என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
தேனி மாவட்டத்தில் ரூ.16 லட்சம் மதிப்பிலான 156 செல்போன்கள் மீட்பு
- தேனி மாவட்டத்தில் செல்போன் தொலைந்ததாக கிடைத்த புகாரின் படி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
- கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மீட்கப்பட்ட சுமார் ரூ.16 லட்சம் மதிப்புள்ள 156 செல்போன்கள் மீட்கப்பட்டன.
தேனி:
தேனி மாவட்டத்தில் செல்போன் தொலைந்ததாக கிடைத்த புகாரின் படி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மீட்கப்பட்ட சுமார் ரூ.16 லட்சம் மதிப்புள்ள 156 செல்போன்கள் மீட்கப்பட்டன.
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., அபிநவ்குமார் மற்றும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். கடந்த 7 மாதத்தில் மட்டும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு போலீசாரால் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 668 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






