என் மலர்
தேனி
- சுதந்திர தினத்தில் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது.
- மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
தேனி:
சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து மதுக்கடை களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அன்றைய தினம் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது.
இருந்தபோதும் சிலர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் தேனி போலீசார் உழவர்ச ந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்ற சுப்பிரமணி (வயது30) என்பவரை கைது செய்து 59 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பழனிசெட்டிபட்டி போலீசார் தெற்கு ஜெகநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்ற சின்னச்சாமி (57) என்பவரை கைது செய்து 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோம்பை போலீசார் துரைசாமிபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது மது விற்பனையில் ஈடுபட்ட மணிமாறன் (42) என்பவரை கைது செய்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- டிப்பர் லாரியை மறித்து ஆய்வு செய்த போது எம் -சாண்ட் மணல் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
- டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதிகாரிகள் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அனுமதி சீட்டு இல்லாமல் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாக தேனிமாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் கம்பம்மெட்டு சோதனை சாவடியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பாண்டியராஜன் போலீசாருடன் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் உள்ள அனுமதி சீட்டுகளை ஆய்வு செய்தார்.
அப்போது டிப்பர் லாரியை மறித்து ஆய்வு செய்த போது எம் -சாண்ட் மணல் இருந்துள்ளது. இதற்கான அனுமதி சீட்டினை லாரி டிரைவரிடம் கேட்டபோது டிரைவர் அனுமதி சீட்டு இல்லையென கூறிவிட்டு தப்பியோடிவிட்டார். டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதிகாரிகள் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து உதவி புவியியலாளர் பாண்டியராஜன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ள லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
- இடுக்கி மாவட்டம் உருவாகி 50ம் ஆண்டை முன்னிட்டு கோடை சுற்றுலா சீசனை கருத்தில் கொண்டு இடுக்கி அணையை மே 31ந் தேதி வரை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- சுற்றுலா பயணிக ளுக்கு அக்டோபர் 31ந் தேதி வரை அனுமதி அளித்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணை உள்ளது. ஆர்ச் வடிவிலும் அதன் அருகே செருதோனி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டபோதிலும் தண்ணீர் ஒன்றாக தேங்கு கிறது. மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பலத்த பாதுகாப்பு வளையத்துக்கு உட்பட்டது.
ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின் போது மட்டும் சுற்றுலா பயணிகள் அணையை காண அனுமதிக்கப்படுகின்றனர். இடுக்கி மாவட்டம் உருவாகி 50ம் ஆண்டை முன்னிட்டு கோடை சுற்றுலா சீசனை கருத்தில் கொண்டு இடுக்கி அணையை மே 31ந் தேதி வரை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு ஆக.31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஓணம், தசரா பண்டிகைகள் நெருங்குவ தால் இடுக்கி அணையை காண சுற்றுலா பயணிக ளுக்கு அக்டோபர் 31ந் தேதி வரை அனுமதி அளித்து நீட்டிக்கப்பட்டு ள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அணையை கண்டு ரசிக்க லாம். நுழைவு கட்டணம் ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. காமிரா, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரண மாக புதன்கிழமைகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உப்புத்துறையில் இருந்து 18 கி.மீ தூரம் நடந்து சென்றால் சுந்தரமகாலிங்கம் கோவிலை அடைந்து விட முடியும். இதற்காக உப்புத்துறைக்கு 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது
- வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதிக்க ப்படுகின்றனர்.
வருசநாடு:
விருதுநகர் மாவட்டம் வத்ராப் அருகில் அமைந்து ள்ள சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த கோவிலுக்கு செல்ல தாணிப்பாறை வழியாகவும், தேனி மாவட்டம் உப்புத்துறை வழியாகவும் 2 பாதைகள் உள்ளது. உப்புத்துறை பகுதி மேகமலை வனச்சரணா லயத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த பாதை வருடம் முழுவதும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை அன்று மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். உப்புத்துறையில் இருந்து 18 கி.மீ தூரம் நடந்து சென்றால் சுந்தரமகாலிங்கம் கோவிலை அடைந்து விட முடியும். இதற்காக உப்புத்துறைக்கு 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி தரிச னத்துக்காக நேற்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உப்புத்துறை கிராமத்திற்கு வந்து மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். மேகமலை வனப் பாதுகாப்பு வன சரகர் சாந்தினி தலை மையிலான வனத்துறையி னர் வருசநாடு, மேகமலை, கண்டமனூர் வனத்துறை யினர் யானைக்கஜம் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து கோவி லுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பிளாஸ்டிக், தீப்பெட்டி, பீடி, சிகரெட் உள்ளிட்ட தடை செய்யப்ப ட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களுக்கு மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதிக்க ப்படுகின்றனர். அதேபோல மயிலாடு ம்பாறை போலீ சாரும் தொடர்ந்து பாது காப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடை பெறுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
- இதனால் அதிகாரி களுக்கும், பொதுமக்களு க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியபிள்ளைபட்டியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் காளித்தாய். துணைத்தலைவராக உதயபிரகாஷ் என்பவரும், செயலாளராக ஜோதிபாசு என்பவரும் இருந்து வரு கின்றனர். இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடை பெறுவதாக கூறி கடந்த வாரம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இன்று கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு கூட்டத்தை நடத்த விடாமல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். 100 நாள் திட்டப்பணியில் போலி பயனாளிகளை சேர்த்துள்ளதாகவும், இதனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி உண்மையான பயனாளிகளை பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் அதிகாரி களுக்கும், பொதுமக்களு க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜதானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர்ரகு மான் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் பொது மக்கள் அதனை ஏற்றுக்கொ ள்ளாததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் ஆண்டிபட்டி அருகில் உள்ள ரெங்க சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. காலை 11.30 மணிவரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கூட்டத்தை நடத்த கூடாது என்றும், தீர்மானம் எதையும் நிறைவேற்ற க்கூடாது என்றும் பொது மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
இந்த ஊராட்சியின் செயலாளர் எஸ்.எஸ்.புரம் ஊராட்சியையும் கூடுதலாக கவனித்து வருவதால் அங்கு கூட்டத்தை முடித்துவிட்டு இங்கு வர தாமதமானது. இதனால்தான் அதிகாரிகள் வரதாமதமானது என தெரிவிக்கப்பட்டது. அதன்பின் கூட்டம் நடத்தப்பட்டது.
- பி12 - நெல் விழாவில் பங்கேற்று நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
- வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பெரியகுளம்:
திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்களான அருண்பாரதி, ஆசிஷ்குமார், லிங்கேஸ்வரன், தேவா, மகிழ் அமுதன் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மேல்மங்கலம் பகுதியில் பெரியகுளம் வட்டார வேளாண்மை துறையினரால் நடைபெற்ற "பி12 - நெல் விழா"வில் பங்கேற்று நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் இலை வண்ண அட்டவணை கொண்டு நைட்ரஜன் பரிசோதிக்கும் முறை, இயற்கை முறையில் நெல் விதைநேர்த்தி செய்யும்முறை மற்றும் குருத்து பூச்சியை தடுக்கும் முறைகள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தனர்.
இதில் பாட ஆசிரியர்கள் டாக்டர் கண்ணபிரான், விஜயகுமார், வட்டார வேளாண் இணை இயக்குனர், காமாட்சிபுரம் சென்டகட் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உப்பு க்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த பால்கரு ப்பையா மகள் பால்பாக்கி யம் (வயது 15). இவர் அங்குள்ள பச்சையப்பா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் முத்து வீரி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பாலக்கோம்பை கென்னடி நகரைச் சேர்ந்த கருப்பையா மகள் கீர்த்தனா (19). இவர் வீரபாண்டியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் ஜெயலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமரகுருபரன் மகன் சந்திரசேகர் (19). இவர் டிரம்ஸ் செட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று டிரம்ஸ் செட் அடிக்கும் பணிக்காக வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோனை கருப்புசாமி கோவிலில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சார்பில் 43 ஆடுகள், 26 சேவல்கள் கோவிலில் பலியிடப்பட்டன.
- கோவிலின் ஜன்னல்கள், கதவு உள்ளிட்டவற்றை அடைத்த அவர் கோவில் சுவற்றில் சுவாமிக்கு அருகில் உள்ள பெரிய துவாரம் வழியாக அனைத்து மதுபாட்டில்களையும் உடைத்து ஊற்றினார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திரு க்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடி சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 22-ந் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சனீஸ்வர பகவானுக்கும் , நீலாதேவி க்கும் திருக்கல்யாணம் கடந்த 4ந் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சக்திகரகம் எடுத்தல், சந்தனகாப்பு, சாத்துபடி, சுவாமி புறப்பாடு, முளைப்பாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று இரவு இங்குள்ள சோனை கருப்பசாமிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சார்பில் 43 ஆடுகள், 26 சேவல்கள் கோவிலில் பலியிடப்பட்டன. மேலும் ஏராளமானோர் மதுபாட்டில்கள், சுருட்டுகளை சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர்.
அதன்பின் வாயில் துணி கட்டிய பூசாரி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். கோவிலின் ஜன்னல்கள், கதவு உள்ளிட்டவற்றை அடைத்த அவர் கோவில் சுவற்றில் சுவாமிக்கு அருகில் உள்ள பெரிய துவாரம் வழியாக அனைத்து மதுபாட்டில்களையும் உடைத்து ஊற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பலியிட்ட ஆடு, சேவல்களை சமைத்து கறி விருந்து சாப்பிட்டனர்.
இதன்பின்னர் வருகிற 19ந் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடி இறக்கத்துடன் ஆடிப்பெரு ந்திருவிழா நிறைவு பெறுகிறது.
- நோய் கொடுமையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் 25-வது வார்டு நந்தகோபாலன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 45). இவருக்கு கடந்த சில வாரங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தன்று மனமுடைந்த நிலையில் இருந்த ஜெகதீஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கணேஷ்வரி கொடுத்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தொடர்ந்து குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி ஓடை வழியாக ஆற்றில் கலந்து வருகிறது.
- தொடர்ந்து நீர் வெளி யேறி வருவதன் காரண த்தால் துரைச்சாமிபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கட மலை- மயிலை ஒன்றியம் துரைச்சாமிபுரம் ஊராட்சி க்கு மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு துரைச்சாமிபுரம் அருகே கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இது தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால் தொடர்ந்து குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி ஓடை வழியாக ஆற்றில் கலந்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் குழாய் உடைப்பை சீரமைக்க எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
தொடர்ந்து நீர் வெளி யேறி வருவதன் காரண த்தால் துரைச்சாமிபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வைகை ஆறு வறண்டதால் உறை கிணறு களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த நிலை நீடித்தால் விரைவில் துரைச்சாமிபுரம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு குடிநீர் பிடிக்க பொதுமக்கள் வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே கூட்டுக் குடிநீர் திட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாய் அடைப்பை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 4 நில ஆர்ஜித வழக்குகளும், 10 மோட்டார் வாகன வழக்குகளும், 5 வங்கி தொடர்பான வழக்கு களும் என மொத்தம் 19 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
- மொத்தம் ரூ.3,37,15,158-க்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்திரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.
தேனி:
2023-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த வேண்டும் என மாநில சட்டப்பணிகள் ஆணை யக்குழு உத்தரவிட்டதன் பேரில் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தேனி மாவட்ட முதன்மை நீதியரசர் சஞ்சய்பாபா தலைமையிலும் சிறப்பு மக்கள் நீதிமன்ற சார்பு நீதியரசர் சுந்தரி முன்னிலை யில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 4 நில ஆர்ஜித வழக்குகளும், 10 மோட்டார் வாகன வழக்குகளும், 5 வங்கி தொடர்பான வழக்கு களும் என மொத்தம் 19 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் மொ த்தம் ரூ.3,37,15,158-க்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்திரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணையக்குழு வக்கீல் கருணாநிதி மற்றும் பிற வக்கீல்கள், சட்ட ப்ப ணிகள் ஆணையக்குழு அலுவல ர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவிலில் 1008 விளக்கு பூஜையும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட ருத்ராட்சம் வழங்கப்பட்டது.
கூடலூர்:
கூடலூர் அருகே தாமரைக்குளம் சாலையில் 100 ஆண்டு பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்ப ட்டது. கூடலூர், கம்பம், பாளையம் உள்ளடக்கிய பகுதியை ஆண்ட கேரள மாநில பூஞ்சாற்று அரச வம்சத்தை சேர்ந்த பூஞ்சாற்று தம்பிரான் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக கூற படுகிறது. காலப்போ க்கில் இக்கோ வில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது சேதம் அடைந்த இக்கோவிலில் பக்தர்கள் வாரந்தோறும் சென்று வழிபட்டு வருகின்றனர்.பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவிலில் 1008 விளக்கு பூஜையும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முன்னதாக கூடலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து ஒருங்கி ணைந்த 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் தேவர் தலைமையில், இந்து முன்னணி நகர பொது ச்செயலாளர் ஜெகன், நகர செயலாளர் அருண், நகர துணைத்தலைவர் ஸ்டீபன் ராஜ் மற்றும் விவசாயிகள் ,இந்து முன்னணி நிர்வாகிகள் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து சொற்பொழிவு, அன்னதான நிகழ்ச்சியை விவசாய சங்க தலைவர் தேவர் தொடங்கிவைத்தார்.
விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட ருத்ராட்சம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் வார வழிபாட்டு குழு, தர்ம விழிப்புணர்வு இயக்கத்தினர் செய்து இருந்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லாவண்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






