என் மலர்
நீங்கள் தேடியது "A gang of scythes"
- கடந்த பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த போது அடக்க முயன்ற வர்களுடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சுரேஷ்கு மார் மகன் சந்துரு (19). இவரது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். கடந்த பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த போது அடக்க முயன்ற சந்துரு, சந்தோஷ், கண்ணன், தினேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு வந்த மேற்படி கும்பல் ஜல்லிக்கட்டு மாட்டை இப்போது அவிழ்த்து விடு. அடக்கி காட்டுகிறோம் என தகராறு செய்தனர். இதனை தட்டிக்கேட்ட சந்துரு மற்றும் அவரது அண்ணன் லிவின்கு மாரை அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த 2 பேரும் பெரிய குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர்.
இதுகுறித்து தேவதா னப்பட்டி போலீஸ் நிலைய த்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.






