என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆண்டிபட்டி அருகே நோய் கொடுமையால் 2 பெண்கள் தற்கொலை
- ஆண்டிபட்டி அருகே வெவ்வேறு சம்பவங்களில் நோய் கொடுமையால் 2 பெண்கள் தற்கொலை கொண்டனர்
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தேனி:
ஆண்டிபட்டி அருகே மேல மஞ்சி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுருளிவேல் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 40). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த சுமதிக்கு பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கம்பத்தை சேர்ந்தவர் கணேசன் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நிருபா (33). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். கடந்த 4 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்