என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூடலூர் ஈஸ்வரன் கோவிலில் 1008 விளக்கு பூஜை வழிபாடு
- பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவிலில் 1008 விளக்கு பூஜையும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட ருத்ராட்சம் வழங்கப்பட்டது.
கூடலூர்:
கூடலூர் அருகே தாமரைக்குளம் சாலையில் 100 ஆண்டு பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்ப ட்டது. கூடலூர், கம்பம், பாளையம் உள்ளடக்கிய பகுதியை ஆண்ட கேரள மாநில பூஞ்சாற்று அரச வம்சத்தை சேர்ந்த பூஞ்சாற்று தம்பிரான் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக கூற படுகிறது. காலப்போ க்கில் இக்கோ வில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது சேதம் அடைந்த இக்கோவிலில் பக்தர்கள் வாரந்தோறும் சென்று வழிபட்டு வருகின்றனர்.பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவிலில் 1008 விளக்கு பூஜையும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முன்னதாக கூடலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து ஒருங்கி ணைந்த 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் தேவர் தலைமையில், இந்து முன்னணி நகர பொது ச்செயலாளர் ஜெகன், நகர செயலாளர் அருண், நகர துணைத்தலைவர் ஸ்டீபன் ராஜ் மற்றும் விவசாயிகள் ,இந்து முன்னணி நிர்வாகிகள் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து சொற்பொழிவு, அன்னதான நிகழ்ச்சியை விவசாய சங்க தலைவர் தேவர் தொடங்கிவைத்தார்.
விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட ருத்ராட்சம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் வார வழிபாட்டு குழு, தர்ம விழிப்புணர்வு இயக்கத்தினர் செய்து இருந்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லாவண்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்