search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
    X

    தேனி அருகே தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • சிறுமியை ஏமாற்றி கற்பழித்த வெல்டிங் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் படித்து வந்தார். சிறுமியின் பெற்றோர் தனியார் மில்லில் வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறுமி தெரிவிக்கையில், எனது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற சமயத்தில் எனது பெரியப்பா மகனான 27 வயது சகோதரர் என்னுடன் நெருக்கமாக பழகினார். பின்னர் பலமுறை பலாத்காரம் செய்தார். இதனால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறவேண்டாம் எனவும் மிரட்டி வந்தார் என தெரிவித்தார். இதனிடையே சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது.

    தேனி அனைத்து மகளிர் போலீசார் தங்கை உறவுமுறை கொண்ட சிறுமியை ஏமாற்றி கற்பழித்த வெல்டிங் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×