து போலீசார் தேனிக்கு அழைத்து வந்து தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாந்தி மதுரை மத்திய சிறையிலும், வீரவிக்னேஷ் தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்ட னர்.

    • கோரிக்கையை தொடர்ந்து தேவராஜ்நகர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • பயன்பாட்டிற்கு வராத கட்டிடத்தால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வருசநாடு:

    கடமலைக்குண்டு அருகே தேவராஜ்நகர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் 1 கி.மீ தொலைவில் உள்ள கொம்புகாரன்புலியூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகின்றனர். தினமும் காலை, மாலை 1 கி.மீ தொலைவு குழந்தைகள் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.

    எனவே தேவராஜ்நகர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து தேவராஜ்நகர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.

    இந்தக் கட்டிடம் கட்ட ப்பட்டது முதல் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேவராஜ்நகரில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • 130 கிராம ஊராட்சிகளில் மிகச் சிறப்பாகவும், பொது மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையி லும் கிராம சபைக் கூட்ட த்தை நடத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.
    • பொது மக்கள் அனைவரும் தங்களது கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகளில் பங்கு பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தின நாளான 15-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவ ரால் நடத்தப்பட உள்ளது.

    130 கிராம ஊராட்சிகளில் மிகச் சிறப்பாகவும், பொது மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையி லும் கிராம சபைக் கூட்ட த்தை நடத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம் செய்வது பற்றி விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டடம் கட்ட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்து தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரக குடியிறுப்புத் திட்டம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கம், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் இதரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கிராம சபைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    பொது மக்கள் அனைவரும் தங்களது கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகளில் பங்கு பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தெரிவித்துள்ளார்.

    • கண்டமனூர், வருசநாடு, அரசரடி, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாத தால் மூல வைகை ஆறு வறண்டு அப்பகுதி கிரா மங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • இப்பகுதியில் மழை இல்லாததால் நில த்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆண்டிபட்டி:

    ஜூன் மாத தொடக்கத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கும். அப்போது கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியது. மேலும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் முல்லைப்பெரி யாறு, வராக நதி, கொட்ட க்குடி, மூல வைகை ஆறு உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளின் நீர் வரத்து குறைவாக உள்ளது.

    குறிப்பாக கண்டமனூர், வருசநாடு, அரசரடி, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாத தால் மூல வைகை ஆறு வறண்டு அப்பகுதி கிரா மங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உறை கிணறுகளில் தண்ணீர் குறைவாக உள்ளதால் தூர் வாரும் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாத தால் வறண்ட நிலையே காணப்படுகிறது. இப்பகுதி யில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    தற்போது நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளது. மேலும் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயிர்களை காப்பாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் மழை இல்லாததால் நில த்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பயிர்க ளை காப்பாற்ற டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களை காப்பாற்றி வருகிறோம். மழை கைகொடுத்தால் மட்டுமே விவசாயத்தை தொடர முடியும். மேலும் அதிக அளவில் பணம் செலவழித்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம். ஆனால் இதற்கான விலை கிடைப்பதில்லை. எனவே அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    வறட்சி காலத்தில் விவ சாயிகளுக்கு உதவ நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மக்கள் தொகை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறப்பான கல்வி மற்றும் நிறைவான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பானதாக இருக்கும்.
    • இம்முகாமில் பொது மக்களிடமிருந்து பெற ப்பட்ட மனுக்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தி, அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை ஊராட்சி க்குட்பட்ட முருகமலை நகர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 807 பயனாளிகளுக்கு ரூ. 6.47 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, சரவணக்குமார் எம்.எல்.ஏ முன்னிலையில் வழங்கி னார்.

    முகாமில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது-

    முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வு தொகைக்கான சிறப்பு முகாம்கள் நடை பெற்று வருகிறது. முதிர்வுத் தொகை பெறமுடியாமல் தவறியவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் மாவட்ட சமூகநலத்துறை அலுவல கத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    நமது மாநிலம் குடும்ப நலத் திட்டத்தை செயல்படு த்துவதில் அகில இந்திய அளவில் 2-ம் இடத்தில் உள்ளது. மக்கள் தொகை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறப்பான கல்வி மற்றும் நிறைவான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பா னதாக இருக்கும். குடும்ப கட்டுப்பாட்டை ஊக்கு விப்பது தொடர்பாக பல்வேறு சிறப்பு முகாம் நடந்து கொண்டிருக்கிறது அதில் ஆண்களுக்காக சிறப்பு கருத்தடை முகாமில் கருத்தடை மேற்கொள்ளும் ஆண்களை ஊக்குவிக்கும் விதமாக குலுக்கள் முறையில் ஒரு நபரை தேர்ந்தெடுத்து ஒரு தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு த்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 807 பயனாளிகளுக்கு ரூ.6.47 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களும், மக்களைத்தேடி மருத்துவ திட்டம் மூலம் 5 பயனாளிகளும், டாக்டர்முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் மூலம் 5 பயனாளிகளும் பயன் பெறுகின்றனர். இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும்.

    இம்முகாமில் பொது மக்களிடமிருந்து பெற ப்பட்ட மனுக்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தி, அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தங்கவேல், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ராஜபாண்டி, ஊராட்சி மன்றத்தலைவர் சின்னப்பாண்டி பெரிய குளம் வருவாய் கோட்டாட்சி யர் முத்துமாதவன், பெரியகுளம் வட்டாட்சியர் அர்ஜூனன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • மகனை அடித்து கொலை செய்துவிட்டதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த அழகுமலை மகன் சரவணன்(32). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கூலிவேலை பார்த்து வந்த சரவணனுக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் லட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

    சரவணன் மட்டும் பெருமாள்புரத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சரவணன் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருப்பூரில் உள்ள அவரது தாய் சுந்தரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தனது மகனை கொலை செய்துவிட்டனர் என தெரிவித்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். சரவணன் இறப்பில் மர்மம் இருப்பதால் முறையான விசாரணை நடத்த வேண்டும். அவரை அடித்து கொலை செய்துவிட்டனர் என தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் கொலை வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
    • ராசிங்காபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மணல்குவாரியில் பதுங்கியிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்தவர் அருளானந்தபாபு(29). இவர் நேற்று முன்தினம் ஒரு மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்ய ப்பட்டார். இதுகுறித்து நகர்தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்காபுர த்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மணல்குவாரி யில் சந்தேகப்படும்படியான சில நபர்கள் தங்கியிருப்பதாக போடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் இத்திரிஸ்கான் தலைமையில் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அருளானந்தபாபு கொலை வழக்கில் தொடர்புடைய வர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து முத்தழகு பட்டி மேற்குதெருவை சேர்ந்த ஞானமுத்து மகன் வெஸ்லின்அபிஷேக்(24), அய்யப்பன் மகன் சரத்கு மார்(24), சின்னாளபட்டி கருணாநிதிகாலனியை சேர்ந்த கைலாசம் மகன் ஆனந்த்(34) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்கள் குறித்து நகர்தெற்கு போலீசில் தொடர்பு கொண்டு போடி போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    • கட்டிடம் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டு காலத்திற்கு மேலானதால் ஏற்பட்ட விரிசல் காரணமாக மழைக்காலத்தில் உள்ளே தண்ணீர் புகுந்து சுவர் முழுதும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
    • சுவரில் உள்ள சேதம் காரணமாக கரையான்கள் புகுந்து பல அரிய வகை புத்தகங்களை அரித்து முற்றிலும் சேதமாக்கி உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகரின் மையப் பகுதியில் போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் தமிழ்நாடு அரசு பொது நூலகம் அமைந்து ள்ளது. சுமார் 65 ஆண்டு களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நூலகம் 1970ம் ஆண்டு புதிதாக கட்டிடம் உருவாக்கப்பட்டு சுமார் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நூலகத்தில் வரலாறு, அறிவியல், சமூகம், புராணம் மற்றும் சிறுகதைகள், கவிதைகள், கதைகள், போட்டித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சுமார் 75,000க்கும் மேல் உள்ளது.

    கலைஞரின் குறளோவி யம், பொன்னியின் செல்வன்,சோழர் கால வரலாறு, பாண்டியர்கள் வரலாறு மற்றும் அறிவியல் திறனாய்வு புத்தகங்கள், அறிஞர் அண்ணா எழுதிய நூல்கள் போன்ற பல்வேறு பிரசித்தி பெற்ற நூல்கள் இங்கு உள்ளது.

    சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாசகர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

    மேலும் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த நூலகத்தை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். பழைய கிணறு ஒன்றை மூடி அதன் மேல் கட்டிடம் கட்டப்பட்டதால் தற்போது அஸ்திவாரம் இறங்கி கட்டிடம் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.

    மேலும் கட்டிடம் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டு காலத்திற்கு மேலானதால் ஏற்பட்ட விரிசல் காரணமாக மழைக்காலத்தில் உள்ளே தண்ணீர் புகுந்து சுவர் முழுதும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

    இதனால் எப்பொழுது இடிந்து விழுமோ என்ற அபாய கட்டத்தில் இந்த கட்டிடம் உள்ளது. இதனால் இந்த நூலகத்திற்கு வரும் வாசகர்களும் போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களும் பொது மக்களும் மிகுந்த அச்சத்து டனே வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் இங்குள்ள புத்தகங்களில் சுமார் 20000 புத்தகத்திற்கு மேல் பரணிலும் சுவர் ஓரங்க ளிலும் பராமரிப்பின்றி வைக்கப்பட்டுள்ளதால் சுவரில் உள்ள சேதம் காரணமாக கரையான்கள் புகுந்து பல அரிய வகை புத்தகங்களை அரித்து முற்றிலும் சேதமாக்கி உள்ளது. எனவே மக்களின் பயன்பாட்டில் உள்ள நூல கத்தில் உள்ள புத்தகங்களை பாதுகாக்கவும், கட்டிடத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டைவிட்டு வெளியே சென்ற வாலிபர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன்(24). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த லட்சுமி(33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று மது அருந்திவந்த பாண்டிய ராஜன் தனது மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள் காலை வீட்டைவிட்டு வெளியே சென்ற பாண்டியராஜன் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தம பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பாண்டி யராஜனை தேடிவருகின்ற னர்.

    • நோய் கொடுமையால் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பூதிப்புர த்தை சேர்ந்தவர் வசந்தா(45). கடந்த சில நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்க ளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த வசந்தா விஷம் குடித்து மயங்கினார்.

    தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டி பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே பொம்மைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி கவுசல்யா(29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்த கவுசல்யா வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×