என் மலர்tooltip icon

    தேனி

    • அரசு ஊழியர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது.
    • குழந்தைகள் கவனிப்பு மையம் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அரசு ஊழியர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட கவனிப்பு மையத்தினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அரசின் சார்பில் மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு விடுப்பு முடிந்து பணியில் சேரும், ஒரு குடும்பத்தில் கணவன். மனைவி அல்லது இருவரும் அரசு ஊழியர்களாக பணிபுரியும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகளை கவனித்து கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது.

    இந்த சூழ்நிலையை தவிர்ப்பதற்காக, மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் என மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அரசு பெண் ஊழியர்களின் நலன் கருதி, அவர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் பராமரிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 3-வது தளத்தில் குளிரூட்டப்பட்ட மற்றும் தொலைக்காட்சி வசதியுடன் கூடிய குழந்தைகள் கவனிப்பு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதக்கட்டணமாக ரூ.500 மட்டும் செலுத்தப்பட வேண்டும்.

    குழந்தைகள் கவனிப்பு மையம் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். குழந்தைகளுக்கு தொலைக்காட்சி மூலம் அறிவு சார்ந்த குறும்படங்கள், விளையாட்டு குறும்படங்கள் ஒளிபரப்பப்படும். மேலும், கல்வி கற்பிக்கும் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்களுடன், குழந்தைகளை கண்காணித்துக் கொள்ள 2 அங்கன்வாடி பணியாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மையத்தில் குழந்தைகளுக்கு பால் மற்றும் பழங்கள் தினசரி வழங்கப்பட உள்ளது. வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு சுழற்சி முறையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடி மருத்துவ தேவைக்காக, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் மருத்துவரை அழைத்து மருத்துவம் மேற்கொள்ளவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

    • 2ம் நாள் நிகழ்ச்சியாக இன்று மங்கல இசை, கணபதி பூஜை மற்றும் பாலிகை பூஜை, யாகசாலை பூஜை, 2ம் கால தியாக தீப ஆராதனை நடைபெற்றது.
    • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி காந்தி மைதான வீதியில் உள்ள பிள்ளைச் செல்வம் முத்துமாரியம்மன் திருக்கோவிலில் திருக்குட பன்னீராட்டு பெரும் சாந்தி பெருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று மங்கள இசை உடன் நவக்கிரக பூஜைகள் ஹோமங்கள் தெடங்கப்பட்டு அம்மனுக்கு தீப ஆராதனை நடத்தப்பட்டது.

    2ம் நாள் நிகழ்ச்சியாக இன்று மங்கல இசை, கணபதி பூஜை மற்றும் பாலிகை பூஜை, யாகசாலை பூஜை, 2ம் கால தியாக தீப ஆராதனை நடைபெற்றது. 3ம் நாள் நிகழ்ச்சியாக நாளை கும்பாபிஷேகமும், ஆராதனையும், அன்னதானமும் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் அருணாசேகர் மற்றும் கவுரவ தலைவர் மனோகரன் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் செய்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வாரம் நாகேந்திரனின் மோட்டார் சைக்கிளை பிரகாஷ் வாங்கி சென்று பழுதாக்கி கொடுத்துள்ளார்.
    • நாகேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் முத்தையர் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் நாகேந்திரன் (வயது27). இவர் கடந்த 3 வருடங்களாக ஊர்க்காவல்படை வீரராக பணிபுரிந்து வந்தார். இவரும் தேவக்கனி (23) என்பவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இவரும் புதூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவரும் நண்பர்கள். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா சமயத்தில் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்து விட்டார். தற்போது கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகேந்திரனின் லேப்டாப்பை பிரகாஷ் வாங்கி சென்றார். பின்னர் அதனை பழுதாக்கி திருப்பி கொடுத்தார். இதனால் நாகேந்திரன் சத்தம் போட்டுள்ளார். அதன்பின் கடந்த வாரம் நாகேந்திரனின் மோட்டார் சைக்கிளை பிரகாஷ் வாங்கி சென்று பழுதாக்கி கொடுத்துள்ளார்.

    இதனால் லேப்டாப் மற்றும் மோட்டார் சைக்கிள் பழுதாகி கொடுத்தற்கான தொகையை பிரகாசிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    நேற்று இரவு நாகேந்திரனுக்கு போன் செய்து பணம் தருவதாக பிரகாஷ் கூறி உள்ளார். இதனால் மோட்டார் சைக்கிளில் நாகேந்திரன் வெளியே வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரகாஷ் அவரை பல இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் நாகேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதன்பின் தான் வெட்டிய அரிவாளுடன் கூடலூர் டவுன் வடக்கு போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் சரண் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை.
    • கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் தடை இல்லை.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கியில் ஆளும் கம்யூனிஸ்ட்டு அரசை எதிர்த்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இடுக்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கிய பிரச்சினை உள்பட பல்வேறு விஷயங்களில் மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இதனையொட்டி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும். வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை. இதேபோல்தற்போது சபரிமலையில் ஆவணி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. எனவே கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் தடை இல்லை. மற்ற அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், பாளையம், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். முழு அடைப்பு போராட்டம் காரணமாக வாகனங்கள் இயக்கப்படாததால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை.

    இதேபோல் கேரளாவுக்கு வந்த சுற்றுலா மற்றும் பிற வாகனங்கள் மாவட்ட எல்லையிலேயே திருப்பி விடப்பட்டன. இரு மாநில எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. எல்லைப்பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் “நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்” விழிப்பு ணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
    • தொழிற்பயிற்சி மேற்கொ ண்ட 19 மாணவிகளுக்கு தொழிற்திறன் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" விழிப்பு ணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் பேசிய தாவது:

    கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுத்து அவர்க ளுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் நவீன தொழிற்பயிற்சி காலத்தில் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இனியில்லை என ஒத்துக்கொள் என்ற பழமொழிக்கேற்ப பெண்கள் அனைவரும் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

    தமிழக அரசின் மூலம் பெண்களின் வேலை வாய்பை அதிகரிக்கவும் பெண்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்து வதற்காகவும் பெண்களு க்கென தனி தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க ப்பட்டு பல்வேறு சிறப்பு தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஆண்டிபட்டி பேரூராட்சி பாப்பம்மாள்புரம் பகுதியில் வசித்துவரும் அமுதா என்ற பெண் தனது கணவனை இழந்து தனது 2 ஆண் குழந்தைகளுடன் தனக்கு தெரிந்த அடிப்படை தையல் தொழிலை சிறிய அளவில் மேற்க்கொண்டு தனது குழந்தைகளை படிக்க வைத்துள்ளார்.

    அமுதா கடந்த 2017-ம் ஆண்டு தனது 48 வது வயதில் ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சூவிங் டெக்னாலஜி பிரிவில் சேர்ந்து நவீன தொழில்நுட்ப தையல் பயிற்சி 1 வருட பயிற்சி பெற்றார்.

    கல்வி பயின்ற சான்றிதழ் மூலம் மாவட்ட தொழில் மையத்தை அணுகி கனரா வங்கி மூலம் ரூ.75,000/- கடன் உதவி பெற்று சிறிய அளவில் நடத்தி வந்த தையல் தொழில் இன்று 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கும் அளவிற்கு இந்த நவீன தொழிற் பயிற்சி கல்வி மாற்றியுள்ளது.

    கைத்தொழில் கற்பதன் மூலம் தனக்கென வருமானத்தை உருவாக்கிக் கொண்டு தனது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கும் 48 வயதிலும் கல்வியைக் கற்று சுயதொழில் தொடங்கி முன்னேற முடியும் என்பதற்கும் ஆண்டிபட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று இன்று தொழில் முனை வோராக உள்ள அமுதாவே சான்றாக உள்ளார். மேலும் அமுதா புதிய நிறுவனங்களை தொடங்கி மென் மேலும் வளர்ந்து பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும் என பாராட்டினார்.

    அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சிறப்பாக தொழிற் பயிற்சி மேற்கொ ண்ட 19 மாணவிகளுக்கு தொழிற்திறன் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தொழிற்பயிற்சி மேற்கொண்டதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அமுதா தெரிவித்ததாவது:-

    2012 ஆம் ஆண்டு எனது கணவர் மாரடைப்பால் மரணமடைந்தார். உறவினர் உதவியால் தையல் தொழில் கற்று அதன் மூலம் மாதம் 3 ஆயிரம் வரை மாத வருமானம் கிடைத்தது. ஆண்டிபட்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் பற்றி அறிந்து அங்கு தொழிற்திறன் பயிற்சி கற்றதன் காரணமாக கனரா வங்கி மூலம் ரூ.75 ஆயிரம் கடன் உதவி பெற்று தொழிலை சிறப்பாக நடத்தி இதன் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. என் வாழ்க்கை தரத்தை உயர்த்திய தமிழ்நாடு அரசுக்கும், ஆண்டிபட்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தார்.

    • வேகமாக சென்ற டிராக்டர் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது தொழிலாளி தவறி விழுந்தார்.
    • டயரில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூரை சேர்ந்த வர் குப்பமுத்து(42). இவர் சுமைதூக்கும் கூலித்தொழில் செய்து வருகிறார். சுக்கா ம்பட்டி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக்கு வேலைக்காக டிராக்டரில் சென்றார்.

    கண்ணன் என்பவர் டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். வேகமாக சென்ற டிராக்டர் பள்ள த்தில் ஏறி இறங்கியபோது குப்பமுத்து தவறி விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரம் அவர் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து குப்பமுத்துவின் மனைவி பவித்ரா ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குடி பழக்கத்துக் அடிமையான வாலிபருக்கு இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்துள்ளது.
    • தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து மயங்கினார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்தவர் கணபதி (வயது42). திருமண மாகாதவர். குடி பழக்கத்துக் அடிமையானவர். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்துள்ளது.

    பெயிண்டிங் வேலை பார்த்து வந்த கணபதிக்கு சம்பவத்தன்று சீலையம்பட்டி சமத்துவ புரத்தில் வேலை பார்த்தபோது வலிப்பு ஏற்பட்டது. அப்போது தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து விட்டார்.

    தேனி க.விலக்கு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் கருப்புத்துரை கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்க தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    • தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை மானிய விலையில் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தேனி:

    தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் பிரபு ராஜா தலைமையில் தேனி மாவட்ட தலைவர் தங்கராஜ், தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக் குமார், பெரியார்-வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்காட்சி கண்ணன் மற்றும் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்க தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில், தமிழ கத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்கள் ரத்து, விலையில்லா மின்சாரம், உழவர் சந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு செய்து வருகிறது. அதேவேளையில் தென்னை விவசாயிகளின் தீராத பிரச்சனைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். இதில் தமிழக மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை மானிய விலையில் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் பொது மக்களின் ஆரோக்கியமும் பெருகும், விவசாயமும் மேம்படும். அதுபோல கிராம பொருளாதரத்தை மேம்படுத்தவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், மரம் ஏறும் தொழிலாளர்களின் வருமானத்தை கூட்டவும் தமிழக அரசு தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.

    விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்த உரத்தின் விலை தற்போது 4 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் தேங்காயின் விலையோ ஒரு மடங்கு கூட உயரவில்லை. இதனால் விவசாயிகளுக்கு உரம், ஆட்கள் கூலி, பெட்ரோலிய பொருட்க ளின் விலை உயர்வு போன்றவற்றால் உற்பத்தி செலவு பெருமளவு கூடி உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு கொண்டிரு க்கிறார்கள்.

    இதே நிலை நீடித்தால் நாட்டில் உணவு பஞ்சம் வருவதை யாராலும் தடுக்க முடியாது. எனவே தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து ஆவண செய்யு மாறு லட்சக்கணக்கான தென்னை சாகுபடி யாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டிருந்தது.

    • பைக் மீது கார் மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
    • புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவதானப்பட்டிடு

    கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பையை சேர்ந்தவர் பாண்டியராஜன்(வயது23). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது உறவினர் ராணி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வத்தலகுண்டு-கொடைக்கானல் சாலையில் வந்து கொண்டு இருந்தார்.

    டம்டம் பாறை அருகே வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் 2 பேரும் காயம் அடைந்தனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கேரள அரசு அணையின் உறுதி தன்மை குறித்து அடிக்கடி சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.
    • மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    பருவநிலை மாறுபாடுகளின்போது முல்லைப்பெரியாறு அணையின் உறுதி தன்மை பராமரிப்பு பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய மத்திய தலைமை கண்காணிப்புக்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த குழுவுக்கு உதவியாக துணை மத்திய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த 2 குழுக்களும் உச்சநீதிமன்றத்தில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பார்கள். அதன்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கேரள அரசு அணையின் உறுதி தன்மை குறித்து அடிக்கடி சந்தேகம் கிளப்பி வருகின்றனர். ஆனால் மத்திய குழுவினர் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என அறிக்கை சமர்பித்துள்ளனர். கடந்த மே மாதம் 15-ந் தேதி மத்திய கண்காணிப்பு துணைக்குழு ஆய்வு நடத்தியது.

    இந்த நிலையில் இன்று தலைவர் சதீஸ்குமார் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசு சார்பில் அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் கட்டப்பணை நீர் பாசனத்துறை செயற்பொறியாளர் அனில்குமார், உதவி செயற்பொறியாளர் அருண் ஆகியோர் குழுவில் இடம் பெற்றனர். இந்தக்குழுவினர் மெயின் அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகுகள் மற்றும் தண்ணீர் கசிவு பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும் மதகுகளையும் இயக்கிப்பார்த்து நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து சோதனையிட்டனர். பின்னர் மாலையில் குமுளி 1-வது மைலில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர். இதன் அறிக்கைகள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    • நோய் கொடுமை மற்றும் தொழில் நஷ்டத்தால் வாழ்க்கையில் வெறுப்படைந்து 2 முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் :

    உத்தமபாளையம் அருகே களிமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது60). குடும்பத்துடன் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். மது போதைக்கு அடிமையான தால் குடும்பத்தினர் கண்டித்தனர். மேலும் தொழிலிலும் கவனம் செலுத்த முடிய வில்லை. இதனால் விரக்தி அடைந்த கேசவன் விஷம் குடித்து மயங்கினார்.

    அக்கம்பக்கத்தி னர் அவரை உத்தமபாளை யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கோம்பை அருகே பண்ணை புரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 83). நோய் கொடுமையால் அவதி பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் மனம் வெறுத்து விஷம் குடித்து மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அங்கன்வாடி மையங்கள், நூலகங்கள், சத்துணவு மையங்களிலும் ஆய்வு மேற்கொ ண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, சிலமலை, நாகலாபுரம், மற்றும் ராசிங்காபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    உப்புக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி களையும், 15வது நிதிக்குழு மானியத்திட்ட த்தின் கீழ் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.49.90 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளையும்,

    டொம்பு ச்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.60 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தி கூடம் அமைக்கும் பணிகளையும், சிலமலை ஊராட்சி மல்லிங்காபுரம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.55 லட்சம் மதிப்பீட்டில் சிமிண்ட் சாலை மற்றும் சமத்துவ மயானத்தில் சுற்றுச்சுவர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 4 லட்சம் மதிப்பீட்டில் குழாய்கள் பதிக்கும் பணிகளையும், நாகலாபுரம் ஊராட்சியில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிய 2 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளையும்,

    மேலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இணைய தளம் வரிவசூல் செய்யும் பணிகளையும்,

    ராசிங்காபுரம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி சமையல் அறை கட்டிடம் அமைக்கும் பணி களையும் பார்வையிட்டார். ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் மதிய உணவு வழங்கப்படுவதையும், உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், அங்க ன்வாடி மையங்கள், நூலக ங்கள், சத்துணவு மையங்க ளிலும் ஆய்வு மேற்கொ ண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

    ×