search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடமலைக்குண்டு அருகே அங்கன்வாடி கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?
    X

    பயன்பாட்டுக்கு வராத புதிய அங்கன்வாடி கட்டிடம்.

    கடமலைக்குண்டு அருகே அங்கன்வாடி கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?

    • கோரிக்கையை தொடர்ந்து தேவராஜ்நகர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • பயன்பாட்டிற்கு வராத கட்டிடத்தால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வருசநாடு:

    கடமலைக்குண்டு அருகே தேவராஜ்நகர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் 1 கி.மீ தொலைவில் உள்ள கொம்புகாரன்புலியூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகின்றனர். தினமும் காலை, மாலை 1 கி.மீ தொலைவு குழந்தைகள் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.

    எனவே தேவராஜ்நகர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து தேவராஜ்நகர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.

    இந்தக் கட்டிடம் கட்ட ப்பட்டது முதல் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேவராஜ்நகரில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    Next Story
    ×