என் மலர்
தேனி
- பைக், ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடைபெற்றது.
- இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே போடியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). தேனி மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தினேஷ்குமார் படுகாயம் அடைந்து போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டது. இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்ப திவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
போடியை சேர்ந்தவர் சிந்தாமணி (70). ராசிங்கா புரம்-மல்லிங்காபுரம் சாலையில் நின்று கொண்டி ருந்தார். அப்போது ஒரு ஜீப் பின்பக்கமாக எடுத்த போது எதிர்பாராத விதமாக சிந்தாமணி மீது மோதியது. இதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சடையாண்டி (39). இவர் தனது நண்பர் முத்துவேல் (42) என்பவருடன் பஸ்நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணன் என்பவர் எதிரே ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
பெரியகுளத்தை சேர்ந்தவர் ராமன் (60). இவரது மனைவி சரஸ்வதி (52). இவர்கள் பழைய இரும்பு சாமான்கள் மற்றும் காலி பாட்டில்கள் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று வத்தலக்குண்டு-பெரிய குளம் சாலையில் பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே நின்று கொண்டி ருந்தபோது அவ்வழியாக வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு பின்னர் மேல்சிகி ச்சைக்காக தேனி மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
- எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி உள்ளது. தேனி-ஆண்டிபட்டி மெயின்ரோ ட்டில் இருந்து சுமார் ½ கி.மீ. தூரத்தில் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியில் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராள மான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் தார் சாலை பெயர்ந்து கற்கள் காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகளின் டயர் அடிக்கடி பஞ்சர் ஆகிறது. மேலும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
- தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை ப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி யில் 14707 ஏக்கர் நிலத்தில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது. அவ்வ ப்போது கண்ணாமூச்சி காட்டும் மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் 119.35 அடியாக குறைந்து ள்ளது. 95 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.56 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.70 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- இந்த கண்மாய் நீரை சார்ந்து இப்பகுதியில் நெல், சோளம், மக்காச்சோளம், தென்னை மற்றும் பல்வேறு காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு வருகிறது.
- சுமார் 5 சதுர கி.மீ பரப்பளவு உள்ள கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு சிறு குட்டையாக காட்சி காட்சியளித்து வருவதால் விவசாயிகள் வேதனையடை ந்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் மீனாட்சியம்மன் கண்மாய் அமைந்துள்ளது. சுமார் 5 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மீனாட்சிபுரம் அருகே அமைந்திருந்தாலும் அம்மா பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்டது.
தற்போது தமிழ்நாடு மீன்வளத்துறை கட்டு ப்பாட்டில் மீன் குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. தினமும் இந்த கண்மாயி லிருந்து சுமார் 750 கிலோ முதல் 1 டன் வரை கெண்டை, கெளுத்தி, கட்லா, ரோகு போன்ற மீன்கள் பிடிக்கப்பட்டு வெளியூர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் இந்த கண்மாயைச் சுற்றிலும் அயல்நாட்டு பறவைகளான பெலிக்கன், கரண்டி மூக்கன், கொக்கு சென்நாரை, கருநாரை, மீன் கொத்தி பறவைகள், நீர்காகம் போன்ற பல்வேறு பறவை இனங்கள் இன ப்பெருக்கம் செய்து வருகிறது.
இப்பகுதியில் உள்ள மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்ரகாளி புரம், விசுவாச புரம், டொம்புச்சேரி போன்ற கிராமங்களை சுற்றியுள்ள சுமார் 5000 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களின் முக்கிய நீர் பாசனத்திற்காக இந்த கண்மாய் நீர் பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.
இந்த கண்மாய் நீரை சார்ந்து இப்பகுதியில் நெல், சோளம், மக்காச்சோளம், தென்னை மற்றும் பல்வேறு காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு வருகிறது.
தற்போது போடிநாய க்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தென்மே ற்கு பருவ மழை பொய்த்து விட்டதால் முற்றிலும் மழை இல்லாமல் உள்ளது. இதனால் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது. எனவே கோடை காலம் முடிந்தும் இன்னும் வெப்பமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு ஆடுக ளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. சுமார் 5 சதுர கி.மீ பரப்பளவு உள்ள கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு சிறு குட்டையாக காட்சி காட்சியளித்து வருவதால் விவசாயிகள் வேதனையடை ந்துள்ளனர்.
6 அடி ஆழத்திற்கு மேல் நீர் வற்றியதால் மதகுகள் வழியாக விவசாயத்திற்கு கண்மாய் நீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே இப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக இந்த கண்மாய் நீர் வற்றி விவ சாயம் பாதிக்கப்பட்டு ள்ள தால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
- தற்போது போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதியில் மழை இன்றி வறண்ட சூழ்நிலை ஏற்பட்டு கடுமையான வெப்பநிலை நிலவுவதால் போதிய தண்ணீர் வசதி இன்றி செடிகள் கருகி வருகின்றன.
- வருகின்ற 29ஆம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை காரணமாக தமிழகத்தில் பூக்கள் விலை தற்போது அதிகரித்து வருகிறது.
போடி:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் மஞ்சள் செவ்வந்தி மற்றும் மாட்டுச் செவ்வந்தி என்று அழைக்கக்கூடிய சிவப்பு செவ்வந்தி பூக்கள் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதியில் மழை இன்றி வறண்ட சூழ்நிலை ஏற்பட்டு கடுமையான வெப்பநிலை நிலவுவதால் போதிய தண்ணீர் வசதி இன்றி செடிகள் கருகி வருகின்றன.
மேலும் செடியில் பூத்த மஞ்சள் செவ்வந்தி மற்றும் சிவப்பு செவ்வந்திப் பூக்கள் கடுமையான வெயில் காரணமாக வெப்பத்துடன் காற்று பலமாக வீசுவதால் செடியிலேயே வாடி கருகி உதிர்ந்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் மன வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் வருகின்ற 29ஆம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை காரணமாக தமிழகத்தில் பூக்கள் விலை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்ற மஞ்சள் செவ்வந்தி மற்றும் சிவப்பு செவ்வந்தி பூக்கள் தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை விலை அதிகரித்து கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஓணம் பண்டிகை வரை விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் தீப்பந்தங்களை ஏற்றியும் சத்தம் எழுப்பியும் புலிகளை விரட்ட முயன்றும் 3 புலிகளும் கண்டுகொள்ளாமல் அதே இடத்திலேயே இருந்தது.
- புலிகள் நடமாட்டத்தை நிரந்தரமாக கட்டுபடுத்தினால் மட்டுமே குடியிருப்பு பகுதியில் அச்சமின்றி வாழ முடியும்
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை உபரி நீர் செல்லும் வல்லக்கடவு, வண்டிபெரியாறு கரையோரப்பகுதிகளில் குடியிருப்புகள், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளன. இந்த பகுதியில் தாய் மற்றும் 2 குட்டிகள் என 3 புலிகள் சுற்றித் திரிந்தன.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் தீப்பந்தங்களை ஏற்றியும் சத்தம் எழுப்பியும் புலிகளை விரட்ட முயன்றனர். ஆனால் 3 புலிகளும் கண்டுகொள்ளாமல் அதே இடத்திலேயே இருந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து பட்டாசு வெடித்தனர். அந்த சத்தத்தை கேட்டு 3 புலிகளும் வனப்பகுதிக்குள் சென்றது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், புலிகள் நடமாடும் இடம் பெரியாறு அணை உபரி நீர் செல்லும் பகுதியாகும். வண்டி பெரியாறு, பீர்மேடு, குமுளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புலிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கால்நடைகளை அடித்து கொன்று வருகிறது.
இதனால் குடியிருப்பு வாசிகள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் புலிகளை கண்காணித்து வந்தாலும், பொதுமக்களின் அச்சம் குறையவில்லை. புலிகள் மீண்டும் வர வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். இரவில் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புலிகள் நடமாட்டத்தை நிரந்தரமாக கட்டுபடுத்தினால் மட்டுமே குடியிருப்பு பகுதியில் அச்சமின்றி வாழ முடியும் என்றனர்.
- அரசரடி, வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது.
- மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும்.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு நீர்மட்டம் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசரடி, வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 47.63 அடியாக சரிந்துள்ளது. இதனால் முதல்போக சாகுபடி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.50 அடியாக உள்ளது. 83 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.99 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- 248-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டது.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் வகையில் வேலைவாய்ப்புத்துறை மற்றும் மகளிர் திட்டத்தின் வாயிலாக பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுனர்களை தேர்வு செய்யவுள்ளனர். பல திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மாதம் கடைசி வெள்ளிக் கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து மாதாந்திர வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று தங்கள் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 2858 மாணவர்கள் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்தனர். அதில் 317 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கபட்டுள்ளது. 248-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டது.
இதில் நகராட்சி தலைவர் சுமிதா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல், எண்டப்புளி ஊராட்சிமன்ற தலைவர் சின்னபாண்டி, தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஐசக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அணி, அணியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னமனூர்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கி ணங்க மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அணி, அணியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி தேனி முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் தலைமையில் மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் பிச்சைக்கனி முன்னிலையில் சின்னமனூர் நகர அ.தி.மு.க. சார்பாக 25 பஸ்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுரை மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றனர்.
சின்னமனூர் நகர அவைத்தலைவர் ராமர், மாவட்ட பிரதிநிதி மதிவாணன், வக்கீல் பிரிவு பொறுப்பாளர் ஜெகன்ராஜ், நகர்மன்ற தலைவர், நகர கிளைச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
- வீட்டில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே வடபுதுப்பட்டியை சேர்ந்தவர் காசிராஜ்(67). இவருக்கு குபேரன்நகரில் சொந்தவீடு உள்ளது. அந்த வீட்டின் கீழ்தளத்தில் சிவகாசி வடமலாபுரம் பகுதிைய சேர்ந்த நாச்சியார்கண்ணன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.
மேல்தளத்தில் காசிராஜ் அவ்வப்போது தங்குவதற்காக சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டுக்கு சென்ற போது வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கதவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.
மேல்தளத்திலும் இதேபோல் பொருட்கள் சிதறிகிடந்தன. ஆனால் வீட்டில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- நண்பருடன் அடிக்கடி ஒன்றாக மது குடித்து வந்தனர்.
- இந்தநிலையில் முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு கருப்பையாவை சிமிண்ட் கல்லால் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தினார்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் கருப்பையா(23). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர் தினேஷ். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடித்து வந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தினேஷ் கருப்பையாவை தாக்க முற்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது தாயிடம் கருப்பையா கூறியுள்ளார். இந்தநிலையில் தினேஷ் முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு கருப்பையாவை சிமிண்ட் கல்லால் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தினார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை விலக்கிவிட்டனர். தினேஷ் கருப்பையாவிடம் கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் தினேசை கைது செய்தனர். காயமடைந்த கருப்பையா உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- பணத்தை திருப்பி தராமலும், தற்போது தங்கியுள்ள வீட்டை தனது பெயரில் எழுதி வைக்ககோரி பிரச்சினை செய்துள்ளார்.
- படுகாயமடைந்த மூதாட்டியை கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கூடலூர்:
கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் ராசு மனைவி தேனம்மாள்(75). இவரது உறவினர் ஜீவா(56). இவர் தேனம்மாளின் வீட்டில் குடியிருந்து வருகிறார். அவரிடம் ரூ.2லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பி தராமலும், தற்போது தங்கியுள்ள வீட்டை தனது பெயரில் எழுதி வைக்ககோரி பிரச்சினை செய்துள்ளார்.
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவா, பசுபதி, இலக்கியா, ஜெயச்சந்திரன் ஆகியோர் தேனம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஜீவா அரிவாளால் தேனம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து ஜீவாவை கைது செய்தனர்.






