என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பெண்கள் தற்கொலை"

    • தேனி அருகே வயிற்றுவலியால் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே தேவாரத்தை சேர்ந்தவர் குமார் மனைவி ராதிகா(43). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். குமார் இறந்து விட்டதால் அவர் வேலை பார்த்த மின்வாரிய அலுவல கத்தில் ராதிகாவிற்கு பணி ஆணை கிடைத்தது. கடந்த 9 வருடங்களாக தேவாரம் மின்வாரியத்தில் பணி புரிந்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக அடிக்கடி தலைவலி ஏற்பட்டதால் மனஉளைச்ச லில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி கே.ஆர்.ஆர் நகரை சேர்ந்தவர் பரமன் மகள் வினிதா(24). இவருக்கும் கம்பத்தை சேர்ந்த செல்வ க்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. செல்வக்குமார் இறந்ததால் தாய் வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த வர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நோய் கொடுமையால் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பூதிப்புர த்தை சேர்ந்தவர் வசந்தா(45). கடந்த சில நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்க ளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த வசந்தா விஷம் குடித்து மயங்கினார்.

    தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டி பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே பொம்மைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி கவுசல்யா(29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்த கவுசல்யா வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருச்சி மேல கல்கண்டார்கோட்டை நாகம்மை தெருவை சேர்ந்தவர் ஆல்வின் ஜெரால்டு. இவரது மனைவி யாழினி விண்ணரசி (வயது 28).
    • கணவன் மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது.

    திருச்சி

    திருச்சி மேல கல்கண்டார்கோட்டை நாகம்மை தெருவை சேர்ந்தவர் ஆல்வின் ஜெரால்டு. இவரது மனைவி யாழினி விண்ணரசி (வயது 28). திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன் மனைவி இடையே இருவருக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் ஆல்வின் மனைவியிடம் வரதட்சணையாக கார் மற்றும் பணம் கேட்டதாக தெரிகிறது.

    சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனம் உடைந்த யாழினி விண்ணரசி வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கி மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகுவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர்கள் முகாமில் உள்ள ரமேஷ் - எலீஸ் தினா ஆகியோரின் மகள் சின்ரிகா (வயது22). இவர் பிபிஏ பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்த எலி விஷத்தை தின்று தின்று மயங்கி விழுந்து உள்ளார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • ஆண்டிபட்டி அருகே வெவ்வேறு சம்பவங்களில் நோய் கொடுமையால் 2 பெண்கள் தற்கொலை கொண்டனர்
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    தேனி:

    ஆண்டிபட்டி அருகே மேல மஞ்சி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுருளிவேல் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 40). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த சுமதிக்கு பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பத்தை சேர்ந்தவர் கணேசன் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நிருபா (33). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். கடந்த 4 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×