என் மலர்
தேனி
- மக்கள் தொகை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறப்பான கல்வி மற்றும் நிறைவான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பானதாக இருக்கும்.
- இம்முகாமில் பொது மக்களிடமிருந்து பெற ப்பட்ட மனுக்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தி, அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை ஊராட்சி க்குட்பட்ட முருகமலை நகர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 807 பயனாளிகளுக்கு ரூ. 6.47 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, சரவணக்குமார் எம்.எல்.ஏ முன்னிலையில் வழங்கி னார்.
முகாமில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது-
முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வு தொகைக்கான சிறப்பு முகாம்கள் நடை பெற்று வருகிறது. முதிர்வுத் தொகை பெறமுடியாமல் தவறியவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் மாவட்ட சமூகநலத்துறை அலுவல கத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
நமது மாநிலம் குடும்ப நலத் திட்டத்தை செயல்படு த்துவதில் அகில இந்திய அளவில் 2-ம் இடத்தில் உள்ளது. மக்கள் தொகை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறப்பான கல்வி மற்றும் நிறைவான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பா னதாக இருக்கும். குடும்ப கட்டுப்பாட்டை ஊக்கு விப்பது தொடர்பாக பல்வேறு சிறப்பு முகாம் நடந்து கொண்டிருக்கிறது அதில் ஆண்களுக்காக சிறப்பு கருத்தடை முகாமில் கருத்தடை மேற்கொள்ளும் ஆண்களை ஊக்குவிக்கும் விதமாக குலுக்கள் முறையில் ஒரு நபரை தேர்ந்தெடுத்து ஒரு தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு த்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 807 பயனாளிகளுக்கு ரூ.6.47 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களும், மக்களைத்தேடி மருத்துவ திட்டம் மூலம் 5 பயனாளிகளும், டாக்டர்முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் மூலம் 5 பயனாளிகளும் பயன் பெறுகின்றனர். இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும்.
இம்முகாமில் பொது மக்களிடமிருந்து பெற ப்பட்ட மனுக்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தி, அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தங்கவேல், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ராஜபாண்டி, ஊராட்சி மன்றத்தலைவர் சின்னப்பாண்டி பெரிய குளம் வருவாய் கோட்டாட்சி யர் முத்துமாதவன், பெரியகுளம் வட்டாட்சியர் அர்ஜூனன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- மகனை அடித்து கொலை செய்துவிட்டதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகில் உள்ள கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த அழகுமலை மகன் சரவணன்(32). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கூலிவேலை பார்த்து வந்த சரவணனுக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் லட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
சரவணன் மட்டும் பெருமாள்புரத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சரவணன் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருப்பூரில் உள்ள அவரது தாய் சுந்தரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தனது மகனை கொலை செய்துவிட்டனர் என தெரிவித்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். சரவணன் இறப்பில் மர்மம் இருப்பதால் முறையான விசாரணை நடத்த வேண்டும். அவரை அடித்து கொலை செய்துவிட்டனர் என தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் கொலை வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
- ராசிங்காபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மணல்குவாரியில் பதுங்கியிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்தவர் அருளானந்தபாபு(29). இவர் நேற்று முன்தினம் ஒரு மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்ய ப்பட்டார். இதுகுறித்து நகர்தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்காபுர த்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மணல்குவாரி யில் சந்தேகப்படும்படியான சில நபர்கள் தங்கியிருப்பதாக போடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சப்-இன்ஸ்பெக்டர் இத்திரிஸ்கான் தலைமையில் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அருளானந்தபாபு கொலை வழக்கில் தொடர்புடைய வர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து முத்தழகு பட்டி மேற்குதெருவை சேர்ந்த ஞானமுத்து மகன் வெஸ்லின்அபிஷேக்(24), அய்யப்பன் மகன் சரத்கு மார்(24), சின்னாளபட்டி கருணாநிதிகாலனியை சேர்ந்த கைலாசம் மகன் ஆனந்த்(34) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் குறித்து நகர்தெற்கு போலீசில் தொடர்பு கொண்டு போடி போலீசார் தகவல் தெரிவித்தனர்.
- கட்டிடம் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டு காலத்திற்கு மேலானதால் ஏற்பட்ட விரிசல் காரணமாக மழைக்காலத்தில் உள்ளே தண்ணீர் புகுந்து சுவர் முழுதும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
- சுவரில் உள்ள சேதம் காரணமாக கரையான்கள் புகுந்து பல அரிய வகை புத்தகங்களை அரித்து முற்றிலும் சேதமாக்கி உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி நகரின் மையப் பகுதியில் போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் தமிழ்நாடு அரசு பொது நூலகம் அமைந்து ள்ளது. சுமார் 65 ஆண்டு களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நூலகம் 1970ம் ஆண்டு புதிதாக கட்டிடம் உருவாக்கப்பட்டு சுமார் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த நூலகத்தில் வரலாறு, அறிவியல், சமூகம், புராணம் மற்றும் சிறுகதைகள், கவிதைகள், கதைகள், போட்டித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சுமார் 75,000க்கும் மேல் உள்ளது.
கலைஞரின் குறளோவி யம், பொன்னியின் செல்வன்,சோழர் கால வரலாறு, பாண்டியர்கள் வரலாறு மற்றும் அறிவியல் திறனாய்வு புத்தகங்கள், அறிஞர் அண்ணா எழுதிய நூல்கள் போன்ற பல்வேறு பிரசித்தி பெற்ற நூல்கள் இங்கு உள்ளது.
சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாசகர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
மேலும் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த நூலகத்தை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். பழைய கிணறு ஒன்றை மூடி அதன் மேல் கட்டிடம் கட்டப்பட்டதால் தற்போது அஸ்திவாரம் இறங்கி கட்டிடம் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.
மேலும் கட்டிடம் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டு காலத்திற்கு மேலானதால் ஏற்பட்ட விரிசல் காரணமாக மழைக்காலத்தில் உள்ளே தண்ணீர் புகுந்து சுவர் முழுதும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இதனால் எப்பொழுது இடிந்து விழுமோ என்ற அபாய கட்டத்தில் இந்த கட்டிடம் உள்ளது. இதனால் இந்த நூலகத்திற்கு வரும் வாசகர்களும் போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களும் பொது மக்களும் மிகுந்த அச்சத்து டனே வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் இங்குள்ள புத்தகங்களில் சுமார் 20000 புத்தகத்திற்கு மேல் பரணிலும் சுவர் ஓரங்க ளிலும் பராமரிப்பின்றி வைக்கப்பட்டுள்ளதால் சுவரில் உள்ள சேதம் காரணமாக கரையான்கள் புகுந்து பல அரிய வகை புத்தகங்களை அரித்து முற்றிலும் சேதமாக்கி உள்ளது. எனவே மக்களின் பயன்பாட்டில் உள்ள நூல கத்தில் உள்ள புத்தகங்களை பாதுகாக்கவும், கட்டிடத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வீட்டைவிட்டு வெளியே சென்ற வாலிபர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன்(24). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த லட்சுமி(33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று மது அருந்திவந்த பாண்டிய ராஜன் தனது மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள் காலை வீட்டைவிட்டு வெளியே சென்ற பாண்டியராஜன் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தம பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பாண்டி யராஜனை தேடிவருகின்ற னர்.
- நோய் கொடுமையால் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பூதிப்புர த்தை சேர்ந்தவர் வசந்தா(45). கடந்த சில நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்க ளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த வசந்தா விஷம் குடித்து மயங்கினார்.
தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டி பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி அருகே பொம்மைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி கவுசல்யா(29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்த கவுசல்யா வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் உள்பட அனைத்து தரப்பின ரும் தவறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உருவாகியு ள்ளது.
- என பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
சின்னமனூர்:
சின்னமனூர் நகர் பகுதியில் உள்ள வார்டு களில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் உள்பட அனைத்து தரப்பின ரும் தவறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உருவாகியு ள்ளது.
இந்த மெத்தனப் போக்கை கண்டித்தும், பி.டி.ஆர். கால்வாயை தூர் வார வேண்டும் எனவும், நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார் நிறுவனத்தை மூட வேண்டும் என பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதில் சின்னமனூர் நகர பொதுச் செயலாளர் நேதாஜி குமார் என்ற வசீகரன், நிர்வாகிகள் தர்மராஜ், பிரபாகரன், வேலு மற்றும் ஏராள மானோர் கலந்து கொண்ட னர். போராட்டம் குறித்து அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
- 400 ஆண்டு பழமையான பாலசுப்பிர மணியன் கோவிலின் பின்புறம் 2 மருதமரங்கள் உள்ளது.
- இந்நிலையில் மர்மநபர்கள் மரத்தின் வேர்பகுதியில் தீ வைத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் சோழர்காலத்தில் கட்டப்பட்ட 400 ஆண்டு பழமையான பாலசுப்பிர மணியன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் தீர்த்த தொட்டியும், அதன் அருகே 2 மருத மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.
இந்த மரத்தின் பட்டை பல்வேறு நோய்களை தீர்க்கும் குணம் கொண்ட தாகும். இந்நிலையில் மர்மநபர்கள் மரத்தின் வேர்பகுதியில் தீ வைத்து ச்சென்றனர்.
அடிப்பகுதியில் பற்றிய தீ மளமளவென பரவி மரம் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணை த்தனர். இருந்தபோதும் மரத்தின் பெரும்பகுதி எரிந்து சேதமானது.
இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மரத்திற்கு தீ வைத்த நபர்களை கண்ட றிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மகள், மகன் மற்றும் மற்றொருவரது மகள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி பாரஸ்ட் ரோடு 9-வது தெருவை சேர்ந்தவர் தவமணி மகள் யுவஸ்ரீ(17). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவ த்தன்று யுவஸ்ரீ திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
ஜெயமங்கலம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவரது மனைவி ஜெயபாரதி(22). மகன் திவாசன்(2), சிவக்குமார் கிரசர் நிறுவன த்தில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.
மீண்டும் வீடு திரும்பிய போது தனது மனைவி மற்றும் மகன் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தொடங்கி வைத்து கைத்தறி கண்காட்சியினை பார்வையிட்டார்.
- சுகாதாரத் துறையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது
ஆண்டிபட்டி:
9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டி ருந்த சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தொடங்கி வைத்து கைத்தறி கண்காட்சியினை பார்வையிட்டார்.
தேனி மாவட்டத்தில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மதுரை சுங்குடி சேலைகள், மென் பட்டு சேலைகள், பருத்தி நூல் சேலைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்த ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி ரகங்கள் காட்சி படுத்தப்பட்ட விற்பனையை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
முன்னதாக 9 -வது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு. தேனி மாவட்டம் டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக சுகாதாரத் துறையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சர்க்கரை நோய், இரத்தம், சளி, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் கைத்தறி நெசவாளர்களின் குடும்பதத்தினர் 180 நபர்களுக்கு பரிசோதனை மேற்க்கொண்டு தேவை யான சிகிச்சை அளிக்க ப்பட்டது.
நிகழ்ச்சியில் டாக்டர் சண்முகப்பிரியா மேற்பார்வை யில் செவிலி யர்கள் கலந்து கொண்டனர். மதுரை, தேனி மாவட்ட கைத்தறித்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிர மணியன், சரக ஆய்வாளர் பாலமுரளிதரன், ஆய்வா ளர்கள் செண்பக ராஜ், ஜெயராமன், சரவணன், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம்.
- பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. இது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5மாவட்ட மக்களின் விவ சாயத்திற்கும், குடிநீருக்கும் பிரதானமாக விளங்கி வருகிறது. அணைக்கு நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, மூலவைகை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை காரணமாகவும், பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் நீர்வரத்து இருக்கும்.
கடந்த சில மாதமாக வைகை அணை, பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. வைகை அணையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லை. கடந்த கோடை காலத்தில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பெரியாறு, வைகை அணையில் இருந்து நீர் ஆவியாகி குறைய தொடங்கியது. இதனால் அணைகளுக்கு நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம். இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.05 அடியாக உள்ளது. அணைக்கு 61 கன அடிநீர் வருகிறது. 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2836 மி.கன அடியாக உள்ளது. வைகை அணியின் நீர்மட்டம் 48.31 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லை. இருப்பு 1786 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 302.98 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.32 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லை. திறப்பு 3 கனஅடியாக உள்ளது. இருப்பு 32 மி.கன அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.
- குடிப்பழ க்கத்திற்கு அடிமையானதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- சம்பவத்தன்று வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த அவரை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
வருசநாடு:
மதுரை மாவட்டம் சேடபட்டி குப்பல்நத்தம் பகுதியை சேர்ந்த மொக்கையன்(69). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த சில வருடங்களாக தேனி மாவட்டம் ராஜதானி அருகில் உள்ள டி.சொக்கலிங்கபுரத்தில் உள்ள பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்தார். குடிப்பழ க்கத்திற்கு அடிமையானதால் இவரது உடல்நிலை பாதி க்கப்பட்டது.
சம்பவத்தன்று வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த மொக்கையனை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.






