என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
சின்னமனூரில் டிராக்டர் மோதி தொழிலாளி பலி
- வேகமாக சென்ற டிராக்டர் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது தொழிலாளி தவறி விழுந்தார்.
- டயரில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சின்னமனூர்:
சின்னமனூரை சேர்ந்த வர் குப்பமுத்து(42). இவர் சுமைதூக்கும் கூலித்தொழில் செய்து வருகிறார். சுக்கா ம்பட்டி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக்கு வேலைக்காக டிராக்டரில் சென்றார்.
கண்ணன் என்பவர் டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். வேகமாக சென்ற டிராக்டர் பள்ள த்தில் ஏறி இறங்கியபோது குப்பமுத்து தவறி விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரம் அவர் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து குப்பமுத்துவின் மனைவி பவித்ரா ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






