search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் அருகே மக்கள் தொடர்பு முகாமில் ரூ.6.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
    X

    முகாமில் பயனாளிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பெரியகுளம் அருகே மக்கள் தொடர்பு முகாமில் ரூ.6.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

    • மக்கள் தொகை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறப்பான கல்வி மற்றும் நிறைவான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பானதாக இருக்கும்.
    • இம்முகாமில் பொது மக்களிடமிருந்து பெற ப்பட்ட மனுக்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தி, அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை ஊராட்சி க்குட்பட்ட முருகமலை நகர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 807 பயனாளிகளுக்கு ரூ. 6.47 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, சரவணக்குமார் எம்.எல்.ஏ முன்னிலையில் வழங்கி னார்.

    முகாமில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது-

    முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வு தொகைக்கான சிறப்பு முகாம்கள் நடை பெற்று வருகிறது. முதிர்வுத் தொகை பெறமுடியாமல் தவறியவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் மாவட்ட சமூகநலத்துறை அலுவல கத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    நமது மாநிலம் குடும்ப நலத் திட்டத்தை செயல்படு த்துவதில் அகில இந்திய அளவில் 2-ம் இடத்தில் உள்ளது. மக்கள் தொகை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறப்பான கல்வி மற்றும் நிறைவான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பா னதாக இருக்கும். குடும்ப கட்டுப்பாட்டை ஊக்கு விப்பது தொடர்பாக பல்வேறு சிறப்பு முகாம் நடந்து கொண்டிருக்கிறது அதில் ஆண்களுக்காக சிறப்பு கருத்தடை முகாமில் கருத்தடை மேற்கொள்ளும் ஆண்களை ஊக்குவிக்கும் விதமாக குலுக்கள் முறையில் ஒரு நபரை தேர்ந்தெடுத்து ஒரு தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு த்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 807 பயனாளிகளுக்கு ரூ.6.47 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களும், மக்களைத்தேடி மருத்துவ திட்டம் மூலம் 5 பயனாளிகளும், டாக்டர்முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் மூலம் 5 பயனாளிகளும் பயன் பெறுகின்றனர். இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும்.

    இம்முகாமில் பொது மக்களிடமிருந்து பெற ப்பட்ட மனுக்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தி, அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தங்கவேல், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ராஜபாண்டி, ஊராட்சி மன்றத்தலைவர் சின்னப்பாண்டி பெரிய குளம் வருவாய் கோட்டாட்சி யர் முத்துமாதவன், பெரியகுளம் வட்டாட்சியர் அர்ஜூனன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×