என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 female students missing"

    • முதலாம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிள் மாயமானார்கள்.
    • போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள கோட்டைப்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி மகள் கவுசல்யா(17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல தயார்நிலையில் இருந்தார். சம்பவத்தன்று குடும்பத்தினர் அனைவரும் விஷேசத்திற்கு சென்றனர். மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது மகள் கவுசல்யாவை காண வில்லை. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    போடி அருகில் உள்ள ஜே.கே.பட்டி அய்யனார் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி(21). இவர் போடியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று டி.சி வாங்கி வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது தாய் அமிர்தவள்ளி போடி டவுன் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை ேதடி வருகின்றனர்.

    ×