என் மலர்
தேனி
- குடி பழக்கத்துக் அடிமையான வாலிபருக்கு இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்துள்ளது.
- தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து மயங்கினார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்தவர் கணபதி (வயது42). திருமண மாகாதவர். குடி பழக்கத்துக் அடிமையானவர். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்துள்ளது.
பெயிண்டிங் வேலை பார்த்து வந்த கணபதிக்கு சம்பவத்தன்று சீலையம்பட்டி சமத்துவ புரத்தில் வேலை பார்த்தபோது வலிப்பு ஏற்பட்டது. அப்போது தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து விட்டார்.
தேனி க.விலக்கு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் கருப்புத்துரை கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்க தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை மானிய விலையில் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேனி:
தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் பிரபு ராஜா தலைமையில் தேனி மாவட்ட தலைவர் தங்கராஜ், தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக் குமார், பெரியார்-வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்காட்சி கண்ணன் மற்றும் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்க தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், தமிழ கத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்கள் ரத்து, விலையில்லா மின்சாரம், உழவர் சந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு செய்து வருகிறது. அதேவேளையில் தென்னை விவசாயிகளின் தீராத பிரச்சனைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். இதில் தமிழக மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை மானிய விலையில் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் பொது மக்களின் ஆரோக்கியமும் பெருகும், விவசாயமும் மேம்படும். அதுபோல கிராம பொருளாதரத்தை மேம்படுத்தவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், மரம் ஏறும் தொழிலாளர்களின் வருமானத்தை கூட்டவும் தமிழக அரசு தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.
விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்த உரத்தின் விலை தற்போது 4 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் தேங்காயின் விலையோ ஒரு மடங்கு கூட உயரவில்லை. இதனால் விவசாயிகளுக்கு உரம், ஆட்கள் கூலி, பெட்ரோலிய பொருட்க ளின் விலை உயர்வு போன்றவற்றால் உற்பத்தி செலவு பெருமளவு கூடி உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு கொண்டிரு க்கிறார்கள்.
இதே நிலை நீடித்தால் நாட்டில் உணவு பஞ்சம் வருவதை யாராலும் தடுக்க முடியாது. எனவே தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து ஆவண செய்யு மாறு லட்சக்கணக்கான தென்னை சாகுபடி யாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டிருந்தது.
- பைக் மீது கார் மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
- புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டிடு
கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பையை சேர்ந்தவர் பாண்டியராஜன்(வயது23). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது உறவினர் ராணி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வத்தலகுண்டு-கொடைக்கானல் சாலையில் வந்து கொண்டு இருந்தார்.
டம்டம் பாறை அருகே வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் 2 பேரும் காயம் அடைந்தனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கேரள அரசு அணையின் உறுதி தன்மை குறித்து அடிக்கடி சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.
- மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
பருவநிலை மாறுபாடுகளின்போது முல்லைப்பெரியாறு அணையின் உறுதி தன்மை பராமரிப்பு பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய மத்திய தலைமை கண்காணிப்புக்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த குழுவுக்கு உதவியாக துணை மத்திய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த 2 குழுக்களும் உச்சநீதிமன்றத்தில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பார்கள். அதன்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள அரசு அணையின் உறுதி தன்மை குறித்து அடிக்கடி சந்தேகம் கிளப்பி வருகின்றனர். ஆனால் மத்திய குழுவினர் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என அறிக்கை சமர்பித்துள்ளனர். கடந்த மே மாதம் 15-ந் தேதி மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு நடத்தியது.
இந்த நிலையில் இன்று தலைவர் சதீஸ்குமார் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசு சார்பில் அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் கட்டப்பணை நீர் பாசனத்துறை செயற்பொறியாளர் அனில்குமார், உதவி செயற்பொறியாளர் அருண் ஆகியோர் குழுவில் இடம் பெற்றனர். இந்தக்குழுவினர் மெயின் அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகுகள் மற்றும் தண்ணீர் கசிவு பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும் மதகுகளையும் இயக்கிப்பார்த்து நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து சோதனையிட்டனர். பின்னர் மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர். இதன் அறிக்கைகள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
- நோய் கொடுமை மற்றும் தொழில் நஷ்டத்தால் வாழ்க்கையில் வெறுப்படைந்து 2 முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் :
உத்தமபாளையம் அருகே களிமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது60). குடும்பத்துடன் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். மது போதைக்கு அடிமையான தால் குடும்பத்தினர் கண்டித்தனர். மேலும் தொழிலிலும் கவனம் செலுத்த முடிய வில்லை. இதனால் விரக்தி அடைந்த கேசவன் விஷம் குடித்து மயங்கினார்.
அக்கம்பக்கத்தி னர் அவரை உத்தமபாளை யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோம்பை அருகே பண்ணை புரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 83). நோய் கொடுமையால் அவதி பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் மனம் வெறுத்து விஷம் குடித்து மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- அங்கன்வாடி மையங்கள், நூலகங்கள், சத்துணவு மையங்களிலும் ஆய்வு மேற்கொ ண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, சிலமலை, நாகலாபுரம், மற்றும் ராசிங்காபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உப்புக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி களையும், 15வது நிதிக்குழு மானியத்திட்ட த்தின் கீழ் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.49.90 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளையும்,
டொம்பு ச்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.60 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தி கூடம் அமைக்கும் பணிகளையும், சிலமலை ஊராட்சி மல்லிங்காபுரம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.55 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை மற்றும் சமத்துவ மயானத்தில் சுற்றுச்சுவர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 4 லட்சம் மதிப்பீட்டில் குழாய்கள் பதிக்கும் பணிகளையும், நாகலாபுரம் ஊராட்சியில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிய 2 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளையும்,
மேலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இணைய தளம் வரிவசூல் செய்யும் பணிகளையும்,
ராசிங்காபுரம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி சமையல் அறை கட்டிடம் அமைக்கும் பணி களையும் பார்வையிட்டார். ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் மதிய உணவு வழங்கப்படுவதையும், உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், அங்க ன்வாடி மையங்கள், நூலக ங்கள், சத்துணவு மையங்க ளிலும் ஆய்வு மேற்கொ ண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.
- ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகா லையில் இருந்தே ஆயிரக்க ணக்கான பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்தனர்.
- சுருளிதீர்த்தம் பண்டார துறையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவருக்கு சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட 18 வகையான அபிஷேகங்கள் நடை பெற்றது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்து ள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. இங்கு கைலாசநாதர் குகை, பூத நாரயணன் கோவில், ஆதி ,அய்யப்பன் கோவில், கன்னிமார் கோவ்இல் ஆகியவை உள்ளன. இத னால் ஏராளமான சுற்று லாப் பயணிகளும், பக்தர்க ளும் சுருளி அருவியில் குளித்துவிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.
, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகா சிவராத்திரி நாட்களில் காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக சுருளி அருவி பகுதியில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) மற்றும் ஆத்ம சாந்தி வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்ற னர். நேற்று ஆடி அமாவா சையை முன்னிட்டு அதிகா லையில் இருந்தே ஆயிரக்க ணக்கான பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்தனர்.
அருவியில் நீராடிய பின்னர் அருகே உள்ள சுருளி அருவி ஆற்றில் தங்களது முன்னோர்கள் ஆத்ம சாந்தி வழிபாடுகள் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து கோவில்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்து, அன்னதானம், வஸ்த்திர தானம் செய்தனர். பின் புனித நீரினை பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த உத்தமபாளை யம் ஏ.எஸ்.பி மதுக்குமாரி உத்தரவில் கம்பம் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் ஏராளமான போலீசாரும், கம்பம் கிழக்கு வனசரகர் பிச்சை மணி தலைமையில் வனத்துறை யினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சுருளிதீர்த்தம் பண்டார துறையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவி லில் உள்ள மூலவருக்கு தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட 18 வகை யான அபிஷேகங்கள் நடை பெற்றது. பூசாரி முருகன் சிறப்பு வேள்வி யாகத் துடன் பூஜை செய்தார்.
ஆதி அண்ணாமலையார் பக்தர்க ளுக்கு வில்வ அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் காலை முதல் மாலைவரை அன்னதானம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த சுருளி பட்டியில் இருந்து சுருளி அருவிக்கு செல்ல ஒரு வழி பாதை அமல் படுத்தப்பட்டிருந்தது.
- மத்திய குழுவினர் பெரி யாறு அணை உறுதியாக உள்ளது என அறிக்கை சமர்பித்துள்ளனர். கடந்த மே மாதம் 15-ந் தேதி மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு நடத்தியது.
- மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழு வினர் ஆலோசனை நடத்துகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை ப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக வும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
பருவநிலை மாறுபாடு களின் போது முல்லைப்பெரி யாறு அணையின் உறுதி தன்மை பராமரிப்பு பணி கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய மத்திய தலைமை கண்காணிப்பு க்குழு அமைத்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
இந்த குழுவுக்கு உதவியாக துணை மத்திய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த 2 குழுக்களும் உச்சநீதிமன்ற த்தில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பார்கள். அத ன்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள அரசு அணையின் உறுதி தன்மை குறித்து அடிக்கடி சந்தேகம் கிளப்பி வருகின்றனர். ஆனால் மத்திய குழுவினர் பெரி யாறு அணை உறுதியாக உள்ளது என அறிக்கை சமர்பித்துள்ளனர். கடந்த மே மாதம் 15-ந் தேதி மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு நடத்தியது.
இந்த நிலையில் இன்று தலைவர் சதீஸ்குமார் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசு சார்பில் அணையின் செயற்பொறி யாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் கட்டப்பணை நீர் பாசன த்துறை செயற்பொறியாளர் அனில்குமார், உதவி செயற்பொறியாளர் அருண் ஆகியோர் குழுவில் இடம் பெற்றனர். இந்தக்குழுவினர் மெயின் அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகுகள் மற்றும் தண்ணீர் கசிவு பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும் மதகுகளையும் இயக்கிப்பார்த்து நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து சோதனையிட்டனர். பின்னர் மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணை க்குழு வினர் ஆலோசனை நடத்துகின்றனர். இதன் அறிக்கைகள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- சிறுமியை ஏமாற்றி கற்பழித்த வெல்டிங் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் படித்து வந்தார். சிறுமியின் பெற்றோர் தனியார் மில்லில் வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமி தெரிவிக்கையில், எனது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற சமயத்தில் எனது பெரியப்பா மகனான 27 வயது சகோதரர் என்னுடன் நெருக்கமாக பழகினார். பின்னர் பலமுறை பலாத்காரம் செய்தார். இதனால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறவேண்டாம் எனவும் மிரட்டி வந்தார் என தெரிவித்தார். இதனிடையே சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது.
தேனி அனைத்து மகளிர் போலீசார் தங்கை உறவுமுறை கொண்ட சிறுமியை ஏமாற்றி கற்பழித்த வெல்டிங் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலப்பிரச்சினை காரணமாக வாலிபர் எலுமிச்சை மற்றும் தென்னை மரங்களுக்கு தீ வைத்தார்.
- புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தை சேர்ந்தவர் மனோஜ் (வயது34). இவருக்கு ஆனை மலையான்பட்டி பாலோடை அருகே தோட்டம் உள்ளது. இங்கு தென்னை, எலுமிச்சை விவ சாயம் செய்து வருகின்றார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த கண்ணன் (34) என்பவருக்கும் நிலப்பிரச்சினை காரண மாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இங்கு புகுந்த ஆனந்த கண்ணன் தென்னை, எலுமிச்சை மரங்களை சேதப்படுத்தி தீ வைத்தார்.
இது குறித்து ராயப்ப பன்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
ராாயப்பன்பட்டியை சேர்ந்தவர் ஜஸ்டின்பிர பாகர். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் சவரிமுத்து என்பவரின் கட்டிட வேலை பார்த்து அதற்கான முழு பணத்ைத பின்னர் தருவதாக கூறி இருந்தார். ஆனால் பணம் தராமல் காலம் தாழ்த்திய தால் சவரிமுத்துவிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சவரிமுத்து, அவரது மனைவி பாப்பா உள்பட 5 பேர் ஜஸ்டின்பி ரபாகரை கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டி உள்ளனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை தாக்கிய முதியவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் முதியவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன்ப ட்டியை சேர்ந்தவர் ராணியம்மாள் (வயது60). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஜெய க்கொடி (73). இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவ த்தன்று அத்துமீறி ராணி யம்மாள் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்கொடியை கைது செய்தனர்.
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (34). இவர் அப்பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அழகுராஜா என்பவர் இட்லி கேட்டு ஓட்டலுக்கு வந்துள்ளார். இட்லி தீர்ந்துபோய்விட்ட தாக கண்ணன் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அழகுராஜா அவரை சட்டையை பிடித்து இழுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பொதுமக்களில் சிலரை பேசவிடாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வாயில் கருப்பு கட்டி போராட்டம் நடத்தினர்.
- சம்பவ இடத்தில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களில் சிலரை பேசவிடாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டியும், கையில் ஊராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுதியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதற்கு அனுமதி அளித்த பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






