என் மலர்tooltip icon

    தேனி

    • குமுளி அருகே முக்காலேகர் பகுதியில் புலியின் கால்தடங்கள் தென்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    • கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டத்தை கண்கா ணிக்க முடிவு செய்துள்ளனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே முக்காலேகர் பகுதியில் புலியின் கால்தடங்கள் தென்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கால் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி யில் கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டத்தை கண்கா ணிக்க முடிவு செய்துள்ள னர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தென்பட்ட புலி கால்தட ங்களின் அடையாளங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. முக்காலேகர் பகுதி அதிக குடியிருப்புகளை கொண்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

    இப்பிரச்சினைக்கு வனத்துறையினர் விரைந்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிமாலி நகரில் இருந்து சில கி.மீ தொலைவில் புலி நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது இங்கு உலாவி வரும் புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • முதியவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர் :

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது73). இவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு நெல் வாங்கி வர சென்றார். அப்போது நெல் மூட்டையுடன் தவறி கீழே விழுந்தார்.

    படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சமுதாய கூடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து பயன்பாடின்றி போனது.
    • அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறப்பாறை‌ கிராமத்தில் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே மூலக்கடை ஊராட்சியில் அமைந்துள்ள சிறப்பாறை கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சமு தாயக்கூடம் கட்டப்பட்டது. போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சமுதாய கூடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து பயன்பாடின்றி போனது.

    மேலும் சமுதாயக்கூடத்தை சுற்றிலும் முட்செடிகள் ஆக்கிரமித்து காணப்படு கிறது. சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சிறப்பாறை கிராம பொது மக்கள் தொடர்ந்து கோரி க்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றி யுள்ளனர்.

    ஆனாலும் தற்போது வரை சமுதாய க்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் சமுதாயக்கூடத்தை சிலர் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    சமுதாயக்கூடம் இல்லாத காரணத்தால் கிராம பொதுமக்கள் அவர்களது வீட்டு விஷேசங்களுக்கு வேறு கிராமங்களில் உள்ள தனியார் மண்டபங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறப்பாறைகிராமத்தில் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேரிகார்டுகளை கடந்து செல்ல 2 வாகன ங்களும் முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மற்றும் லாரி நேருக்கு நேராக மோதியது.
    • அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் பஸ் மற்றும் காரில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்ட எல்லை யான தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு பேரிகார்டு அமைத்து வாகனங்களை சோதனை செய்து போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மதுரை யில் இருந்து பெரியகுளம் நோக்கி அரசு பஸ் சென்றது. அப்போது எதிரே முட்டை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. பேரிகார்டுகளை கடந்து செல்ல 2 வாகன ங்களும் முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மற்றும் லாரி நேருக்கு நேராக மோதியது.

    இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த கார்களும் அடுத்துடுத்து மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் லாரியின் முன் பக்கம் முற்றி லுமாக சேதம் அடைந்து டிரைவர் உடுமலைப்பேட் ைட அருகே மடத்துக்கு ளத்தை சேர்ந்த அருண்குமார் (வயது30) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் பஸ் மற்றும் காரில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை தேவதான ப்பட்டி போலீசார் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதி யில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    • சாலையோரங்களில் உணவு வகைகள் தயார் செய்வதை உறுதி செய்வதற்காக வரப்பெற்ற நடமாடும் பகுப்பாய்வுக் கூடம் வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கிவைத்தார்.
    • பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உணவு ப்பொருள் குறித்த ஏதேனும் புகார் இருப்பின் மாநில வாடஸ்-அப் புகார் எண்ணிற்கும், நுகர்வோர் புகார் செயலியிலும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாலையோர ங்களில் உணவு வகைகள் தயார் செய்வதை உறுதி செய்வதற்காக வரப்பெற்ற நடமாடும் பகுப்பாய்வுக் கூடம் வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கிவைத்தார்.

    தேனி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருவதை உறுதி செய்வதற்காகவும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுகள் தரமாக உள்ளதா என பாரிசோதனை மேற்கொள்ள மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும், துரித உணவு விற்பனைக் கடைகள், பள்ளி, மருத்துவமனை, பஸ் நிலையம், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள உணவுப்பொருள் விற்பனைக் கடைகளில் இந்த நடமாடும் வாகனம் சென்று கடைகளில் சமைத்த உணவு பண்டங்களின் மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக் கூட வாகனத்தில் சோதனை செய்வதற்காக வரப்பெற்று ள்ளது.

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உணவு ப்பொருள் குறித்த ஏதேனும் புகார் இருப்பின் மாநில வாடஸ்-அப் புகார் எண்ணிற்கும், நுகர்வோர் புகார் செயலியிலும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மதன்குமார், ஜனகர் ஜோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • 100 நாள் வேலைதிட்டத்தில் பழைய கணக்கெடுப்புபடி பணி ஒதுக்குவதால் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
    • எங்களுக்கும் பணி ஒதுக்கிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சிக்குட்பட்ட குப்பாம்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள ஏழைஎளிய மக்களுக்காக 100 நாள் வேலைதிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2009-ம் ஆண்டு 247 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாள் வேலைதிட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டு வரு கின்றனர்.

    தற்போது இப்பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்கும் பணி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பழைய கணக்கெடுப்புபடியே பணிகள் ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால் ஆத்திர மடைந்த கிராம பெண்கள் குப்பாம்பட்டி பகுதியில் 100 நாள் வேலைதிட்ட பணி யாளர்கள் வேலை செய்த இடத்தில் முற்றுகையிட்ட னர்.

    அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் வேலைதிட்டத்தில் பழைய கணக்கெடுப்புபடி பணி ஒதுக்குவதால் முறைகேடு கள் நடைபெற்று வருகிறது.

    எங்களுக்கும் பணி ஒதுக்கிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதி அளித்தனர். இருந்தபோதும் ஏராள மானோர் அப்பகுதியில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பைக்கை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • தேவதானப்பட்டி-ஆண்டிபட்டி சாலையில் திடீரென பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    தேவதானப்பட்டி:

    திருச்சி மாவட்டம் எட மலைப்பட்டி நல்லகண்ணு தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(37). இவர் அக்குபஞ்சர் டாக்டராக வேலைபார்த்து வந்தார். தற்போது இவர் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி செல்வவிநாயகர் நகரில் வசித்துவந்தார். சம்பவத்தன்று திருச்சியில் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வத்தலக்குண்டு டூவிலர் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்திவிட்டு திருச்சி சென்றார். மீண்டும் திரும்பிவந்து பைக்கை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். தேவதானப்பட்டி-ஆண்டிபட்டி சாலையில் திடீரென பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். படுகாயங்க ளுடன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டு உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி நர்மதா கொடுத்த புகாரின்பேரில் ஜெய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யம்பட்டியில் சமூக நீதிமற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இதில் டி.எஸ்.பி. சக்திவேல் கலந்து கொண்டு பேசுகையில் போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் சமூக நீதிமற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் டி.எஸ்.பி. சக்திவேல் கலந்து கொண்டு பேசுகையில் போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும்.

    பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், சுப்பையா, மூர்த்தி மற்றும் அய்யம்பட்டி ஊராட்சி தலைவர் தனலெட்சுமி அண்ணாத்துரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வாடிக்கையாளர்கள் 11 பேரிடம் புதிய நகைகள் செய்து தருவதாகக் கூறி பணம், கடனாக சேர்த்து ரூ.99 லட்சத்து 47 ஆயிரம் மோசடி செய்தது கண்டறி யப்பட்டது.
    • உடந்தையாக இருந்த முருகபாண்டியின் மனைவி சாந்தி, மகன் வீரவிக்னேசை நேற்று சென்னையில் கைது செய்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டி பட்டி கொண்டம நாயக்கன்பட்டி நகைக்கடை உரிமையாளர் முருகபாண்டி (44). இவர் மதுரை தெற்கு ஆவணி மூலவீதி மொத்த நகை வியாபாரி வீரமணி கண்டனிடம் (30) நகைகளை வாங்கி தன் கடையில் விற்றார். வாரந்தோறும் விற்பனையான நகையின் தொகையை வீரமணி கண்டன் வசூலிப்பார். முருகபாண்டி ரூ.16 லட்சத்தி 72 ஆயிரத்து 820 மதிப்புள்ள நகைகளை பெற்று க்கொ ண்டு அதற்கான பணம் தராமல் காலம் தாழ்த்தினார்.

    ஆண்டிபட்டி அரசு பள்ளி ஆசிரியரான பிரபு விடம் ரூ.25 பவுன் தங்க நகை புதிதாக செய்து தருவதாக கூறி, ரூ.18 லட்சத்து 74 ஆயிரம் பெற்றுக்கொண்டு நகையை தரவில்லை. இந்நிலையில் கடந்த மே.31-ல் ஆண்டி பட்டி நகைக்கடையை பூட்டிவிட்டு தலைமறை வானார். வீரமணிகண்டன், ஆசிரியர் பிரபு தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தனர்.

    கடந்த ஜூன்.1ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முருகபாண்டி மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் தங்கநகை மொத்த வியா பாரிகள் அய்யப்பன், அசோ க்குமார், சுரேஷ்குமார், கார்த்திக், கனகராஜ் ஆகியோரிடம் ரூ.1 கோடியே 52 லட்சத்து 99 ஆயிரத்து 570 மதிப்புள்ள 2 கிலோ 451 கிராம் தங்க நகைகளும், ரூ.47 லட்சத்து 65 ஆயிரத்து 870 மதிப்புள்ள வெள்ளி நகைகளும் அசோக்குமாரி டம் ரூ.27 லட்சம் கடன் பெற்று திருப்பித் தரவில்லை என தெரியவந்தது.

    வாடிக்கையாளர்கள் 11 பேரிடம் புதிய நகைகள் செய்து தருவதாகக் கூறி பணம், கடனாக சேர்த்து ரூ.99 லட்சத்து 47 ஆயிரம் மோசடி செய்தது கண்டறி யப்பட்டது. இவ்வாறு பலரிடம் ரூ.3.27 கோடி மோசடி செய்து தலைமறை வானார். முருகபாண்டியை கடந்த ஜூன் 18ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த முருகபாண்டியின் மனைவி சாந்தி, மகன் வீரவிக்னேசை நேற்று சென்னையில் கைது செய்து போலீசார் தேனிக்கு அழைத்து வந்து தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாந்தி மதுரை மத்திய சிறையிலும், வீரவிக்னேஷ் தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்ட னர்.

    • கோரிக்கையை தொடர்ந்து தேவராஜ்நகர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • பயன்பாட்டிற்கு வராத கட்டிடத்தால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வருசநாடு:

    கடமலைக்குண்டு அருகே தேவராஜ்நகர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் 1 கி.மீ தொலைவில் உள்ள கொம்புகாரன்புலியூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகின்றனர். தினமும் காலை, மாலை 1 கி.மீ தொலைவு குழந்தைகள் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.

    எனவே தேவராஜ்நகர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து தேவராஜ்நகர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.

    இந்தக் கட்டிடம் கட்ட ப்பட்டது முதல் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேவராஜ்நகரில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • 130 கிராம ஊராட்சிகளில் மிகச் சிறப்பாகவும், பொது மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையி லும் கிராம சபைக் கூட்ட த்தை நடத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.
    • பொது மக்கள் அனைவரும் தங்களது கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகளில் பங்கு பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தின நாளான 15-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவ ரால் நடத்தப்பட உள்ளது.

    130 கிராம ஊராட்சிகளில் மிகச் சிறப்பாகவும், பொது மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையி லும் கிராம சபைக் கூட்ட த்தை நடத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம் செய்வது பற்றி விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டடம் கட்ட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்து தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரக குடியிறுப்புத் திட்டம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கம், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் இதரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கிராம சபைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    பொது மக்கள் அனைவரும் தங்களது கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகளில் பங்கு பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தெரிவித்துள்ளார்.

    • கண்டமனூர், வருசநாடு, அரசரடி, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாத தால் மூல வைகை ஆறு வறண்டு அப்பகுதி கிரா மங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • இப்பகுதியில் மழை இல்லாததால் நில த்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆண்டிபட்டி:

    ஜூன் மாத தொடக்கத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கும். அப்போது கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியது. மேலும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் முல்லைப்பெரி யாறு, வராக நதி, கொட்ட க்குடி, மூல வைகை ஆறு உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளின் நீர் வரத்து குறைவாக உள்ளது.

    குறிப்பாக கண்டமனூர், வருசநாடு, அரசரடி, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாத தால் மூல வைகை ஆறு வறண்டு அப்பகுதி கிரா மங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உறை கிணறுகளில் தண்ணீர் குறைவாக உள்ளதால் தூர் வாரும் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாத தால் வறண்ட நிலையே காணப்படுகிறது. இப்பகுதி யில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    தற்போது நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளது. மேலும் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயிர்களை காப்பாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் மழை இல்லாததால் நில த்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பயிர்க ளை காப்பாற்ற டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களை காப்பாற்றி வருகிறோம். மழை கைகொடுத்தால் மட்டுமே விவசாயத்தை தொடர முடியும். மேலும் அதிக அளவில் பணம் செலவழித்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம். ஆனால் இதற்கான விலை கிடைப்பதில்லை. எனவே அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    வறட்சி காலத்தில் விவ சாயிகளுக்கு உதவ நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×