என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடுகத்தூர் முனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம்
    X

    ஓடுகத்தூர் முனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம்

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் உத்திர காவிரி ஆற்றங்கரையில் கெங்கை யம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சுயம்பு முனீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 2-ம் தேதி காலை 5 மணிக்கு ஆசார்ய வசணம், புண்யாஹுதி விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கி யாகசாலை பூஜையானது கடந்த 4 நாட்களில் ஏழு கால பூஜைகளுடன் நடைபெற்றது. மேலும் யாக சாலையில் 508 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருந்தது.

    யாகசாலை பூஜைக ளுக்கென பிரத்தி யேகமாக வரவழை க்கப்பட்ட 1008 வகையான ஹோம திரவியங்களும் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் முனிஸ்வரருக்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதனையடுத்து மூல விக்ரகத்திற்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. மேலும் பக்தர்கள் மீது கலசபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது.

    விழாவில் ஒடுகத்தூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக் திரண்டு வந்தனர். மேலும் பக்தருக்கு கோவில் நிர்வாகத்தின் மூலம் காலை முதலே அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×