என் மலர்
தேனி
- அரசரடி, வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது.
- மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும்.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு நீர்மட்டம் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசரடி, வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 47.63 அடியாக சரிந்துள்ளது. இதனால் முதல்போக சாகுபடி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.50 அடியாக உள்ளது. 83 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.99 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- 248-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டது.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் வகையில் வேலைவாய்ப்புத்துறை மற்றும் மகளிர் திட்டத்தின் வாயிலாக பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுனர்களை தேர்வு செய்யவுள்ளனர். பல திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மாதம் கடைசி வெள்ளிக் கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து மாதாந்திர வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று தங்கள் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 2858 மாணவர்கள் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்தனர். அதில் 317 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கபட்டுள்ளது. 248-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டது.
இதில் நகராட்சி தலைவர் சுமிதா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல், எண்டப்புளி ஊராட்சிமன்ற தலைவர் சின்னபாண்டி, தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஐசக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அணி, அணியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னமனூர்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கி ணங்க மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அணி, அணியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி தேனி முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் தலைமையில் மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் பிச்சைக்கனி முன்னிலையில் சின்னமனூர் நகர அ.தி.மு.க. சார்பாக 25 பஸ்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுரை மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றனர்.
சின்னமனூர் நகர அவைத்தலைவர் ராமர், மாவட்ட பிரதிநிதி மதிவாணன், வக்கீல் பிரிவு பொறுப்பாளர் ஜெகன்ராஜ், நகர்மன்ற தலைவர், நகர கிளைச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
- வீட்டில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே வடபுதுப்பட்டியை சேர்ந்தவர் காசிராஜ்(67). இவருக்கு குபேரன்நகரில் சொந்தவீடு உள்ளது. அந்த வீட்டின் கீழ்தளத்தில் சிவகாசி வடமலாபுரம் பகுதிைய சேர்ந்த நாச்சியார்கண்ணன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.
மேல்தளத்தில் காசிராஜ் அவ்வப்போது தங்குவதற்காக சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டுக்கு சென்ற போது வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கதவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.
மேல்தளத்திலும் இதேபோல் பொருட்கள் சிதறிகிடந்தன. ஆனால் வீட்டில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- நண்பருடன் அடிக்கடி ஒன்றாக மது குடித்து வந்தனர்.
- இந்தநிலையில் முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு கருப்பையாவை சிமிண்ட் கல்லால் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தினார்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் கருப்பையா(23). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர் தினேஷ். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடித்து வந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தினேஷ் கருப்பையாவை தாக்க முற்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது தாயிடம் கருப்பையா கூறியுள்ளார். இந்தநிலையில் தினேஷ் முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு கருப்பையாவை சிமிண்ட் கல்லால் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தினார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை விலக்கிவிட்டனர். தினேஷ் கருப்பையாவிடம் கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் தினேசை கைது செய்தனர். காயமடைந்த கருப்பையா உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- பணத்தை திருப்பி தராமலும், தற்போது தங்கியுள்ள வீட்டை தனது பெயரில் எழுதி வைக்ககோரி பிரச்சினை செய்துள்ளார்.
- படுகாயமடைந்த மூதாட்டியை கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கூடலூர்:
கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் ராசு மனைவி தேனம்மாள்(75). இவரது உறவினர் ஜீவா(56). இவர் தேனம்மாளின் வீட்டில் குடியிருந்து வருகிறார். அவரிடம் ரூ.2லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பி தராமலும், தற்போது தங்கியுள்ள வீட்டை தனது பெயரில் எழுதி வைக்ககோரி பிரச்சினை செய்துள்ளார்.
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவா, பசுபதி, இலக்கியா, ஜெயச்சந்திரன் ஆகியோர் தேனம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஜீவா அரிவாளால் தேனம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து ஜீவாவை கைது செய்தனர்.
- அரசு ஊழியர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது.
- குழந்தைகள் கவனிப்பு மையம் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அரசு ஊழியர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட கவனிப்பு மையத்தினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அரசின் சார்பில் மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு விடுப்பு முடிந்து பணியில் சேரும், ஒரு குடும்பத்தில் கணவன். மனைவி அல்லது இருவரும் அரசு ஊழியர்களாக பணிபுரியும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகளை கவனித்து கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையை தவிர்ப்பதற்காக, மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் என மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அரசு பெண் ஊழியர்களின் நலன் கருதி, அவர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் பராமரிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 3-வது தளத்தில் குளிரூட்டப்பட்ட மற்றும் தொலைக்காட்சி வசதியுடன் கூடிய குழந்தைகள் கவனிப்பு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதக்கட்டணமாக ரூ.500 மட்டும் செலுத்தப்பட வேண்டும்.
குழந்தைகள் கவனிப்பு மையம் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். குழந்தைகளுக்கு தொலைக்காட்சி மூலம் அறிவு சார்ந்த குறும்படங்கள், விளையாட்டு குறும்படங்கள் ஒளிபரப்பப்படும். மேலும், கல்வி கற்பிக்கும் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்களுடன், குழந்தைகளை கண்காணித்துக் கொள்ள 2 அங்கன்வாடி பணியாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மையத்தில் குழந்தைகளுக்கு பால் மற்றும் பழங்கள் தினசரி வழங்கப்பட உள்ளது. வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு சுழற்சி முறையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடி மருத்துவ தேவைக்காக, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் மருத்துவரை அழைத்து மருத்துவம் மேற்கொள்ளவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
- 2ம் நாள் நிகழ்ச்சியாக இன்று மங்கல இசை, கணபதி பூஜை மற்றும் பாலிகை பூஜை, யாகசாலை பூஜை, 2ம் கால தியாக தீப ஆராதனை நடைபெற்றது.
- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி காந்தி மைதான வீதியில் உள்ள பிள்ளைச் செல்வம் முத்துமாரியம்மன் திருக்கோவிலில் திருக்குட பன்னீராட்டு பெரும் சாந்தி பெருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று மங்கள இசை உடன் நவக்கிரக பூஜைகள் ஹோமங்கள் தெடங்கப்பட்டு அம்மனுக்கு தீப ஆராதனை நடத்தப்பட்டது.
2ம் நாள் நிகழ்ச்சியாக இன்று மங்கல இசை, கணபதி பூஜை மற்றும் பாலிகை பூஜை, யாகசாலை பூஜை, 2ம் கால தியாக தீப ஆராதனை நடைபெற்றது. 3ம் நாள் நிகழ்ச்சியாக நாளை கும்பாபிஷேகமும், ஆராதனையும், அன்னதானமும் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் அருணாசேகர் மற்றும் கவுரவ தலைவர் மனோகரன் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் செய்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த வாரம் நாகேந்திரனின் மோட்டார் சைக்கிளை பிரகாஷ் வாங்கி சென்று பழுதாக்கி கொடுத்துள்ளார்.
- நாகேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் முத்தையர் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் நாகேந்திரன் (வயது27). இவர் கடந்த 3 வருடங்களாக ஊர்க்காவல்படை வீரராக பணிபுரிந்து வந்தார். இவரும் தேவக்கனி (23) என்பவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இவரும் புதூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவரும் நண்பர்கள். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா சமயத்தில் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்து விட்டார். தற்போது கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகேந்திரனின் லேப்டாப்பை பிரகாஷ் வாங்கி சென்றார். பின்னர் அதனை பழுதாக்கி திருப்பி கொடுத்தார். இதனால் நாகேந்திரன் சத்தம் போட்டுள்ளார். அதன்பின் கடந்த வாரம் நாகேந்திரனின் மோட்டார் சைக்கிளை பிரகாஷ் வாங்கி சென்று பழுதாக்கி கொடுத்துள்ளார்.
இதனால் லேப்டாப் மற்றும் மோட்டார் சைக்கிள் பழுதாகி கொடுத்தற்கான தொகையை பிரகாசிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
நேற்று இரவு நாகேந்திரனுக்கு போன் செய்து பணம் தருவதாக பிரகாஷ் கூறி உள்ளார். இதனால் மோட்டார் சைக்கிளில் நாகேந்திரன் வெளியே வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரகாஷ் அவரை பல இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் நாகேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதன்பின் தான் வெட்டிய அரிவாளுடன் கூடலூர் டவுன் வடக்கு போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் சரண் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
- பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை.
- கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் தடை இல்லை.
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கியில் ஆளும் கம்யூனிஸ்ட்டு அரசை எதிர்த்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கிய பிரச்சினை உள்பட பல்வேறு விஷயங்களில் மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இதனையொட்டி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும். வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை. இதேபோல்தற்போது சபரிமலையில் ஆவணி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. எனவே கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் தடை இல்லை. மற்ற அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், பாளையம், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். முழு அடைப்பு போராட்டம் காரணமாக வாகனங்கள் இயக்கப்படாததால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை.
இதேபோல் கேரளாவுக்கு வந்த சுற்றுலா மற்றும் பிற வாகனங்கள் மாவட்ட எல்லையிலேயே திருப்பி விடப்பட்டன. இரு மாநில எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. எல்லைப்பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் “நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்” விழிப்பு ணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
- தொழிற்பயிற்சி மேற்கொ ண்ட 19 மாணவிகளுக்கு தொழிற்திறன் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" விழிப்பு ணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
இதில் கலெக்டர் பேசிய தாவது:
கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுத்து அவர்க ளுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் நவீன தொழிற்பயிற்சி காலத்தில் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இனியில்லை என ஒத்துக்கொள் என்ற பழமொழிக்கேற்ப பெண்கள் அனைவரும் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் மூலம் பெண்களின் வேலை வாய்பை அதிகரிக்கவும் பெண்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்து வதற்காகவும் பெண்களு க்கென தனி தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க ப்பட்டு பல்வேறு சிறப்பு தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்டிபட்டி பேரூராட்சி பாப்பம்மாள்புரம் பகுதியில் வசித்துவரும் அமுதா என்ற பெண் தனது கணவனை இழந்து தனது 2 ஆண் குழந்தைகளுடன் தனக்கு தெரிந்த அடிப்படை தையல் தொழிலை சிறிய அளவில் மேற்க்கொண்டு தனது குழந்தைகளை படிக்க வைத்துள்ளார்.
அமுதா கடந்த 2017-ம் ஆண்டு தனது 48 வது வயதில் ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சூவிங் டெக்னாலஜி பிரிவில் சேர்ந்து நவீன தொழில்நுட்ப தையல் பயிற்சி 1 வருட பயிற்சி பெற்றார்.
கல்வி பயின்ற சான்றிதழ் மூலம் மாவட்ட தொழில் மையத்தை அணுகி கனரா வங்கி மூலம் ரூ.75,000/- கடன் உதவி பெற்று சிறிய அளவில் நடத்தி வந்த தையல் தொழில் இன்று 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கும் அளவிற்கு இந்த நவீன தொழிற் பயிற்சி கல்வி மாற்றியுள்ளது.
கைத்தொழில் கற்பதன் மூலம் தனக்கென வருமானத்தை உருவாக்கிக் கொண்டு தனது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கும் 48 வயதிலும் கல்வியைக் கற்று சுயதொழில் தொடங்கி முன்னேற முடியும் என்பதற்கும் ஆண்டிபட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று இன்று தொழில் முனை வோராக உள்ள அமுதாவே சான்றாக உள்ளார். மேலும் அமுதா புதிய நிறுவனங்களை தொடங்கி மென் மேலும் வளர்ந்து பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும் என பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சிறப்பாக தொழிற் பயிற்சி மேற்கொ ண்ட 19 மாணவிகளுக்கு தொழிற்திறன் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
தொழிற்பயிற்சி மேற்கொண்டதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அமுதா தெரிவித்ததாவது:-
2012 ஆம் ஆண்டு எனது கணவர் மாரடைப்பால் மரணமடைந்தார். உறவினர் உதவியால் தையல் தொழில் கற்று அதன் மூலம் மாதம் 3 ஆயிரம் வரை மாத வருமானம் கிடைத்தது. ஆண்டிபட்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் பற்றி அறிந்து அங்கு தொழிற்திறன் பயிற்சி கற்றதன் காரணமாக கனரா வங்கி மூலம் ரூ.75 ஆயிரம் கடன் உதவி பெற்று தொழிலை சிறப்பாக நடத்தி இதன் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. என் வாழ்க்கை தரத்தை உயர்த்திய தமிழ்நாடு அரசுக்கும், ஆண்டிபட்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தார்.
- வேகமாக சென்ற டிராக்டர் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது தொழிலாளி தவறி விழுந்தார்.
- டயரில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சின்னமனூர்:
சின்னமனூரை சேர்ந்த வர் குப்பமுத்து(42). இவர் சுமைதூக்கும் கூலித்தொழில் செய்து வருகிறார். சுக்கா ம்பட்டி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக்கு வேலைக்காக டிராக்டரில் சென்றார்.
கண்ணன் என்பவர் டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். வேகமாக சென்ற டிராக்டர் பள்ள த்தில் ஏறி இறங்கியபோது குப்பமுத்து தவறி விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரம் அவர் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து குப்பமுத்துவின் மனைவி பவித்ரா ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






