search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subcommittee study"

    • மத்திய குழுவினர் பெரி யாறு அணை உறுதியாக உள்ளது என அறிக்கை சமர்பித்துள்ளனர். கடந்த மே மாதம் 15-ந் தேதி மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு நடத்தியது.
    • மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழு வினர் ஆலோசனை நடத்துகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை ப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக வும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    பருவநிலை மாறுபாடு களின் போது முல்லைப்பெரி யாறு அணையின் உறுதி தன்மை பராமரிப்பு பணி கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய மத்திய தலைமை கண்காணிப்பு க்குழு அமைத்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

    இந்த குழுவுக்கு உதவியாக துணை மத்திய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த 2 குழுக்களும் உச்சநீதிமன்ற த்தில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பார்கள். அத ன்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள அரசு அணையின் உறுதி தன்மை குறித்து அடிக்கடி சந்தேகம் கிளப்பி வருகின்றனர். ஆனால் மத்திய குழுவினர் பெரி யாறு அணை உறுதியாக உள்ளது என அறிக்கை சமர்பித்துள்ளனர். கடந்த மே மாதம் 15-ந் தேதி மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு நடத்தியது.

    இந்த நிலையில் இன்று தலைவர் சதீஸ்குமார் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசு சார்பில் அணையின் செயற்பொறி யாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் கட்டப்பணை நீர் பாசன த்துறை செயற்பொறியாளர் அனில்குமார், உதவி செயற்பொறியாளர் அருண் ஆகியோர் குழுவில் இடம் பெற்றனர். இந்தக்குழுவினர் மெயின் அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகுகள் மற்றும் தண்ணீர் கசிவு பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும் மதகுகளையும் இயக்கிப்பார்த்து நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து சோதனையிட்டனர். பின்னர் மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணை க்குழு வினர் ஆலோசனை நடத்துகின்றனர். இதன் அறிக்கைகள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக்குழுவினர் இன்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். #periyardam #MullaPeriyarDam
    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவிற்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையில் தமிழக பிரதிநிதிகளாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணி, உதவி கோட்ட பொறியாளர் ஷாம் இர்வின் ஆகியோரும் கேரள அரசு பிரதிநிதிகளாக நீர்பாசனத்துறை உதவி செயற்பொறியாளர் ஷாஜி ஐசக், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    கடந்த மார்ச் 6-ந் தேதி அணையின் நீர் மட்டம் 113.55 அடியாக இருந்தபோது துணைக்குழுவினர் அணையில் ஆய்வு செய்தனர். பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் மத்திய துணைக்குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுக்கு வந்தனர். தமிழக குழுவில் இடம்பெற்றுள்ள ஷாம் இர்வின் மட்டும் ஆய்வுக்கு வரவில்லை. அவர் டெல்லியில் நடைபெறும் நீர்பாசனத்துறை கூட்டத்தில் பங்கேற்பதால் ஆய்வுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.


    முல்லைப் பெரியாறு அணையில் மதகுகள், ‌ஷட்டர்கள் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் பேபி அணையையும் பார்வையிட்டு அணைக்கு வரும் நீர் வரத்து, கசிவு நீர் விபரம் போன்றவற்றையும் அளவீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாலையில் குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அணையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து துணைக்குழுவினர் தங்களது அறிக்கையை கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர் வள ஆணைய அணைப்பாதுகாப்பு பிரிவு தலைமைப் பொறியாளர் குல்சன்ராஜூக்கு அனுப்பி வைக்க உள்ளனர். #periyardam #MullaPeriyarDam
    ×