search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 women committed suicid"

    • ஆண்டிபட்டி அருகே வெவ்வேறு சம்பவங்களில் நோய் கொடுமையால் 2 பெண்கள் தற்கொலை கொண்டனர்
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    தேனி:

    ஆண்டிபட்டி அருகே மேல மஞ்சி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுருளிவேல் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 40). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த சுமதிக்கு பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பத்தை சேர்ந்தவர் கணேசன் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நிருபா (33). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். கடந்த 4 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×