search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் சுதந்திரதினத்தன்று கிராமசபைக் கூட்டம்
    X

    கோப்பு படம்.

    தேனி மாவட்டத்தில் சுதந்திரதினத்தன்று கிராமசபைக் கூட்டம்

    • 130 கிராம ஊராட்சிகளில் மிகச் சிறப்பாகவும், பொது மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையி லும் கிராம சபைக் கூட்ட த்தை நடத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.
    • பொது மக்கள் அனைவரும் தங்களது கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகளில் பங்கு பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தின நாளான 15-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவ ரால் நடத்தப்பட உள்ளது.

    130 கிராம ஊராட்சிகளில் மிகச் சிறப்பாகவும், பொது மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையி லும் கிராம சபைக் கூட்ட த்தை நடத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம் செய்வது பற்றி விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டடம் கட்ட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்து தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரக குடியிறுப்புத் திட்டம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கம், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் இதரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கிராம சபைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    பொது மக்கள் அனைவரும் தங்களது கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகளில் பங்கு பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×