என் மலர்
நீங்கள் தேடியது "கோவிலில் கும்பாபிஷேகம்"
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
- அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் உத்திர காவிரி ஆற்றங்கரையில் கெங்கை யம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சுயம்பு முனீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த 2-ம் தேதி காலை 5 மணிக்கு ஆசார்ய வசணம், புண்யாஹுதி விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கி யாகசாலை பூஜையானது கடந்த 4 நாட்களில் ஏழு கால பூஜைகளுடன் நடைபெற்றது. மேலும் யாக சாலையில் 508 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருந்தது.
யாகசாலை பூஜைக ளுக்கென பிரத்தி யேகமாக வரவழை க்கப்பட்ட 1008 வகையான ஹோம திரவியங்களும் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் முனிஸ்வரருக்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனையடுத்து மூல விக்ரகத்திற்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. மேலும் பக்தர்கள் மீது கலசபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது.
விழாவில் ஒடுகத்தூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக் திரண்டு வந்தனர். மேலும் பக்தருக்கு கோவில் நிர்வாகத்தின் மூலம் காலை முதலே அன்னதானம் வழங்கப்பட்டது.
- 2ம் நாள் நிகழ்ச்சியாக இன்று மங்கல இசை, கணபதி பூஜை மற்றும் பாலிகை பூஜை, யாகசாலை பூஜை, 2ம் கால தியாக தீப ஆராதனை நடைபெற்றது.
- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி காந்தி மைதான வீதியில் உள்ள பிள்ளைச் செல்வம் முத்துமாரியம்மன் திருக்கோவிலில் திருக்குட பன்னீராட்டு பெரும் சாந்தி பெருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று மங்கள இசை உடன் நவக்கிரக பூஜைகள் ஹோமங்கள் தெடங்கப்பட்டு அம்மனுக்கு தீப ஆராதனை நடத்தப்பட்டது.
2ம் நாள் நிகழ்ச்சியாக இன்று மங்கல இசை, கணபதி பூஜை மற்றும் பாலிகை பூஜை, யாகசாலை பூஜை, 2ம் கால தியாக தீப ஆராதனை நடைபெற்றது. 3ம் நாள் நிகழ்ச்சியாக நாளை கும்பாபிஷேகமும், ஆராதனையும், அன்னதானமும் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் அருணாசேகர் மற்றும் கவுரவ தலைவர் மனோகரன் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் செய்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.






